Home ஆண்கள் விந்து – வரமா? சாபமா?

விந்து – வரமா? சாபமா?

16

பசி இரண்டு வகை. ஒன்று உணவுப் பசி. இன்னொன்று உடல் பசி. உணவுப் பசிக்குப் பொருள் தேவை. உடல் பசிக்குப் பலம் தேவை. இந்த இயற்கைத் தேவைகள் இரண்டும் உலகிலுள்ள எல்லா உயிர்களுக்கும் பொதுவானவை. இவை இரண்டுமே உயிர்களுக்கு அத்தியாவசியத் தேவையாக இருந்தாலும் இதை நுகரும்போது இயற்கை இதனுள் ஒரு அரிய சுவையை வைத்திருப்பதுதான் அலாதியானது. மனிதனின் உடலில் ஒன்பது ஓட்டைகள் உள்ளன.

கண்கள் 2, காது 2, மூக்கு 2, வாய் 1, மலவாய் 1, ஆண்குறி 1. மொத்தம் 9 ஓட்டைகள்.

கண்கள் – பார்க்கின்றன, கண்ணீர் உகுக்கின்றன.

காது – கேட்கும் திறன், கழிவு (குறுமி) வெளியேற்றம்.

மூக்கு – சுவாசித்தல், கழிவு (சளி) வெளியேற்றல்,

வாய் – பேசுதல், உணவு உட்கொள்ளுதல்,

மலவாய் – உணவுக்கழிவை வெளியேற்றுதல் மட்டும்.

ஆண்குறி அல்லது பெண் குறி கழிவு (சிறுநீர்) வெளியேற்றுதல், விந்து வெளியேற்றுதல்.

வாய் இயற்கையில் கழிவை வெளியேற்றுவதில்லை. ஆண்குறி ஓட்டையில் வெளியேறும் விந்தணு ஒரு உயிரை உருவாக்கும் திறன்கொண்டது. அது கழிவா?

உடலில் ஒரு பொருள் வெளியேறும்போதும், உள்புகும்போதும் ஒருவித இன்பஉணர்வை இயற்கை ஏற்படுத்தி வைத்திருப்பது வரமோ? சாபமோ? தெரியவில்லை.

ஒவ்வொரு உயிரும் ஒரு உயிரைப் படைக்க இயற்கை கொடுத்த கொடை விந்தணு. அதன் அவசியத்தை, அதிசயத்தை, ஆற்றலை நாம் எவ்வளவு மதிக்கிறோம், தெரிந்து வைத் திருக்கிறோம். கொஞ்சம் பார்ப்போமா?

விந்து (Sperm) என்பது ஆண் இனப்பெருக்க அணு. Sperm என்ற வார்த்தை கிரேக்கத்தின் ஸ்பெர்மா(σπέρμα) என்ற வார்த்தையிலிருந்து உருவானது. இதற்கு கிரேக்கத்தில் விதை என்று பொருள். விந்தணுக்கள் விதைப்பைகளில் சேமிக்கப்பட்டாலும், PROSTATE GLAND -லிருந்து வரும் திரவம் 98 விழுக்காடும், விந்தணுக்கள் 2 விழுக்காடும் இருக்கும். விந்தணுக்கள் விந்தகங்களில் உற்பத்தியாகும். பின்பு ஆண்குறியில் இருக்கும் விந்துகொள்பையில் இந்த விந்தணுக்கள் சேகரிக்கப்படுகின்றன.

விந்தணுவிற்கு தலை, உடல், வால் என மூன்று பகுதிகள் உள்ளன. இந்த வால் பகுதியானது, பெண்ணின் இனப்பெருக்க உறுப்பினுள் நீந்திச் சென்று முட்டையுடன் கருக்கட்ட உதவுகிறது. கருக்கட்டலின்போது, ஒருமடிய நிலையிலுள்ள ஆணின் விந்தணுவில் உள்ள 23 குரோமோசோம்கள், ஒருமடிய நிலையிலுள்ள பெண்ணின் முட்டையிலுள்ள 23 குரோமோசோம்களுடன் இணைந்து இருமடிய நிலையுள்ள கருவை உருவாக்குகின்றது.

மனிதனின் ரத்தத்தினின்று சத்து வடிந்து விந்து உண்டாகிறது. ஒரு துளி விந்து உருவாக, 60 முதல் 70 துளி வரை ரத்தம் தேவைப்படுகிறது. விந்தானது கெட்டியாக இருந்தால்தான், உடலுறவுக்கு ஏற்றதாகக் கருதப்படும். அது நீர்த்துப்போன நிலையில் இருந்தால், உடலுறவுக்கு அந்த ஆண்மகன் தகுதியற்றவனாகிறான். அத்தகைய நீர்த்துப்போன விந்துவில் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும். அப்படிக்குறைவாக இருந்தாலும், அவற்றில் வீரியமுள்ள விந்தணுக்கள் மிகக் குறைவாக இருக்கலாம். இன்னும் சிலருக்கு விந்தணுக்களே இல்லாமல் போகலாம்.

