Home சூடான செய்திகள் வெறும் செக்ஸ் ! மீண்டும் வேண்டுமா.?

வெறும் செக்ஸ் ! மீண்டும் வேண்டுமா.?

63

அதாவது வெறும் செக்ஸ் மட்டும் வைத்துக் கொள்வதற்காகவே நட்போடு பழகுவது, மற்றபடி வேறு எந்த எதிர்பார்ப்பும் இவர்களுக்குள் இருக்காதாம்.

இப்படிப்பட்ட உறவுக் கூட்டம் பெருநகரங்களில் பெருக ஆரம்பித்துள்ளதாம். இவர்கள் வெறுமனே செக்ஸுக்காக மட்டுமே சந்தித்துக் கொள்வார்கள், சங்கமித்துக் கொள்வார்கள். மற்றபடி காதலிப்பது, திருமணம் செய்து கொள்வது போன்றவற்றுக்கு வேலை கிடையாது. வேறு எந்த கமிட்மென்ட்டும் கிடையாதாம்.

ஆனால் இதுபோன்ற உறவுகளில் மிக மிக கவனமாக இருக்க வேண்டும் என்கிறார்கள் உளவியாளர்கள். காரணம், ஒரு சின்னத் தவறு நடந்தாலும் அந்த பார்ட்னர்ஷிப் காலத்திற்கும் உடைந்து போய் விடும் வாய்ப்புள்ளதாம்.

சரி இத்தகைய உறவை எப்படி ‘பேணிப் பாதுகாப்பது’…அதுக்கும் டிப்ஸ் சொல்றாங்க, கேட்டுக்குங்க…

ரகசியம் பரம ரகசியம் இப்படிப்பட்ட உறவுகளை எப்போதும் ரகசியமாக வைத்துக் கொள்வது அவசியமாம். இருவருக்கும் இடையே உள்ள ஒரே எதிர்பார்ப்பு செக்ஸ் மட்டுமே என்பதால் இதை வெளிப்படுத்தி, பகிரங்கப்படுத்திக் கொண்டிருக்க முடியாது என்பதால் தேவையான நேரத்தில் மட்டுமே தொடர்பு கொள்வது நல்லதாம். இந்த விவகாரம் குறித்து நண்பர்களுடனோ அல்லது வேறு யாருடனுமோ விவாதிப்பது சரியில்லையாம்.

முரட்டுத்தனம் கூடாது  இத்தகைய உறவில் முரட்டுத்தனத்துக்கும், மிரட்டல்கள், உருட்டல்களுக்கும் வேலை இல்லை. எதுவாக இருந்தாலும் மென்மையாகத்தான் அணுக வேண்டும், எதையும் பொலைட்டாக கேட்டுத்தான் பெற வேண்டும். மேலும் செக்ஸ் வைத்துக் கொண்ட பின்னர் ஆளே மாறிப் போய் பேசுவதும் கூடவே கூடாதாம்.

எப்பவும் ரெடியாக இருக்கனுமாம் உங்களது பெண் துணை எப்போது கூப்பிட்டாலும் உடனே போவதற்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டுமாம். இதுபோன்ற இறவுகளில் இருவருக்குமே ஒரே நேரத்தில் மூடு இருக்கும் என்று கூற முடியாது, எதிர்பார்க்கவும் முடியாது. அதற்காக கூப்பிடுகிற நேரத்தில் பார்ட்னரைத் தேடிப் போகாமல் இருக்கவும் முடியாது, அப்படி போகாவிட்டால் பார்டனரே மாறிப் போய் விடலாம் இல்லையா…எனவே எப்போது அழைப்பு வந்தாலும் அதை மதிக்க வேண்டுமாம்.

இதைப் படித்தவுடன், என்ன கொடுமை சரவணான்னு கேட்கத் தோன்றுகிறது இல்லையா!

எது சந்தோஷம்?

ஒவ்வொரு உயிருக்கும் மூலாதாரமே நம்பிக்கைதான். இது நமக்கானது, இது நமக்குக் கிடைக்கும், இதை நம்பலாம், இதுதான் நமக்கு என்ற நம்பிக்கைதான் ஒவ்வொருவரையும் உயிர்ப்போடு வைத்திருக்க உதவுகிறது.

