Home இரகசியகேள்வி-பதில் எனக்கு மார்பகக் காம்புகள் உள்ளடங்கிக் காணப்படுகின்றன. இது என்னை ரொம்பவும் கவலைக் குள்ளாக்குகிறது?

எனக்கு மார்பகக் காம்புகள் உள்ளடங்கிக் காணப்படுகின்றன. இது என்னை ரொம்பவும் கவலைக் குள்ளாக்குகிறது?

131

நான் கடந்த பத்து ஆண்டுகளாக சுய இன்பத்தை அனுபவித்து வருகின்றேன். எனக்கு வருகின்ற தை மாதத்தில் திருமணம் ஆக இருக்கின்றது. சில விளம்பரங்களில்- “சுய இன்பத்தை அனுபவித்து வந்தால் எதிர்காலத்தில் அவர்களுக்கு தெரியாமலே அவர்களது உடம்பில் நரம்பு தளர்ச்சி வந்துவிடும். இதனை இவர்கள் திருமணம் ஆகி தனது மனைவியை செக்ஸில் திருப்தி படுத்த முடியாமல் அல்லல் படும் போதுதான் உணர்வார்கள்”- என்று வெளியாகி இருந்ததை படித்தேன். அதிலிருந்து எனக்கு மனக் குழப்பமாகவே உள்ளது. எனக்கு மனைவியை எதிர் காலத்தில் திருப்திபடுத்த முடியாத நிலை ஏற்படுமா?

முதலில் ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள். சுய இன்பம் செய்வத னால் எந்த தீங்கும் வரவே வராது. நம்புங்கள். விளம்பரங்களில் வந்திருக்கும் செய்திகள் எல்லாம் அப்பட்டமான பொய். அவர்கள் குறிப்பிடுவது போல சுய இன்பம் செய்தவர்களுக்கு எல்லாம் நரம்பு தளர்ச்சி வருமென்றால்- இந்த நாட்டில் 99 சதவீத ஆண்கள் எல்லோரும் நரம்பு தளர்ச்சியுற்றவர்களாகத்தான் இருப்பார்கள் சுய இன்பம் இயற்கையானது இயல்பானது. இதனை அளவோடு வைத்துக் கொள்ள வேண்டும் அவ்வளவு தான். இதனால் மனைவியை திருப்தி படுத்த முடியாது என்றெல்லாம் சொல்வது பணம் பறிப்பதற்காக சில போலி டாக்டர்கள் காட்டுகின்ற மோடி மஸ்தான் வித்தைகள். இளைஞர்களுக்கு இக்காலத்தில் திருமணம் ஆக முப்பது வயதிற்கு மேலாகி விடுகின்றது. இத்தகைய சூழ்நிலையில் இவர்களுக்கு சுய இன்பம் என்பது தவிர்க்க முடியாதது மட்டுமில்லை- வடிகாலாகவும் இருக்கின்றது என்பதே நிஜம்.

பத்தாண்டுகளாக தனித்து இருந்ததால் சுய இன்பத்தை அனுபவித்திருந்தீர்கள். போதும். இப்போதுதான் உங்களுக்கு திருமணம் நடக்க இருக்கிறதல்லவா? இனி இன்பகரமாக இல்லறத்தில் ஈடுபட்டு மகழ்ச்சியை அனுபவியுங்கள். உங்களுக்கு எந்த உடல் நல பாதிப்பும் வரவே வராது. சுய இன்பம் தீங்கானதில்லை என்பதை அறிவியல் பூர்வமாக நரம்பியல் நிபுணர்களே நிருபித்துள்ளனர் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்.

நான் நிறை மாத கர்ப்பம். கர்ப்ப காலம் முழுவதும் அவ்வப்போது என் கணவருடன் உடலுறவில் ஈடுபட்டு வந்தேன். இதனால் குழந்தைக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படுமா? எதுவரை உறவில் ஈடுபடலாம்?

கர்ப்ப காலத்தில் உடலுறவில் ஈடுபடுவதால் குழந்தைக்கோ, உங்களுக்கோ எவ்விதத் தீங்கும் நேராது. சில நேரங்களில் உடலுறவில் ஈடுபடுவது பெரியளவில் நன்மை பயக்கும். பிரசவ நாட்கள் தாண்டியும் பிரசவம் ஆகாத பெண்களுக்கு இனிமையான பிரசவத்தை ஆரம்பிக்க ஒரு வழி உடலுறவில் ஈடுபடுவது. குளுக்கோஸ் ஏற்றி, மருந்துகள் மூலம் பிரசவத்தைத் தூண்டுவதை விட, உடலுறவில் ஈடுபடும்போது, விந்தில் உள்ள புரோஸ்டா கிளான்டின் என்ற பொருள் முழுமையான நாட்களான கருப்பையில் படும். அப்போது கருப்பை தூண்டப்பட்டுப் பிரசவ வலி ஆரம்பிக்கும். நிறை மாதம் அடையாத கர்ப்பம் இதனால் பாதிக்கப்படுவதில்லை.