இப்படி, விந்து, கெட்டித்து உண்டாகவும், நீர்த்துப்போகவும் காரணமாக இருப்பது நமது உணவுப்பழக்கம்தான். அதோடு உணவைச் செரித்து சக்தியாக மாற்றுகின்ற, உறுப்புகளின் பலத்தையும்தான் விந்தின் தன்மை சார்ந்திருக்கிறது.

அதே சமயம், ஒருவன் என்னதான் புஷ்டியான, சத்தான ஆகாரத்தைச் சாப்பிட்டு வந்தாலும்., அவனது ஜீரண சக்தி பலவீனமாக இருக்கும் பட்சத்தில், உண்ணும் உணவு சரியான சத்துகளாக மாறாது. கெட்டியான விந்தும் உருவாகாது. நல்ல ரத்தமும் ஊறாது. விந்து எவ்வளவுக்கு எவ்வளவு கெட்டியாக இருக்கிறதோ அந்த அளவிற்கு ஒரு ஆண்மகனுக்கு செக்ஸ் உறவில் நாட்டம் அதிகரிக்கும். அளவற்ற இன்பமும் உண்டாகும். அதே போல், அந்த விந்திலிருந்து உருவாகும் குழந்தையும் பலசாலியாகவும், புத்திசாலியாகவும் விளங்கும்.

பெண்ணுக்கும் உடலுறவின்போது, ஆண் விந்தைப்போல, சுரோனிதம் என்ற ஒரு திரவம் சுரக்கும். பெண்ணுக்கு மாதவிடாய் வருவதும் அவளது ஆரோக்யத்தைக் குறிக்கிறது. அவளது மாதவிடாய் ரத்தமானது ரோஸ் நிறத்தில் இருந்தால், அவள் ஆரோக்யம் சரியாக இருப்பதாகவும், பெண்ணுறுப்பு எந்த நோயுமின்றி நன்றாக இருப்பதாகவும் கொள்ளலாம். அதே, மாதவிடாய் ரத்தம், மஞ்சளாகவோ, அல்லது கருஞ்சிவப்பாகவோ இருந்தால், அவளது ஆரோக்யம் பாதிக்கப்பட்டிருக்கிறது, பெண்ணுறுப்பும் நோய்த் தாக்குதலுக்குள்ளாகி இருக்கிறது என்று அர்த்தம் கொள்ளலாம். எனவே, பெண்ணும் சத்தான ஆகாரம் உண்டு, நல்ல சிந்தனை, நல்ல பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகிறது. அப்போதுதான், மாதந்தோறும் உருவாகும் கருமுட்டை வீரியமிக்கதாக விளங்கும், நல்ல குழந்தையும் பிறக்கும்.

ஆண்களின் இனப்பெருக்கத் தொகுதியின் முக்கிய பணியாக விந்தணுக்களை உற்பத்தி செய்வது உள்ளது. இது பெண்களின் கரு முட்டையுடன் இணைந்து ஒரு சிசுவை உருவாக்கும்.

இந்த விந்தணுக்கள் விதைகளில் (testicles) இருந்து உற்பத்தியாகும். இவ்விரு விதைகள் விதைப்பையினுள் (scrotum) அமைந்திருக்கும். விதைப்பைகள் விதையை பாதிப்பதுடன் உடலிற்கு வெளியே இருக்கும்.

ஒரு நாளிற்கு 3 மில்லியன்ஸ் விந்தணுக்களை இவ்விதைகள் உற்பத்தியாக்கும். 93.2° ஃப்ரான்ஹீட்டில் விதைகளைப் பேணுவதற்காக விதைப்பை சுருங்கி விரியும் தன்மையைக் கொண்டிருக்கும்.

lobule, seminiferous tubles எனும் இரு பிரிவுகள் ஒவ்வொரு விதையினுள்ளும் இருக்கும். tubles விந்தணு உற்பத்திக்கு அடிப்படையாக உள்ளது. இங்கு உற்பத்தியான விந்துகள் vas deferens எனும் வால்வினூடாகச் சென்று விந்தணுப்பையை அடையும்.

ஆண்களைப்பொறுத்தவரை சிறுநீர்குழாயும், விந்தணு பாய்ச்சும் குழாயும் ஒன்றாக இருக்கும். எனினும் சிறுநீரும், விந்தும் ஒன்றாக வெளியேறாமல் தடுப்பதற்காக bulbou- rethral gland எனும் பகுதி இருக்கும். அது ஆணுறுப்பு குழாயினுள் சிறுநீரையும், விந்தணுவையும் ஒன்றாக விடாமல் தடுக்கிறது.

ஆண்களின் உறவு முடிவுத்தருவாயில் வெளியேறும் இவ்விந்தணுக்கள் பெண்களின் கருமுட்டையை அடைவதற்கு ஏற்றவாறு ஆணுறுப்பு சாதாரண நிலையில் இருந்து உறவின் போது பெருத்துக் காணப்படும்.

ஒரு விந்து தள்ளலில் வெளியேற்றப்படும் விந்துப் பாய்மத்தின் சராசரி அளவு 2 முதல் 6 மில்லி லிட்டர் இருக்கும்.

