Home பாலியல் மாதவிடாயும்,கர்ப்பமும் பெண்களை உற்சாகப்படுத்துகிறதா…?

மாதவிடாயும்,கர்ப்பமும் பெண்களை உற்சாகப்படுத்துகிறதா…?

15

பெண்களின் மாதவிடாய் பற்றிப் பார்த்தோம்,அதில் ஏற்படும் பிரச்னைகள் பற்றி சொன்னது போலவே விரக்தி,கோபம்,வெறுப்புணர்வு இவையெல்லாம் இயல்பாக தோன்றுகிறது பெண்களின் மாதவிடாய் நாட்களில்.

தான் செய்யப்போகும் செயல்களுக்காக மட்டுமே தயாராகும் மனது ஏனோ இந்த வலி நாட்களில் சிறிது ஓய்வு எடுத்துக்கொண்டால் நல்லது என்பது போல் நினைத்துவிடும்.

மாதவிடாய் நாட்களில் நாம் ஏற்கெனவே பெற்று இருக்கும் கருமுட்டைகள் உடைந்து இரத்தப்போக்காக நமக்கு மாதந்தோறும் வருகிறது.இதனால் பெண்களுக்கு காலப்போக்கில் கருமுட்டைகளின் அளவுகள் குறையத்தொடங்கிவிடுகின்றன.அதனால் தான் பெண்கள் 25 யிலிருந்து 35 வயதுக்குள் குழந்தை பெற்றுக்கொள்ள வழியுறுத்தப்படுகின்றனர்.

மாதவிடாய் நாட்களில் வீணாக வெளியேறும் கருமுட்டைகளின் அளவு குறையக் குறைய பெண்களின் கர்ப்பம் தரிக்கும் விசயத்தில் சிக்கல் உண்டாவதாக பிரபல டாக்டர்கள் கூறுகிறார்கள்.

மாதவிடாய் நாட்களில் நாம் மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கை:
சிலர் வலி காரணமாக நடக்கவே யோசிப்பார்கள்.உட்கார்ந்த இடத்தில் சாப்பிட்டு,படுத்துவிடுவார்கள்.சிலர் சாப்பிடக்கூட பிடிக்காமல் படுத்தே இருந்தால் சுகமாக இருக்கும் போல உணர்வார்கள்.

இது தவறான முறை,நாம் இயல்பாக செய்யக்கூடிய வேலைகளை செய்து கொண்டு இருக்கலாம்.அப்போது தான் மாதவிடாய் போக்கு இயல்பாக இருக்கும்.அதற்காக கடுமையான வேலையையும் செய்யத்தேவையில்லை.
இந்தமாதிரி நேரங்களில் ஆரோக்கியமான உணவு,சுத்தமான உடை,போன்றவைகள் தான்.

முந்திக்காலத்தில் துணிகள் தான் இரத்தப்போக்குக்கு வைத்துக்கொள்வார்கள் பெண்கள்.காடுகளில் எல்லாம் இந்தத்துணிகளை சின்ன மூட்டைபோல கட்டி வைத்துக்கொண்டு வேலைகளை பார்ப்பார்கள். துணியும் போய்விட்டது.நல்ல சானிட்டரி நேப்கின் வந்துவிட்டது.இது உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கக்கூடியது.

தொற்று ஏதும் ஏற்படாமல் காக்கக்கூடியது.ஒரு நாளைக்கு 3 நாப்கின்கள் மாற்றிக்கொள்வது சிறந்தது.

அப்போதெல்லாம் ஆரோக்கிய உணவுகளை மட்டுமே உட்கொள்வார்கள்.ஆனால் இப்போது எல்லாம் செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட காய்கறிகளை உட்கொள்வதால் உடம்பில் எதிர்ப்பு சக்தி தானாக குறைய ஆரம்பித்துவிடுகிறது.

அதனால் சிறிது வலிகளைக் கூட நம்மால் பொறுக்கமுடிவதில்லை.அதிலும் டயட் என்ற போக்கை கடைபிடிக்க இன்றைய பெண்கள் ஆரம்பித்துவிட்டதால் இன்னும் உடலின் ஆரோக்கியமும்,சக்தியும் குறைய ஆரம்பிக்கிறது.

எனவே சிறிதாக தோன்றும் உடல்வலி கூட மிக அதிக வேதனையை கொடுக்ககூடியதாக ஆகிவிடுகிறது.இவ்வேளைகளில் பெண்களின் உடல்களுக்கு அதிக சத்து உள்ள உணவுகள் எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் ஆகிறது.

பேரிச்சம்பழம்,அக்ரூட்,மாதுளை,எள்ளு போன்ற சத்துள்ள ஆகாரங்கள் அதிகம் எடுத்துக்கொள்ளலாம்.மாதந்தோறும் ஏற்படும் வலிகளில் இருந்து இது நம் உடலுக்கு தெம்பளிக்கிறது.

மாதவிடாய் முடிந்து ஐந்தாம் நாட்களில் இருந்து பெண்களுக்கு அடுத்தமுறை சுழற்சிக்கு தேவையான வேலைகளை ஹார்மோன்கள் செய்ய ஆரம்பிக்கின்றன.திருமணமான பெண்கள் ஐந்தாம் நாளிலிருந்து பதினோரு நாட்கள் கணவனுடன் உடலுறவு மேற்க்கொண்டால்.கர்ப்பம் எளிதாக தரிக்கும்.

குழந்தை பெற்றுக்கொள்ள நாட்கடத்த வேண்டும் எனில் இந்நாட்களில் உடலுறவில் ஈடுபடுவதை கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும்.கர்ப்பப்பையின் வாயில் கதவு அடுத்த கட்ட கருமுட்டைகளை வாங்குவதற்காக காத்துக்கொண்டு இருக்கும்.அவ்வேளைகளில் ஆண்களின் விந்தணுக்களுடன் ஒன்றுபட்டு உள்ளே செல்லக்கூடிய ஆயிரக்கணக்கான உயிரணுக்களை ஒன்றோ,இரண்டோ மட்டுமே கர்ப்பை பைக்குள் சென்று குடிபுக ஆரம்பிக்கிறது.

திருமணம் ஆன புதிதில் இதெல்லாம் தெரியவாய்ப்பில்லை.அல்லது நமக்குச் சொல்லித்தர ஆள் இருப்பதில்லை.ஆனால் இப்போது எல்லாம் நாமே நெட்டில் சென்று தட்டிப்பார்த்து குழந்தை எப்படி பிறக்கிறது என்பது உட்பட எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள ஏதுவாக இருக்கிறது.