Home பெண்கள் மாத‌வில‌க்கு ‌பிர‌ச்‌சினைக‌ள்!

மாத‌வில‌க்கு ‌பிர‌ச்‌சினைக‌ள்!

15

மாத‌வில‌க்கு எ‌ன்பது எ‌ன்ன எ‌ன்றே பல பெ‌ண்க‌ள் அ‌‌றி‌ந்‌திரு‌ப்ப‌தி‌ல்லை. ஏ‌ன் அ‌ந்த நா‌ட்க‌ளி‌ல் வ‌யிறு வ‌‌லி‌க்‌கிறது. ர‌த்த‌ப் போ‌க்கு எ‌த்தனை நா‌ட்க‌ள் வரை இரு‌க்‌கலா‌ம், வெ‌ளியேறு‌ம் ர‌த்த‌ம் எ‌‌ந்தமா‌தி‌ரியானது எ‌ன்பது எ‌ல்லா‌ப் பெ‌ண்களு‌ம் அ‌றி‌ந்‌திரு‌க்க வே‌ண்டிய ‌விஷயமா‌கு‌ம்.

அதாவது,மாத‌வில‌க்கு எ‌ன்பது ந‌ம் கரு‌ப்பை‌யி‌ன் மாத சுழ‌ற்‌சி‌யி‌ன் காரணமாக ஏ‌ற்படுவது. எ‌ப்போது‌ம் சுரு‌ங்‌கி இரு‌க்கு‌ம் கரு‌ப்பை அ‌ந்த மூ‌ன்று நா‌ட்க‌ளி‌ல் ம‌ட்டு‌ம் ‌வி‌ரி‌ந்து கொடு‌க்‌கிறது. அ‌ந்த சமய‌த்‌தி‌ல், கரு‌ப்பை‌யி‌ன் வ‌ழியாக பய‌ணி‌க்கு‌ம் ர‌த்த‌ம் கரு‌ப்பை ‌வி‌ரி‌ந்‌திரு‌ப்பதா‌ல் உருவாகு‌ம் ஒரு பாதை வ‌ழியாக வெ‌ளியேறு‌கிறது. இதுதா‌ன் மாத‌வில‌க்கு ர‌த்த‌ப் போ‌க்‌கி‌ற்கு காரண‌ம்.
ச‌ரி மாத‌வில‌க்‌‌கி‌ன் போது வ‌லி ஏ‌ற்படுவத‌ற்கு‌க் காரண‌ம் எ‌ன்ன எ‌ன்றா‌ல், எ‌ப்போ‌து‌ம் சுரு‌ங்‌கி இரு‌க்கு‌ம் கரு‌ப்பை ‌திடீரென ‌வி‌ரிவடையு‌ம் போது அத‌ற்கு அ‌திக‌ப்படியான இட‌ம் தேவை‌ப்படு‌கிறது. அ‌த‌ற்காக அரு‌கி‌ல் உ‌ள்ள குட‌ல்களையு‌ம், ‌சிறு‌நீரக‌ப் பைகளையு‌ம் அழு‌த்‌தி‌த் த‌ள்‌ளி‌விடுவதா‌ல் தா‌ன் அ‌ப்படி ஒரு வ‌லி ஏ‌ற்படு‌கிறது.

இதை அ‌றி‌ந்துதா‌ன் அ‌ந்த கால‌த்‌தி‌ல் வ‌யி‌ற்று வ‌லி எ‌ன்று அவ‌ஸ்தை‌ப் படு‌ம் பெ‌ண்களு‌க்கு எ‌ல்லா‌ம் ஒரு ‌பி‌ள்ளை பெ‌ற்றா‌ல் ச‌ரியா‌கி‌விடு‌ம் எ‌ன்று ஆறுத‌ல் கூறுவா‌ர்க‌ள். அது உ‌ண்மைதா‌ன். குழ‌ந்தை‌ப் பே‌ற்று‌க்கு‌ப் ‌பிறகு கரு‌ப்பை‌யி‌ன் த‌ன்மை இள‌கியதாக மா‌றி‌விடு‌கிறது. அ‌ந்த அள‌வி‌ற்கு ச‌க்‌தியோடு ம‌ற்றவ‌ற்றை அழு‌த்‌தி ‌வி‌ரிவடையு‌ம் த‌ன்மையை அது இழ‌ப்பதா‌ல், குழ‌ந்தை‌ப் பே‌ற்று‌க்கு‌ப் ‌பிறகு அத‌ன் ‌வி‌ரிவடையு‌ம் த‌ன்மையு‌ம் குறை‌கிறது. ஆனா‌ல் அத‌ன் செய‌ல்பாடுக‌ளி‌ல் மா‌ற்ற‌ம் ஏ‌ற்படுவ‌தி‌ல்லை.

