Home சூடான செய்திகள் 15 வயது சிறுமியுடன் 10 நாட்கள் குடும்பம் நடத்திய 19 வயது இளைஞன்

15 வயது சிறுமியுடன் 10 நாட்கள் குடும்பம் நடத்திய 19 வயது இளைஞன்

22

safe_image (1)ஆணமடு பகுதியில் 15 வயது சிறுமியைக் கடத்தி அவருடன் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்ட 19 வயது இளைஞர் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
சிறுமியின் தாயார் வெளிநாட்டில் பணி புரிவதால், அவர் பாட்டி வீட்டில் தங்கியிருந்த நிலையில் கடந்த 10 நாட்களாக சிறுமியைக் காணவில்லை என பாட்டி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து சிறுமியையும் குறித்த இளைஞரையும் சிலாபம் பகுதி வீடொன்றில் வைத்து கைதுசெய்துள்ளதாக ஆணமடு பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த இளைஞரைத் தான் காதலித்ததாகவும், வீட்டில் யாரும் இல்லாத வேளை தானும் அவரும் முதல் முதல் உறவு கொண்டதாகவும் பின்னர் அவரின் கோரிக்கைக்கு இணங்க வீட்டை விட்டு அவருடன் சென்று வாழ்ந்து வந்ததாகவும் சிறுமி பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது குறித்த சிறுமி வைத்தியப் பரிசோதனைகளுக்காக ஆணமடு வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.