Home அந்தரங்கம் House Wife sex மனைவியுடன் உடலுறவுக்குப் பின் என்ன செய்ய வேண்டும்?

House Wife sex மனைவியுடன் உடலுறவுக்குப் பின் என்ன செய்ய வேண்டும்?

202

உடலுறவுக்கு முந்தைய விளையாட்டுகள் பற்றி கேள்விப்பட்டிருப்போம். ஆனால் நீங்கள் உடலுறவுக்கு பின்னான விளையாட்டுகள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இல்லை என்றால் கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்.

உடலுறவுக்கு பின் உண்டாகும் களைப்பினால் பெருபான்மையான ஆண்கள் உடலுறவுக்கு பின்னர் விளையாட்டுகளில் ஈடுபடுவதில்லை. இந்த உடலுறவுக்கு பின்னான விளையாட்டுகள் எத்தனை இன்பமானது என தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

உடலுறவுக்கு பின்னான விளையாடுகள் உங்களை அமைதிப்படுத்துகிறது. பொதுவாக அனைவருக்கும் உடலுறவுக்கு பின்னர் எதிர்மறை சிந்தனைகள் மற்றும் மன சோர்வு ஏற்படுவது வழக்கம். இந்த விளையாட்டுகள் அதனை தடுக்கும்.

உடலுறவில் ஈடுபட்ட முழு திருப்தியினை இந்த உடலுறவுக்கு பின்னர் விளையாடும் விளையாட்டுகள் தருகின்றன.

உடலுறவுக்கு பின்னர் ஆண்கள் தூங்கிவிடுவது அல்லது பெண்களை கண்டுக்கொள்ளாமல் இருப்பது பெண்களுக்கு ஒருவித கஷ்டத்தை உண்டாக்கும். உடலுறவுக்கு பின்னர் விளையாடுவது அந்த கஷ்டத்திற்கு வழிவகுக்காது.

இந்த விளையாட்டுகள் தம்பதியினருக்கிடையே நெருக்கத்தை அதிகரிக்கிறது.

உடலுறவுக்கு பின்னர் விளையாட்டுகளில் ஈடுபடுவது மீண்டும் உங்களை உடலுறவு கொள்ள தயார் செய்யும்.

ஆண்கள் உடலுறவில் உச்சமடைந்த பிறகு தூங்க வேண்டும் என்றோ அல்லது சற்று ஓய்வு தேவை என்றோ நினைக்கிறார்கள். இதனால் அவர்களால் உடலுறவுக்கு பின்னரான விளையாட்டுகளில் ஈடுபட முடிவதில்லை.

ஆனால் உடல் உறவுக்கு பின்னரான விளையாட்டுகளில் ஈடுபடும் தம்பதிகள் உடலுறவில் முழுமையான திருப்தியடைகின்றனர். தொடர்ந்து இதில் ஈடுபட நினைக்கின்றனர்.

உடலுறவுக்கு பின்னரான விளையாட்டுகள் மீண்டும் உடலுறவு கொள்வதற்காக மட்டுமல்ல. நீங்கள் முத்தமிடுதல், தொடுதல்கள், பேசுதல், ஒன்றாக குளிப்பது போன்றவற்றை கூட செய்யலாம். ஒருவேளை உங்களது துணைக்கு உடலுறவில் போதுமான திருப்தி அல்லது மகிழ்ச்சி ஏற்படவில்லை என்றால் கூட இந்த உடலுறவுக்கு பின்னரான விளையாட்டுகள் அவரது மனதை மகிழ்ச்சியாக்கும்.

இந்த உடலுறவுக்கு பின்னரான விளையாட்டுகளை குறைந்த பட்சம் ஐந்து நிமிடங்களாவது செய்வது சிறந்தது.

உடலுறவுக்கு பின்னரான விளையாட்டுகள் தாம்பத்திய வாழ்க்கையில் மிக முக்கியமானது. இதனால் கணவன் மனைவி உறவு வழுவாகும், புரிதல் ஏற்படும், கணவன் மீது மனைவிக்கு நம்பிக்கை ஏற்படும்.