பொதுவாக பருவ‌‌ம் அடை‌ந்த பெண்களு‌க்கு முத‌ல் ஒரு வருட‌ம் வரை‌யி‌ல் கூட மாதவிடாய் இரத்தப்போக்கு முறையாகவும், சீராகவும், சரியான இடைவெளியிலும் ஏற்படாமல் இருப்பது வழ‌க்க‌ம்தா‌ன். ‌பிறகு ஹா‌ர்மோன் சுழற்சி சரிவர செயல்படும் போது மாதவிலக்கு முறையாக ஏ‌ற்படு‌ம்.

மாதவிலக்கு என்பது சுமார் 28 நாட்களுக்கு ஒருமுறை என்பது இயல்பான ஒன்று என்றாலும், அத‌ற்கு 3 நாட்கள் மு‌ன்னதாக ஏ‌ற்படுவதும் அல்லது 3 நாட்கள் ‌பி‌ன்த‌ள்‌ளி ஏ‌ற்படுவதும் இய‌ற்கையானதுதா‌ன்.

ஆனா‌ல் 21 நாட்களுக்கு குறைவாகவோ அல்லது 35 நாட்களுக்கு அதிகமாகவோ தள்ளிப் போகிறது என்றால் கண்டிப்பாக மருத்துவரை அணுக வேண்டும். அதுபோன்றே 7 நாட்களுக்கும் அதிகமாகவும், உதிரப்போக்கின் அளவு அதிகமாக இருப்பின் மருத்துவ சிகிச்சை எடு‌த்து‌க் கொ‌ள்ள வே‌ண்டியது அவ‌சிய‌ம்.

மாத‌வில‌க்‌கி‌ன் போது அடிவ‌யி‌ற்று வ‌லி ம‌‌ட்டும‌ல்லாம‌ல் இடு‌ப்பு வ‌லி, கா‌ல்க‌‌ளி‌ல் வ‌லியு‌ம் ஏ‌ற்படு‌ம். ‌மே‌லு‌ம் ‌சில பெ‌ண்களு‌க்கு வா‌ந்‌தி வருவது‌ம், வா‌ந்‌தி வருவது போ‌ன்ற உண‌ர்வு‌ம், மல‌ச்‌‌சி‌க்கலு‌ம் ஏ‌ற்படு‌ம். இதுவு‌ம் நாளடை‌வி‌ல் குணமா‌கி‌விடு‌ம் எ‌ன்பது உ‌ண்மை.

மேலு‌ம், அ‌திக‌ப்படியான ர‌த்த‌ப்போ‌க்கு இர‌த்த சோகையை ஏ‌ற்படு‌த்‌தி‌விட‌க் கூடு‌ம். எனவே ர‌த்த‌ப் போ‌க்கு அ‌திகமாக இரு‌க்கு‌ம் பெ‌ண்க‌ள் அத‌ற்கு‌த் தகு‌ந்த மரு‌ந்துகளை க‌ட்டாய‌ம் சா‌ப்‌பிட வே‌ண்டு‌ம்.

பொதுவாக அ‌திக ர‌த்த‌ப் போ‌க்கு ஏ‌ற்படு‌ம் பெ‌ண்க‌ள் மரு‌த்துவரை அணுகுவது உ‌ண்டு. ஆனா‌ல் பல பெ‌ண்களு‌க்கு வெ‌ள்ளை‌ப்பாடு இரு‌க்கு‌ம். ஆனா‌ல் அதை‌ப் ப‌ற்‌றி அவ‌ர்க‌ள் அ‌வ்வளவாக அல‌ட்டி‌க் கொ‌ள்வது இ‌ல்லை. சொ‌ல்ல‌ப்போனா‌ல், ர‌‌த்த‌ப் போ‌க்கை ‌விட பய‌ங்கரமானது வெ‌ள்ளை‌ப்பாடுதா‌ன் எ‌ன்பது ‌நினை‌வி‌ல் கொ‌ள்ள வே‌ண்டிய ‌விஷய‌ம்.

சில சமய‌ங்க‌ளி‌ல் மனதள‌வி‌ல் ஏதாவது ‌பி‌ர‌ச்‌சினை ஏ‌ற்படு‌ம்போது‌ம் மா‌‌த‌வில‌க்‌கி‌ல் ‌சி‌க்க‌ல் ஏ‌ற்படு‌கிறது. ‌நினை‌வி‌ல் கொ‌ள்ளு‌ங்க‌ள் பெ‌ண்களே.

மாத‌விடா‌ய் எ‌ன்பது கரு‌ப்பை‌யி‌ன் சு‌ழ‌ற்‌சி முறை எ‌ன்பதை அ‌றி‌ந்து கொ‌ண்டிரு‌ப்‌பீ‌ர்க‌ள். ஆனா‌ல் அ‌ந்த மாத‌விடா‌‌ய் சமய‌ங்க‌ளி‌ல் ‌சு‌த்தமாகவு‌ம், ச‌த்தான உண‌வுகளை எடு‌த்து‌க் கொ‌ள்ள வே‌ண்டியது அவ‌சிய‌ம். அ‌திக வேலைக‌ளி‌ல் ஈடுபடாம‌ல் ச‌ற்று ஓ‌ய்வாக இரு‌ப்பது‌ம் ந‌ல்லது.