Home குழந்தை நலம் ”வாவ் டுவின்ஸ்”:எப்படி பிறக்கிறார்கள் என்று தெரியுமா?

”வாவ் டுவின்ஸ்”:எப்படி பிறக்கிறார்கள் என்று தெரியுமா?

27

இரட்டை குழந்தைகளை சுமப்பவர்களுக்கு அதீத வாந்தியும் குமட்டலும் அலைக்கழிக்கும்.
அதிகாலையிலேயே தூக்கம் விழிப்பதற்கு முன்பே ஆரம்பமாகும் இந்த இம்சை. வாய்க்கு ருசியாக சாப்பிட ஆசையிருந்தாலும் வாந்தியும் அதையடுத்த சில நிமிட இம்சையும் உணவே வேண்டாம் என ஒதுக்கத் தோன்றும்.

வாந்தி என்பது கர்ப்பிணிகளிடம் சகஜமாகக் காணப்படுகிற ஒன்றுதான். என்றாலும், இரட்டைக்கருவை சுமப்பவர்களுக்கு அந்த உணர்வு அதீதமாக இருக்கும்.

வாசனைகளை சகித்துக்கொள்ள முடியாமை, விருப்பமான உணவுகளைப் பார்த்தால் விலகி ஓடச் சொல்லும்.

கர்ப்பம் உறுதியாகிற வரை மிகவும் பிடித்திருந்த உணவின் வாசனை, கர்ப்பம் தரித்த பிறகு மிக மோசமான வாசனையாகத் தோன்றும்.

இந்த லிஸ்ட்டில் காபி, டீக்கு முதலிடம். கர்ப்பத்தின் ஆரம்ப நாட்களிலேயே கர்ப்பிணிகளின் எடையில் அதிகரிப்பு தெரியும். அப்படி அதிகரிக்கிற எடை என்பது வெறும் குழந்தைகளின் எடை மட்டுமின்றி, எக்ஸ்ட்ரா திசுக்கள், திரவம் மற்றும் ரத்தம் ஆகியவற்றையும் சேர்த்தது.

வழக்கமாக கர்ப்பிணிகளுக்கு நான்கைந்து மாதங்களுக்குப் பிறகு தெரிய ஆரம்பிக்கிற வயிறு, இரட்டைக் கர்ப்பம் சுமப்பவர்களுக்கு இன்னும் சீக்கிரமே தெரியும்.

அடுத்தடுத்த மாதங்களிலும் வயிற்றின் அளவு அசாதாரணமாகவே இருக்கும். உள்ளாடை அணிய முடியாத அளவுக்கு மார்பகங்கள் மிகவும் மென்மையாகும். அடிக்கடி சிறுநீர் கழிப்பதும் கர்ப்பத்தில் சகஜம். என்றாலும், இரட்டைக் குழந்தைகள் இருக்கும் போது, அந்த உணர்வு இன்னும் தீவிரமாகும்.

அளவுக்கு மிஞ்சிய களைப்பு ஆட்கொள்ளும். ஒவ்வொரு நாளையும் கடத்துவதென்பதே போராட்டமாகத் தெரியும். பிரசவ ஹார்மோன் என்று சொல்லக்கூடிய Chorionic Gonadotropin Hormone அளவு மிக அதிகமாக இருக்கும்.

இது கர்ப்பத்தை உறுதிப்படுத்துகிற முதல் சிறுநீர் சோதனையிலேயே தெரியும். கர்ப்பப்பை விரிவடைவதன் விளைவாக, இரட்டைக்கரு உருவான பெண்களுக்கு கர்ப்பப்பையில் தசைப்பிடிப்பு மாதிரியான உணர்வு தென்படும்.

இதயத் துடிப்பில் வேகம் தெரியும். சாதாரண நிலையில் 70 முதல் 80 வரை இருக்கும் இதயத் துடிப்பானது, இரட்டைக் குழந்தைகளைச் சுமக்கும் பெண்களுக்கு 95 முதல் 105 வரை கூட எகிறலாம்.
அதாவது, உடற்பயிற்சியோ, கடுமையான வேலையோ செய்த பிறகு எக்குத் தப்பாக அதிகரிக்கிற இதயத் துடிப்பைப் போலவே இருக்கும் இது.

காரணமே இல்லாமல் அழுகை, தடுமாற்ற மனநிலை போன்றவையும் தென்படலாம்.

ஒரு குழந்தையை சுமக்கும் பெண்களுக்கு அளவோடு இருக்கும் இந்த உணர்வுகள், இரட்டைக் குழந்தைகளை சுமப்பவர்களுக்கு அளவுக்கு அதிகமாகவே தென்படும்.

குழந்தைகளின் அசைவைக் கூட சீக்கிரமே உணர்வார்கள் இரட்டைக் கருவைச் சுமக்கும் பெண்கள்.