என் வயது 25. இன்னும் சில மாதங்களில் திருமணம் நடக்கவுள்ளது. எனக்கு மார்பகக் காம்புகள் உள்ளடங்கிக் காணப்படுகின்றன. இது என்னை ரொம்பவும் கவலைக் குள்ளாக்குகிறது. இந்நிலையில் திருமணம் செய்து கொண்டால், என்னால் தாம்பத்திய உறவில் திருப்தியாக ஈடுபட முடியுமா? என் பிரச்சினையை எப்படி சமாளிக்கலாம்? கர்ப்பம் தரிப்பதிலோ, தாய்ப்பால் ஊட்டுவதிலோ எனக்கு எதிர்காலத்தில் பிரச்சினைகள் இருக்குமா?

மார்பகக் காம்புகள் உள்ளடங்கியிருப்பது பயப்படக் கூடிய பிரச்சினை இல்லை. வைட்டமின் ஈ எண் ணெய் அல்லது பாதாம் எண்ணெய் கொண்டு மார்பகக் காம்பு களை மசாஜ் செய்து மெல்ல வெளியே எடுத்து விடுங்கள். தொடர்ந்து இந்தப் பயிற்சியை செய்து வர வேண்டும். மருத்துவப் பரிசோதனை மேற் கொண்டு வேறு ஏதேனும் கோளாறுகள் இருக்குமா என்றும் பாருங்கள்.

இதனால் உங்கள் தாம்பத்திய வாழ்க்கை எந்த விதத்திலும் பாதிக்கப் படாது. கவலை வேண்டாம்.

இப்போது உள்ளடங்கியிருக்கும் அவை, நாளை திருமணமாகி, கர்ப்பம் தரித்து, தாய்ப்பால் ஊட்டும் காலத்தில் சாதாரணமாகி விடும்.

டாக்டர் கடந்த மாதம் தற்செயலாக ஒரு விலை மாதிடம் உறவு வைத்துக் கொண்டேன். எனக்கு பால்வினை நோய் வந்திருக்குமோ என்ற அச்சம் இருக்கிறது. இது என் மனைவிக்கும் தொற்றி விடுமோ என்ற சந்தேகமும் படுத்துகிறது. பால்வினை நோயின் அறிகுறிகளை சொல்றீங்களா ப்ளீஸ்..?

விலை மாதிடம் போவதற்கு முன்பு சாதக பாதகங்களையெல்லாம் கொஞ்சம் யோசித்துப் பார்க்க வேண்டும். விலை மாது நோய்களின் உறைவிடமாக இருந்தால் என்ன செய்வீர்கள்? உங்கள் மனைவிக்கும் கொடுப்பீர்கள். இனி குழந்தை பிறந்தால் அதற்கும் போய்ச் சேரும் அல்லவா?

பால்வினை நோய் ஏற்பட்டிருந்தால், பிறப்பு உறுப்புகளில் இருந்து சீழ் வடியும், சிறுநீர் கழிக்கும் போது மோர் மாதிரி திரிதிரியாக வெளியேறும். கூடவே, எரிச்சல், தீயைக் கொளுத்தி உள்ளே வைத்தது மாதிரி இருக்கும்.

அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தோன்றும். மலம் கழிக்கும் போது வலியும் எரிச்சலும் இருக்கும். பிறப்பு உறுப்பில் வலி, இடுப்பு அரையில் நெரிக் கட்டி தோன்றும். உடலில் தடிப்புத் தடிப்பாகத் தோன்றும். தோலில் சிறுசிறு கட்டிகளும், காய்ச்சல், தலைவலி, கண் எரிச்சல், மூட்டுவலி போன்றவை தோன்றும்.

உங்கள் மனைவியிடம் பால் வினை நோய் இருக்கிறதா என்று நேரில் கேட்டு விடாதீர்கள். குட்டு வெளிப்பட்டு குடும்பமே கெட்டு விடும். அவர்களாகவே உங்களிடம் பேச்சு வாக்கில், சிறுநீர் மஞ்சள், பச்சை கலந்த நிறத்தில் வருவதாகவோ, சில சமயம் ரத்தமோ சீழோ கலந்து வருவதாகவோ, அடிவயிற்றில் வலி, பிறப்புறுப்புப் பகுதிகளில் நமைச்சல், எரிச்சல், இரத்தம் வடிதல், உடலுறவின் போது வலி, துர்நாற்றத்துடன் கூடிய திரவச் சுரப்பு இருப்பதாகச் சொன்னால் அது பால்வினை நோயால் ஏற்பட்டிருக்கக் கூடும். உடனே நல்ல நிபுணரை சந்தித்து சிகிச்சை பெற்று விடுங்கள்.

