Home ஆரோக்கியம் உளவியல் வயதுக்கு வருதலும் வலிகளைச் சுமத்தலும்

வயதுக்கு வருதலும் வலிகளைச் சுமத்தலும்

29

சாமத்தியச் சடங்கு வைக்கிறது நல்லதா கூடாதா ? அப்பிடி வைக்கிறது எங்கட கலாச்சாரமா இல்லையா? பாலச்சந்தர் படத்தில வாறது மாதிரி தேவதை போல அந்தரத்தில தொங்க விட்டு படமெடுக்கலாமா ? இப்பிடி எத்தனையோ பட்டிமன்றங்கள் நடந்துகொண்டிருக்கு. ஆனால் இந்த பூப்படைதல் என்றால் என்ன? அதன்மூலம் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஏற்படுகிற உடல் உள மாற்றங்கள் பற்றிய அக்கறையும் அறிவும் எங்களில் எத்தனை பேருக்கிருக்கு?

யாராவது மகளுக்கு பூப்புனித நீராட்டுவிழா வைக்கிறம் என்று அழைத்தால் எந்தக்கடையில வாழ்த்து மடல் வாங்கிறது எப்பிடி வாழ்த்திறதென்றுதான் ஆராய்கிறார்கள் எங்கட அருமை அண்ணாக்கள் மாமாக்கள் சித்தப்பாக்கள். தெரிந்த நண்பர் ஒருவர் ஒருபடி மேல போய் தான் இப்படியான ஒரு நிகழ்வுக்குப்போனால் “can you demonstrate it please” என்று கேப்பாராம்.ஆக ஒரு பெண் பூப்படைதல் என்பது எல்லாருக்கும் ஒரு நகைச்சுவைக்குரிய விடயம் அப்படித்தானே?

பூப்புனித நீராட்டுவிழா வைப்பதன் அவசியம் பற்றியோ அல்லது அது எங்கட கலாச்சாரம் என்றதெல்லாம் எனக்குத்தெரியாது. ஒரு பெண் பூப்படைந்தால் அவள் திருமணத்துக்கு தயார் அல்லது தாயாகும் தகுதி அவளுடைய உடலுக்கு உண்டு என்று பறைசாற்ற இதை ஒரு குடும்ப நிகழ்வாக நிகழ்த்தி இருக்கலாம். ஆனால் புலம்பெயர் மக்களிடையே அது வெவ்வேறு காரணங்களுக்காக நடத்ப்படுகிறது. பெண் பூப்படைதல் என்பது banquet hall வைச்சிருக்கிறவை வீடியோ எடுக்கிறவைக்கெல்லாம் நல்ல வியாபார உத்தி.

ஆனால் அவையைச் சொல்லி என்ன செய்ய? நாங்கள் 20 000 செலவழிக்கத்தயாரா இருக்கிறதால தானே அவை புதுசு புதுசா உத்திகளை அறிமுகப்படுத்தினம். அது கலாச்சாரம் என்றதோ இல்லை ஒரு பெண்ணுக்கு கட்டாயம் செய்ய வேண்டிய சடங்கென்றதோ ஒவ்வொருவரின் நம்பிக்கையைப் பொறுத்தது. நிறையப் பரிசுப்பொருள் கிடைக்குமே அம்மா அப்பா இதுவரைக்கும் வேண்டித்தராமல் போனதெல்லாம் மற்றாக்களுக்கு படம் காட்டுறதுக்காகவே வேண்டித்தருவினம் என்ற ஆசையிலயே இங்கத்த சின்னனுகள் சாமத்தியவீடு செய்யறதெண்டால் ஏதோ படம் நடிக்கிற கணக்கில கற்பனை செய்யுதுகள். அப்பிடி கனவில இருக்கிறவைக்கு பூப்படைந்து முதல் ஒன்றிரண்டு மாதத்துக்கு சந்தோசமாத்தானிருப்பினம். பிறகுதானே hormone களின் ஆட்டம் புரியத்தொடங்கும். இப்ப கடைசியா சாமத்தியவீடு செய்யாமல் விட்டவைக்கெல்லாம் ஒரு அரிய வாய்ப்பிருக்கு. அதான் 16வது பிறந்தநாளை பெருசாக் கொண்டாடுறது.உங்களைக்குற்றம் சொல்லி என்ன பயன்?

10 வயசு வரைக்கும் உறவினர்கள் ஒன்றுகூடும் விடுமுறை நாட்களில் ஒன்டா basement ல நின்று விளையாடுற குஞ்சு குருமனெல்லாம் 9 வயசுக்குப்பிறகு தனித்தனி றூமுக்க நிண்டு விளைாயாடுதுகள். கேட்டால் இது “girls talk “ என்று பெட்டையளும் “boys’stuff” என்று பெடியங்களும் சொல்லுதுகள்.

எனக்கு 10 வயசில தெரிஞ்ச விசயங்களை விட இதுகளுக்கு பல மடங்கு தெரியும். ஆனால் முக்கியமாக தெரியவேண்டிய விசயங்கள் தெரியுறேல்ல. 10 வயசு பெடியனுக்கு PSB வேண்டி குடுத்திருக்கு. பெடியன் என்ன செய்யும் அறைக்குள்ள எல்லா மூலையிலயும் நிண்டு பார்ப்பான் எங்க wireless net connection கிடைக்குதெண்டு. பிறகு அந்த மூலைதான் அவன்ர குடியிருப்பு. பிறகென்ன 50 cent ன்ர äyo technology” , ”candy shop” என்று 24 மணித்தியாலயமும் PSP ம் கையுமாத்தான் திரியுறாங்கள். இதுகளைப் பார்த்து பார்த்து பெட்டையள் என்றாலே இப்பிடித்தான் treat பண்ணோனும் என்று அவங்களா ஒரு வரையறை போட்டு வைச்சிட்டு அதன்படி எல்லாத்தையும் பார்க்கிறது.