Home பெண்கள் அழகு குறிப்பு முகப்பரு வருவதற்கான காரணம் அதை எப்படி போக்குவது?

முகப்பரு வருவதற்கான காரணம் அதை எப்படி போக்குவது?

31

வளரும் இளம் பெண்னளை மிகுந்த உளைச்சலுக்கு ஆட்படுத்துவது இந்த முகப்பருதான். உடலில் சேரும் கொழுப்புச் சத்துக்களின் அலர்ஜியால் இந்நிலை ஏற்படுகிறது. இதன்

முக்கியக் காரணங்களில் மலச்சிக்கலும் ஒன்று.

முகபரு வருவதற்கான காரணங்கள் :

1. அதிக எண்ணெய் பசை இருந்தால் முகத்தில் பரு வர வாய்ப்புகள் அதிகம்.ஆகையால் எண்ணெய் பசையில்லாமல் பார்க்கவும் உடலில் சேரும் கொழுப்புச்சத்துக்களின் அலர்ஜியால் முகப்பரு ஏற்படுகிறது. ஆயில் ஸ்கின்னுக்கான Facewash வாங்கி பயன் படுத்தலாம்.

2. முகப்பரு உள்ளவர்களுக்கு முகத்தை நன்கு சுத்தமாகக் கழுவ வேண்டும். பருக்களைக் கிள்ளவோ, அடிக்கடி கைகளால் தொடவோ கூடாது. மெல்லிய பருத்தி துணியை பயன்படுத்த வெண்டும்.

3. மேலும். மன இறுக்கம், மலச்சிக்கல் இவற்றாலும் உண்டாகிறது.

4. உணவுமுறை மாறு பாட்டாலும் முகப்பரு தோன்றும்

• முகத்தை நன்கு சுத்தமாகக் கழுவ வேண்டும். பருக்களைக் கிள்ளவோ, அடிக்கடி கைகளால் தொடவோ கூடாது.

• மெல்லிய பருத்தித்துணியைப் பயன்படுத்த வேண்டும்.

• ஆலிவ் எண்ணெயுடன் சந்தனம் கலந்து இரவு படுக்கைக்குச் செல்லும் முன் பூசி மறுநாள் காலையில் முகம் கழுவினால் முகப்பரு நீங்கும்.

• பாசிப்பயறு மாவை தேவையான அளவு எடுத்து அதில் எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து நன்கு கலக்கி முகத்தில் தடவி 15 நிமிடங்கள் காயவைத்து பின் நீரில் முகத்தைக் கழுவி வந்தால் முகப்பரு நீங்கும். பருவினால் உண்டான தழும்புகள் மாறும்.

• புதினா இலையை அரைத்து முகத்தில் பூசினால் முகம் பொலிவு பெறுவதுடன் முகப்பரு தழும்புகள் மாறும்.

முகபரு மறைய 10 டிப்ஸ்:

1. தேனுடன் சிறிது லவங்க பட்டையின் தூளை சேர்த்து முகத்தில் தடவலாம்.

2. கடுகை அதனுடன் சிறிது தேனை கலந்து முகத்தில் தடவ முகபரு நீங்கும்.

3. தக்காளி சாற்றினை முகத்தில் தடவி வர முகபரு நீங்கும்.

4. முட்டையின் வெள்ளை கருவை முகத்தில் தடவி வர முகபரு நீங்கும்.

5. முகபரு வராம்ல் இருக்க மாலை 1 கைபிடி வேப்பிலையை 1கப் தண்ணீரில் போட்டு காலையில் முகம் கழுவினால் முகத்தில் பரு வராது,முகம் பளிச்சிடும்.

6. பாசிப்பயறு மாவை தேவையான அளவு எடுத்து அதில் எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து நன்கு கலக்கி முகத்தில் தடவி 15 நிமிடங்கள் காயவைத்து பின் நீரில் முகத்தை கழுவி வந்தால் முகப்பரு நீங்கும். பருவினால் உண்டான தழும்புகள் மாறும்.

7. பூண்டினை நசுக்கி சாற்றினை பயன்படுத்தினால் முகபரு நீங்கும்

8. 3 மணி நேரத்திற்கு 1 முறை முகத்தை குளிர்த நீரால் கழுவுங்கள் முகம் கழுவ soap அதிகமாக பயன் படுததிர்கள்,

9. சோற்று கற்றாழை-யில் உள்ள gel-இ முகத்தில் தடவி வர பருக்கள் மறையும் . அல்லது இவற்றை போன்ற gel பயன்படுத்தலாம்.

10. காய்ச்சாத பாலினை முகத்தில் தடவிவர முகபரு நீங்கும்.

கரும்புள்ளிகள் மறைய:

1.எலுமிச்சை சாற்றுடன் 4 சொட்டு தேன் கலந்து முகத்தில் போட்டு 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகம் கழுவ கருபுள்ளிகள் மறையும்

2. தினமும் குளிக்கும் போது முகத்திற்கு சோப்பு-க்கு பதில் பாசிப்பயறு மாவை தேய்த்து குளித்து வர முகம் பொலிவு பெரும், கரும்புள்ளிகள் மறையும் .

3. தக்காளி சாற்றினை முகத்தில் தடவி வர முகம் பொலிவு பெரும், கரும்புள்ளிகள் மறையும்