வாழ்நாளில் ஒரு மனிதன் விந்து பாய்ச்சும் தடவைகளின் சராசரி எண்ணிக்கை 5,000 தடவை.

வாழ்நாளில் மொத்த விந்துப் பாய்மப் பாய்ச்சல் 17 லிட்டர்.

ஒரு தேக்கரண்டி விந்துப் பாய்மத்தின் கலோரிப் பெறுமானம் 7 கலோரி.

புணர்ச்சிப் பரவசநிலையின் சராசரி நேரம் 4 நொடிகள்தான்.

ஓர் ஆரோக்கியமான ஆணின் விந்துத்தள்ளலில் வெளியேற்றப்படும் விந்துக் கலங்களின் சராசரி எண்ணிக்கை 40 முதல் 600 மில்லியன் இருக்கும்.

ஒரு விந்து முட்டையுடன் கருக்கட்டப் பயணிக்கும் தூரம் 7.5-10 செ.மீ.

விந்து ஆயுட்காலம் உருவாக்கத்திலிருந்து பாய்ச்சப்படும்வரை 2.5 மாதங்கள்தான்.

பாய்ச்சப்பட்ட விந்தின் ஆயுட்காலம் 30 நொடிகளிலிருந்து ஆறு நாட்கள் வரை

ஒரு விந்துத் தள்ளலில் வெளியேற்றப்படும் விந்துப் பாய்மத்தின் சராசரி அளவு 2 முதல் 6 மில்லி லிட்டர் வரை.

ஆண்குறியைப் பற்றி ஏராளமான மூடநம்பிக்கைகள் உள்ளன. அதிலும் மிகப்பெரியதாக இருக்கவேண்டும் என்ற எண்ணம், ஆண் பெண் இருபாலருக்குமே காணப்படுகின்றது. ஆண்குறியின் அளவை வைத்தே அவனின் ஆண்மையை கணக்கிட வேண்டும் என்று பலரும் நினைக்கின்றார்கள். இது முற்றிலும் தவறானதாகும்.

மனித ஆண்குறியானது மற்றைய பாலூட்டும் விலங்குகளின் ஆண்குறியிலிருந்து பல விடயங்களில் வேறுபாடானதாக இருக்கிறது. மற்றைய விலங்குகளில் சிலவற்றில் காணப்படுவதைப்போல இவ்வுறுப்பில் எலும்புகள் காணப்படுவதில்லை. மாறாக இரத்த அழுத்தம் காரணமாகவே மனித ஆண்குறியில் எழுச்சி நிகழ்கிறது. உடற்திணிவோடு ஒப்பிடுகையில் சராசரி விலங்குகளைப் பார்க்க மனித ஆண்குறியே பெரியதாக இருக்கிறது.

இன்ப நுகர்ச்சி இருவகைப்படும். ஒன்று இயற்கையான நுகர்ச்சி. இன்னொன்று செயற்கையான நுகர்ச்சி. இயற்கையான நுகர்ச்சி ஆண்-பெண் புணர்ச்சி. செயற்கை நுகர்ச்சி சுய இன்பம். இது தன்னைத் தானே புணர்ந்து கொள்வதற்குச் சமம்.

இன்பம் இரண்டு வகைப்படும். ஒன்று சிற்றின்பம். இன்னொன்று பேரின்மம். கொஞ்ச நேரமே இருந்து இன்பம் தருவது சின்றின்பம். அதிக நேரம் இருந்து இன்பம் தருவது பேரின்பம்.

மனம் இரண்டு வகைப்படும். ஒன்று உள்மனம். இன்னொன்று வெளி மனம். வெளி மன விழைவு சிற்றின்ப நாட்டம். உள்மன விழைவு பேரின்ப நாட்டம்.

மனிதனின் வாழ்க்கை இரண்டு வகைப்படும் ஒன்று பிறப்பு. இன்னொன்று இறப்பு. பிறக்கும்போதே இறப்பு நிர்ணயிக்கப்பட்டுவிடுகிறது.

இன்பத்திலிருந்து பிறந்த மனித மனம் சதா இன்பத்தையே நாடுகிறது. உடல்தேவைகள் அனைத்தும் சிற்றின்பத் தேவையே. சிற்றின்பம் இன்றி பேரின்பம் கிடைக்காது. ஆனால் சிற்றின்பம் அளவை மிஞ்சும்போது ஆயுளைக் குறைக்கிறது. மண்ணிலிருந்து வந்த இந்த உடல் மரணத்தை நோக்கியே வேகமாக அழைத்துச் செல்லும். பக்குவப்பட்ட மனம்தான், உள்மனம்தான் மரணத்தைத் தள்ளிப்போடும் உபாயத்தைக் காட்டும்.

உணவு உடலைக்காக்கும். அதுவே சுவை, ஆசை காரணமாக அதிகப்படும்போது உடல் நோயாகி மரணத்தை சீக்கிரம் வரவழைக்கும்.

நம் உடலில் வெளியேறும் கழிவுகளிலேயே விந்தணு மிகவும் சக்திவாய்ந்தது. விந்தைக் கட்டுப்படுத்திக் கையாளத் தெரிந்தவன் சித்தனாவான்.