Home ஆண்கள் முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள்

முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள்

17

download (1)ஆண்கள் விந்து முந்துதலை தடுக்க சில முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளில் இறங்க முடியும். அதாவது சுய இன்பம் காணும் செயல் இதற்கு நல்ல முறையில் பலன் அளிக்கிறது. சுய இன்பத்தை முழுமையாக ஒரே நேரத்தில் வேகமாக செய்து முடிக்காமல் நிறுத்தி இடைவெளி விட்டு நேரத்தை நீட்டிக்க வேண்டும்.

சாதரணமாகவே ஆண்கள் சுய இன்பம் காணும் போது அவசாரம் அவசரமாகவே செயல்படுவார்கள். யாராவது பார்த்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில் அல்லது மனத்தில் உள்ள ஆசை தீர்ந்து போவதற்குள் ஆசையைத் தீர்த்து விடும்படி ஆவேசமாக அவசர அவசரமாக கையை வைத்துச் செயல்படுத்தி விந்துவை வெளிப்படுத்தி திருப்தி அடைவார்கள். இதுவே கலவியின் போதும் தொடர்ந்து சிக்கலை உண்டாக்குகிறது. அதனால் முதலில் ஆண் அவனது உறுப்பை ரசிக்க பழக வேண்டும். உறுபப் எழுந்து நிற்பதில் தொடங்கி அது விந்து கக்கி வீழ்வது வரை ரசித்து நிதானமாக கை செயல்பாடுகளை ரசித்து செயல்பட வேண்டும்.

விந்து வெளியாகும் நேரத்தில் செயலை நிறுத்தி வைத்து மீண்டும் தொடர வேண்டும். அடிக்கடி இப்படி செய்து பார்ப்பது அவசியம். என்றாவது ஒருநாள் கையைப் பயன்படுத்தி இன்பம் அனுபவிக்க முயற்சிப்பது பயன்தராது. தினமும் இரு முறையாவது இந்த முறையில் உச்சகட்ட நேரத்தை கூடுதலாக்கும் முயற்சியை மேற்கொள்ளும் போதுதான் நல்ல பலன் தரும்.

முதலில் வெறும் கையுடன் சிறிது நேரம் சுய இன்பம் அனுபவிக்க வேண்டும். பிறகு எண்ணெய் அலல்து ஜெல்லி போன்ற பொருள்களை பயன்படுத்தி சுய இன்பத்தில் ஈடுபட்டு செயல்படும் நேரத்தை நீடிக்க வேண்டும். இப்படி சில நாள்கள் உறுப்புடன் நெருங்கி விளையாடி நேரத்தை நிறுத்திச் செயல்படும் டெக்னிக்கை வெற்றிகரமாக கண்டுகொண்ட பிறகு பெண்களுடன் உறவு மேற்கொள்ளும் போதும் இதைப் பயன்படுத்தலாம். இடைவெளி விட்டு செயல்படுதல், விந்து வெளிப்டுதலை தடுப்பதில் முக்கிய பங்கு வகிப்பதாக ஏற்றுக் கொள்ளபட்டுள்ளது.

—————————————————————————————————————–
செக்ஸ் அடிமைகளாக இருப்பது:

குடிபோதை மயக்கத்தை அனுபவித்தவர்கள் அதில் இருந்து மிள முடியாமல் மீண்டும் மீண்டும் குடியைப் பற்றியே சிந்தித்துபோல் சிலர் செக்ஸ் அடிமைகளாக இருப்பது உண்டு. இந்த அடிமைத்தனம் காரணமாக எந்நேரமும் அதைப் பற்றியே சிந்தித்தல் அன்றாட சொந்த வேலைகளைக் கூட செய்ய முடியாமல் சிரமப்படுதல் போன்றவை ஏற்படலாம். இது ஆண் – பெண் இருவருக்கும் பொதுவானது. ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களுடன் உறவு கொள்ளுதல், ஒரே நேரத்தில் இரணடுக்கும் மேற்பட்ட பெண்களுடன் உறவு கொள்ளுதல் போன்ற நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
இந்த நிலையில் மேலும் பல கலாசார சீரழிவுக்கான செயல்களில் ஈடுபடுவதை காணமுடியும். கீழ்கண்ட செயல்பாடுகளை காண நேர்ந்தால் அது செக்ஸ் அடிமை நிலை என்பதை உறுதி செய்ய முடியும்.

* அடிக்கடி சுய இன்பம் காணுதல்
* பலடவேறு உறவுகள்
* எப்போதும் செக்ஸ் படங்கள் பார்த்தல்
* போன் செக்ஸ் அல்லது கம்ப்யூட்டர் செக்ஸ்
* எக்ஸ்பிஸனிசம் எனபப்டும் அடுத்தவர்களிடம் தன் உறுப்பை காட்டுவதில் ஆனந்தம் அடைதல்
* செக்ஸ் துன்புறுத்துதல்
* கற்பழித்தல்
* அதிக பாட்னர்களை விரும்புதல்

இது போன்ற குறைபாடுகள் இருந்தால் உடனடியாக போதிய சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியம். இல்லையெனில் உடல்நலம், பணம், சமுதாயச் சிக்கல், ஏற்படுவது மடடுமின்றி காவல்துறை நடவடிக்கையிலும் சிக்கிக் கொள்ள நேரிடலாம். அதனால் குடும்ப உறவு சீரழிந்து கணவன் – மனைவி உறவு கெட்டுப்போகலாம். தம்பதிகளுக்குள் இருவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய அளவு உறவு கொள்வது மட்டுமே ஏற்றுக் கொள்ளக்கூடியது ஆகும். இதை மருத்துவ சிகிச்சை, கவுன்சிலிங், மருந்துகள் கொடுப்பதன் மூலம் தீர்த்துக்கொள்ள முடியும்.

பொதுவாக சிலருக்கு செக்ஸ் உணர்வு மிகக் குறைவாக அல்லது இல்லாத நிலையும், சிலருக்கு மிக அதிகமாகவும் இருக்கும். ஆணுக்கு செக்ஸ் உணர்வு அதிகமாக உள்ள நிலையை சேட்டிரியாஸிஸ் என்று சொல்வார்கள். பெண்ணுக்கு செக்ஸ் உணர்வு அதிகமாக இருந்தால் நிம்ஃபோமேனியா என்று சொல்வார்கள். இந்த குறைபாட்டால்தான் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவி மக்களை பயமுறுத்துகின்றன.

எப்படியானும் அதிக முறை உறவு அனுபவிக்க விரும்புவரை செக்ஸ் அடிமை என்று சொல்லிவிடக் கூடாது. செக்ஸில் தவறான அணுகுமுறையை கடைபிடித்து எந்நேரமும் அதே சிந்தனையில் இருப்பவர்களுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்க முடியும்.