Home சூடான செய்திகள் மாதவிடாய் பெண்கள் தீண்டத்தகாதவர்கள்

மாதவிடாய் பெண்கள் தீண்டத்தகாதவர்கள்

21

காலம் காலமாய் பெண் விடுதலைக்கு குரல் கொடுக்கிறேன் பேர்வழி என்று இங்கே நிறையே பேர் பெண் அடிமைத்தனத்தை பற்றி மட்டுமே மேலும் மேலும் பேசியும் எழுதியும் இருக்கிறார்கள். அவர்கள் மேல் எனக்கு ஒரு வகையில் பெருத்த கோபம் உண்டு. அவர்கள் ஓயாமல் பெண் அடிமையாய் நடத்தப்படுகிறாள் என்று பரிதாபப்பட்டும் கோபப்பட்டும் எழுதுகிறார்கள். நீங்களே யோசித்து பாருங்கள். ஒரு பெண் குழந்தைக்கு விபரம் தெரியும் நாள் முதல் அதனிடம் “நீ ஒரு அடிமை…உன் இனம் ஒரு காலத்தில் அடிமையாய் நடத்தப்பட்டது….நீயும் அடிமை இனத்தின் ஒரு நீட்சி” என்று கூறுவதன் மூலம் அந்த பிஞ்சு மனதில் ஒரு வகை தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்திவிடுகிறார்கள். அந்த பிஞ்சு மனதில் அடிமை விதையை அவர்களே ஊன்றிவிடுகிறார்கள்.

இவர்கள் ஆணின் இரக்கத்தால், பெண் விடுதலை அடைய வேண்டும் என்ற வகையில் எழுதவும் செய்கிறார்கள். ஆனால் நான் பெண் அடிமை என்ற கருத்தையே முன்வைக்க போவதில்லை. பெண் ஆண்களுக்கு சமமானவள் என்ற வாதத்தையும் பின்னுக்கு தள்ளி பெண் ஆணை விட உயர்ந்தவள் என்கிற ரீதியில் தான் பார்க்கிறேன்.

பெண்கள் தங்கள் அழகாலும் அறிவாலும் ஆண்களை தங்களுக்கு சேவகர்களாக ஆக்கிக்கொள்ள முடியும் என்பதை தான் நான் அழுத்தமாக எடுத்துரைக்க விரும்புகிறேன். பெண் அடிமைத்தனம் என்னும் அழுக்கான பழைய புராணத்தை பாடிப்பாடி ஏன் பெண்ணை இன்னும் தலைகுனிய வைக்கிறீர்கள். அவளை நிமிர விடுங்கள்.

அதனால் நான் இங்கே பேசப்போவதெல்லாம் ஆணடிமைத்தனத்தை பற்றியே. அதனால் நிறைய பேர் கொதிப்படைகிறார்கள். அப்படி கொதிப்படைபவர்கள் எல்லாம் தங்கள் காதலி மனைவி என்று வரும்போது உள்ளாடைகளை கசக்கவும் தயாராய் இருப்பார்கள் என்பதை வாழ்வியல் நடைமுறை கூறும். பெண்களின் ஆடைகளை துவைபப்தில் இருக்கும் சுகம் பற்றி எனக்கு வந்த ஒரு கடிதத்தை அடுத்த பதிவில் பிழை திருத்தி நீங்கள் வாசிக்க தருகிறேன்.

பெண்களே யோசித்து பாருங்கள்…ஒரு காலத்தில் கலாசாரம் பண்பாட்டு மத காவலர்கள் நமக்கு இயற்கையாய் வரும் மாதவிடாய் காலத்தில் நாம் ஏதோ தீட்டுபட்டவர்கள் போல் வீட்டின் வெளியே ஒரு பாய் விரித்து படுத்துக்கொள்ள வேண்டும் என்று கீழ்த்தரமான சட்டங்களை கொண்டு வந்தார்கள். இது எல்லாம் பெண்களின் அறிவும் அழகும் ஓங்கி நின்றால் அவர்களின் பின்னால் ஆண்கள் அலைய வேண்டிவரும் என்று பயந்த கோழை கூட்டத்தால் உருவாக்கப்பட்டது. ஆண்களே……இப்படியெல்லாம் அடக்கி வைத்தால் பெண் எப்போதும் தலை குனிந்தே வாழ்ந்து விடுவாள் அவளை உங்கள் சுகங்களுக்கு உபயோகப்படுத்திக்கொள்ளலாம் என்று தானே நீங்கள் இது போன்ற மனிதாபிமானம் இல்லாத சட்டங்களை உருவாக்கினீர்கள்.