உலகமே ஒரு நாடக மேடை..அதில் நாமெல்லாம் நடிகர்கள் என்று சொன்ன ஷேக்ஸ்பியரின் வார்த்தைகளில்தான் எவ்வளவு உண்மை. மேலே வானம், கீழே பூமி. இந்த இரண்டும்தான் நிரந்தரம்… அதுவும் கூட இன்னும் 450 கோடி ஆண்டுகள் வரைதான் -சூரியனில் அதற்குப் பிறகு ஹீலியம் தீர்ந்து போய் அண்ட சராசரமும் அழியும் வாய்ப்புள்ளதாம் – அதற்கு இடைப்பட்ட இந்த மனித வாழ்க்கை ரொம்ப சாதாரணமானது. இப்படிப்பட்ட வாழ்க்கையை முடிவு வரை ஓட்ட உதவுவது இந்த நம்பிக்கைதான்.

வாழ்க்கைக்கு மட்டுமல்ல காதலுக்கும் கூட நம்பிக்கை மிகவும் முக்கியம். ஒரு சின்ன இழையளவு கூட அதில் தளர்வு வந்து விடக் கூடாது. மீறி வந்து விட்டால் அந்தக் காதலே உலர்ந்து உதிர்ந்து போய் விடும்.

நீ என்னை மகிழ்ச்சிப்படுத்துகிறாய்
என்னுடைய உலகத்தை நம்பிக்கையால் நிரப்புகிறாய்
என் வாழ்க்கையை நீ மாற்றிப் போட்டாய்
உனக்கே தெரியாமல் என்னை நிறைய மாற்றினாய்.
நீ எனக்கு அசாதாரணப் பெண்
என்னையே எனக்கு உணர்த்தியவள் நீ.
என்னை விட மதிப்பானவள் நீ
உன் மென்மையான புன்னகையால்
என் இதயம் முழுவதையும் இதமாக்குகிறாய்
உன்னை, உன்னைவிட நான் அதிகம் புரிந்திருக்க
இந்தக் காதலே காரணம்
தொடர்ந்து என்னைக் காதலி!

இப்படியெல்லாம் ஒரு காதலன், உணர்ந்தும், உய்த்தும் சொல்லக் காரணம் அந்தக் காதல் தந்த நம்பிக்கையும் தெம்பும்தான். ஒவ்வொரு காதலும் இப்படித்தான் – நம்பிக்கையையும், நல்ல பல விஷயங்களையும் கூடவே சேர்த்துக் கொடுத்து விட்டுத்தான் போகிறது – அது நீடித்தாலும் அல்லது அல்பாயிசில் முடிந்தாலும்.

எனக்கு எப்போதெல்லாம் மனம் கணத்துப் போகிறதோ
உன் நினைவு வந்து லேசாக்குகிறது
எப்போதெல்லாம் எனக்கு இதயம் வலிக்கிறதோ
அப்போதெல்லாம் நீ வந்து லேசாக்குகிறாய்

இதுவும் காதல் கொடுக்கும் நம்பிக்கைதான்.. காதலின் நினைவும், காதலியின் நினைவும், காதலனின் நினைவும் ஒவ்வொருவருக்கும் மூச்சுக் காற்று போல. எதை வாசிக்க மறுக்கிறோமோ இல்லையோ, நிச்சயம் காதலை சுவாசிக்க யாரும் மறக்க மாட்டார்கள்.

நீ வந்தது என் அதிர்ஷ்டம்
கைக்குள் வர வேண்டிய அவசியம் கூட இல்லை
ஏனென்றால் அதையும் தாண்டி என் மனசுக்குள் எப்போதோ வந்து விட்டவள் நீ.
ஒவ்வொரு நாளும் உன் நினைவாகவே விடிகிறது
ஒவ்வொரு இரவும் உன் நினைவிலேயே கழிகிறது
இது போதும் என் தேவதையே!

அவள் பார்க்கிறாளோ இல்லையோ, அவளுக்குப் புரிகிறதோ இல்லையோ, அவள் வருகிறாளோ இல்லையோ, அது கூட இவனுக்குத் தேவையில்லையாம்.. அவளது நினைவு தரும் அந்த சுகம் போதுமாம்… இதை விட ஒரு பாசிட்டிவான விஷயத்தை வேறு எது தரும், சொல்லுங்கள்!

