Home சூடான செய்திகள் 6 மாதங்களாக அடைத்து வைத்து விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 15 வயது சிறுமி

6 மாதங்களாக அடைத்து வைத்து விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 15 வயது சிறுமி

86

பீகார் மாநிலத்தை சேர்ந்த ஒரு தம்பதியர் தங்களது பிள்ளைகளுடன் ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூருக்கு பிழைப்பு தேடி வந்துள்ளனர்.

அங்குள்ள ஷாஸ்திரி நகர் பகுதியில் தங்கி வேலை செய்து வந்தபோது, கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் அவர்களின் 15 வயது மகளை கடத்திச் சென்ற ஒரு நபர், கோட்டா நகரில் உள்ள கேருநாத் என்பவருக்கு 10 ஆயிரம் ரூபாய்க்கு கைமாற்றி விட்டார்.

கடந்த 6 மாதங்களாக டலப்பஸ்தி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அந்தப் பெண்ணை அடைத்து வைத்து, அடித்து, உதைத்து, உணவு அளிக்காமல் பட்டினியாகப் போட்டு சித்ரவதை செய்த கேருநாத், அந்த சிறுமியின் மனதை மாற்றி, பெரிய ஓட்டல்களில் தங்கியிருக்கும் வாடிக்கையாளர்களுக்கு விபசார விருந்து வைத்துள்ளார்.

வேறொரு பெரிய பணக்காரருக்கு அதிக விலைக்கு அந்த சிறுமியை விற்பதற்கான ஏற்பாடுகள் நடந்துவந்த நிலையில், நேற்று காலை கேருநாத்தின் வீட்டு வாயில் கதவு திறந்திருந்த சூழ்நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அந்த சிறுமி, வெளியே ஓடிவந்து, அருகாமையில் உள்ள மசூதியில் இருந்தவர்களிடம் தனக்கு ஏற்பட்ட அவலநிலையை கூறி அழுது, உதவி செய்யும்படி கேட்டுக் கொண்டாள்.

அவர்கள் அந்த சிறுமியை அனந்த்புரா போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையின்போது அவள் கூறிய விலாசத்துக்கு விரைந்துச் சென்ற போலீசார் விபசார தொழில் நடத்திவந்த இருவரை நேற்று மாலை கைது செய்துள்ளனர்.

மீட்கப்பட்ட சிறுமி கோட்டாவில் உள்ள குழந்தைகள் நலக் குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டு, காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.