பெண்களை குழந்தை பெற்றுத்தரும் ஒரு எந்திரம் போல் பயன்படுத்தி வந்த காலமும் உண்டு. குழந்தை பெற்றுக்கொள்வதால் பெண்களின் அழகு குறைபடும் என்று நம்பிவிடவேண்டாம். உங்கள் அழகின் மீது தகுந்த அக்கரையும் பராமரிப்பும் செலுத்தினால் போதும் நீங்கள் குழந்தை பெற்றுக்கொண்ட பிறகும் இளமையாய் தோன்றலாம். எப்போதும் உங்கள் அழகின் மீதும் கல்வி, படிப்பு இவற்றின் மீதே உங்கள் கவனம் இருக்கட்டும். குரங்கு போல் புட் போர்ட்டில் தொங்கிக்கொண்டு வரும் ஆண்களின் குரங்கு சேட்டைகளை நம்பி உங்கள் மனங்களை அலைய விடாதீர்கள். அவர்களெல்லாம் ஒயின் ஷாப்பில் மது அருந்துவதை வீரம் என்றும் கெட்ட வார்த்தையில் உளறுவதை தைரியம் என்றும் ஆண்மை என்றும் ஆண் தன்மை என்றும் நம்பி அறிவிலியாய் திரிபவர்கள். அதனால் பெண்களே உங்கள் கல்வியும் அழகும் சீராக இருந்து ஆண்களை ஆட்சி செய்யும் ஆவல் இருந்தால் உங்களுக்கு சேவை செய்ய ஆண்கள் தயாராகத்தான் இருக்கிறார்கள்.அழகான அறிவுடைய பெண்களுக்கு சேவை செய்வதில் தான் தங்கள் வாழ்வு பூரணம் அடைகிறது என்கிற உண்மையை ஆண்கள் உணரத்தொடங்கிவிட்டார்கள். என்ன ஆண்களே சரி தானே?

குழந்தை பெற்றுக்கொள்வதில் உங்கள் சம்மதம் இன்றி எதுவும் நடந்துவிடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். மாமனார் மாமியார் புருஷன் இவர்களுக்காக நீங்கள் குழந்தை சுமக்க போனால் உங்களுக்கும் கழுதைக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. தாய்மை என்பதை முதலில் நீங்கள் நேசிக்கவேண்டும். மனதளவில் அதன் மீதான தாகம் வரவேண்டும். மனம் தாய்மையை தரிக்க தயாராகவேண்டும். அதன் பின்பே நீங்கள் விரும்பும் பட்சத்தில் மட்டுமே குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும். மேலும் குழந்தை பெற்றுக்கொள்ளும் அந்த காலகட்டத்தில் கணவன் உங்களிடம் இன்னும் அன்பாகவும் சேவைகளை சரிவர செய்பவராகவும் உங்களுக்கு கீழ்படிபவராகவும் இருத்தல் அவசியம்.

பிறகு எனக்கு நிறைய கடிதங்கள் வருகின்றன. அதில் ஒரு கடிதத்தில் ஒருவர் தனக்கு பெண்களின் பாதங்கள் மிகவும் பிடிக்கும் என எழுதியிருந்தார். என் பிளாகில் உள்ள புகைப்படத்தில் வருவது போல் தன் தோழிக்கு அவர் சேவகம் செய்வதை பெரிதும் விரும்புவதாக கூறினார். மேலும் பெண்களின் பாதத்தை தொட்டு வணங்கி வழிபடுவதில் ஒரு வித தெய்வீக நிலையை அவர் அடைவதாய் குறிப்பிட்டிருந்தார். மேலும் சாலையில் நடக்கிற போதே எந்த ஒரு பெண்ணை பார்க்கிற போதே அவர் முதலில் பார்ப்பது அவளின் பாதங்களை தானாம். ஒவ்வொரு வகை பாதங்களிலும் ஒவ்வொரு சங்கதி இருக்கிறதென்கிறார்.
ஒவ்வொரு வகை பாதங்களிலும் ஒவ்வொரு சங்கதி இருக்கிறதென்கிறார்.பெண்களின் பாதங்களின் மூலம் அவர்களின் மனநிலையையும் டாமினேட்டிங் சம்பிசிவ் கேரக்டர்களையும் தெரிந்துகொள்ள முடியும் என்றும் பெண்களின் பாத அமைப்பும் அவர்கள் பாதங்களை வெளிக்காட்டும் முறையிலும் ஸ்டைல் மேனரிஸம் இதிலெல்லாம் நிறைய சங்கதிகள் இருப்பதாய் குறிப்பிட்டிருந்தார். அவை பற்றி எனக்கு முன்னரே தெளிவான வாசிப்பும் புரிதலும் இருப்பதால் எனக்கு அது ஒன்றும் புதிதல்ல. மேலும் சில அழகான பெண் பாதங்களின் புகைப்படங்களையும் அனுப்பியிருக்கிறார்க். சில உங்களுக்காக. எந்த பாதம் என்ன செய்தி சொல்கிறதென்று பின்னூட்டமிடுங்கள்.