ஆதலினால் காதல் செய்யுங்கள்.. ஆயுசைக் கூட்டிக் கொள்ளுங்கள்

மீண்டும்  வேண்டுமா.?

ஒவ்வொரு முறையும் புதுப் புது உற்சாகம் தருவது காமம் மட்டுமே. இன்னும் இன்னும் வேண்டும், மீண்டும் மீண்டும் வேண்டும் என்று என்றுமே ஆறாத பசி கொண்டது காமம் மட்டுமே.

எப்படிப் பார்த்தாலும் காமம் இன்பமானதுதான். இருந்தாலும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு சுவையை நாடும்போது அந்த இன்பத்திற்கு அளவு இன்னும் பல மடங்காக வெயிட் கூடும் என்பது உண்மை. எனவே ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு முறையில் புகுந்து இன்பத்தை நுகர முயற்சிப்பது நல்லது.

வழக்கமான உறவு நிலைகளை விட மாறுபட்ட உறவு நிலைகளுக்கு எப்போதுமே திரில் சற்று அதிகம். வழக்கமாக ஆண்கள் மேலே, பெண்கள் கீழே என்பதை மாற்றி நின்றவாறும், பக்கவாட்டில் படுத்தவாறும், பெண் மேலே ஆண் கீழே என்றுமாக மாறி புணர்ச்சி கொள்வது புதிய அனுபவத்தை இருவருக்குமே கொடுக்கும்.

ஆண்கள் மீது பெண்கள் ஏறி அமர்ந்து கொண்டு உறவு கொள்ளும்போது அந்தப் பெண்களுக்கு கர்வம் கூடுகிறதாம், பெருமை கூடுகிறதாம், நாம்தான் இப்போது ராணி என்ற பெருமிதம் வந்து சேருகிறதாம். இதனால் மேலும் உற்சாகமுற்று அவர்களுக்குத் தேவையானதை அவர்களே எடுத்துக் கொள்ள ஏதுவாகிறதாம்.

சிலருக்கு நின்று கொண்டு புணருவது ரொம்பப் பிடிக்கும். இதில் பல நிலைகள் உள்ளன. வெறுமனே சுவர் மீது சாய்ந்தபடி பெண் நின்று கொண்டு ஆண் செக்ஸ் வைத்துக் கொள்வது பொதுவான நிலை. அப்படி இல்லாமல் சாய்ந்தபடி நிற்கும்போது பெண்ணின் ஒரு காலை மட்டும் தூக்கி அதை ஆண் மீது வளைத்துப் பிடித்தபடி நின்று கொண்டு புணருவது இருவருக்கும் பெரும் திரில்லான அனுபவத்தைக் கொடுக்குமாம்.

அதை விட திரில்லான விஷயம், பெண்ணை ஆண் தூக்கிக் கொண்டு உறவில் ஈடுபடுவது. இதில் ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி நல்ல எனர்ஜி இருக்க வேண்டியது அவசியம். உடல் பருமன் இல்லாதவர்களாக இருத்தலும் அவசியம். ஒருவேளை இதையும் அனுபவிக்க வேண்டும் என்று விரும்பினால் உயரமான ஸ்டூலில் பெண் அமர்ந்து, நன்றாக முனை வரை வந்து உட்கார்ந்து கொண்டு பின்னர் ஆணின் இடுப்பைச் சுற்றி வளைத்துக் கொண்டு அதன் பிறகு இன்பத்தில் ஈடுபடலாம்.

இப்படி விதம் விதமான இன்பக் கலைகளில் ஈடுபடும்போது உறவு வேகமாகவும், கூடுதல் இன்பத்துடனும் இருக்குமாம்.

அதேசமயம், இப்படிப்பட்ட மாறுபட்ட உறவுகளில் ஈடுபடும்போது சில கட்டுப்பாடுகளையும் நாம் கவனத்தில் கொள்வது நல்லது. அதாவது சில குறிப்பிட்ட சமயங்களில் இந்த முறை புணர்ச்சியை தவிர்க்க வேண்டும் என்று டாக்டர்கள் சொல்கிறார்கள். குறிப்பாக மாதவிலக்கு வந்த சமயத்தில் மாறுபட்ட புணர்ச்சி நிலைகளைத் தவிர்க்க வேண்டும். பருமனான உடல் அமைப்பு கொண்ட பெண்களும் இதைத் தவிர்க்க வேண்டு்ம். குழந்தை