கேள்வி; ‘’எனக்குத் திருமணமாகி ஓராண்டு ஆகிறது. ஆனால் இதுவரை நான் என் கணவருடன் தாம்பத்ய உறவில் ஈடுபடவில்லை. நாங்க்ள முதல் முறை செக்ஸ் வைத்துக் கொள்ள முயன்ற போது, எனக்கு வலித்தது. அன்று முதல் செக்ஸ் என்றாலே அந்த வலிதான் நினைவுக்கு வருகிறது. இதனாலேயே நான் இல்லறத்தில் ஈடுபடாமல் இருக்கிறேன். எனக்கு லூப்ரிகன்ட்ஸ் சரியாகச் சுரப்பதில்லை என்று நினைக்கிறேன். நான் என்ன செய்ய வேண்டும்?’’

பதில்; பி.எஸ். லோகாம்பாள்-பெண்களுக்கான சிறப்பு மருத்துவர்.

‘’உங்களுக்கு உடல் ரீதியாக எந்தப் பிரச்னையும் இல்லை. பொதுவாக, பெண்களுக்கு ஆரம்ப நாட்களில் அந்தப் பயம் இருக்கும்தான். முதல்முறை உடலுறவு கொள்ளும்போது வலியுடன் சிறிய அளவில் ரத்தக்கசிவுகூட இருக்கும். அனால், சிறிது நாட்களுக்குள் எல்லாம் சரியாகிவிடும். உங்கள் வயதுக்கு லூப்ரிகன்ட்ஸ் உடலில் அதிகமாகவே சுரக்கும். உங்கள் பயம்தான் அந்த லூப்ரிகன்ட்ஸை வற்றச் செய்கிறது. எனவே, பயத்தை விட்டாலே பிரச்னை தீர்ந்தது. தக்க மகளிர் நல மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்ளுங்கள்.

கேளவி; எனக்கு வயது 26. எனக்குத் திருமணமாகி 8 மாதங்கள் ஆகின்றன. இதுவரை கருத்தரிக்கவில்லை. பிரீயட்ஸ் இயல்பாக இருக்கிறது. நானும் என் கணவரும் தொடர்ந்து உடலுறவு வைத்துக்கொள்கிறோம். ஆனாலும் கருத்தரிக்காததற்கு என்ன காரணம்? கருத்தரிக்க நான் என்ன செய்யவேண்டும்?

பதில்; டி.நாரயணரெட்டி-செக்ஸாலஜிஸ்ட்

‘’தினமும் செக்ஸ் வைத்துக் கொண்டும் கருத்தரிக்கவில்லை என்பதால், தக்க மருத்துவரை அணுகி முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. கரு உருவாக முதலில் விந்தணுக்களின் அளவு மற்றும் தரம் முக்கியம்.உங்கள் கணவரின் விந்தணுக்களின் வீரியத்தைப் பரிசோதனைச் சாலைகளில் சோதித்து அறிய வேண்டும். உங்களுக்கும் மாதம் தவறாமல் கருமுட்டை வெளியாகிறதா,கர்ப்பபை ஆரோக்யமாக இருக்கிறதா என்றெல்லாம் பரிசோதிக்க வேண்டும். பொதுவாக, ஹார்மோன் கோளாறு காரணமாக கரு முட்டை உருவாவதில் பிரச்னை இருக்கலாம். கரு முட்டை உருவானாலும், கர்ப்ப பைக்கு வந்து சேரும் குழாயில் அடைப்பு இருந்தால் ஆணின் உயிரணு அதனை எட்டிப் பிடிக்க முடியாது. அதனால், கர்ப்பம் தரிக்காமல் இருக்கலாம். மேலும் மேலும் காரணங்களை அடுக்கி உங்களை பயமுறுத்த விரும்பவில்லை. மேற்குறிப்பிட்ட எந்தப் பிரச்னையும் இல்லாமலும் , உங்கள் கருத்தரிப்பு தள்ளிப் போயிருக்கலாம். எனவே, குழம்பிக்கொள்ளாமல் இருவரும் உடனே மருத்துவர்களை ஆலோசிக்கவும்’’.