Home பெண்கள் உடல் கட்டுப்பாடு மகிழ்ச்சியான‌ மாதவிலக்குக்கு . . .

மகிழ்ச்சியான‌ மாதவிலக்குக்கு . . .

32

பூப்பு… பெண்மை மலர்ந்து விட்டதற்கான முதல் அறிகுறி! அந்த ‘3’ நாள்கள், பெண்ணாகப் பிறந்த ஒவ்வொருவருக்குமே ஏதோ ஒரு வகையில் அவதியான நாள்களே..! மாதம் தவறாமல் வந்தாலும் பிரச்னை… வராவிட்டாலும் பிரச்னை… பெண் பிறவியையே வெறு க்கச் செய்கிற அந்த நாள்களில் வருகிற அத்தனை வகையான பிரச்னைகள் பற்றியும், அவற்றுக்கான தீர்வுகள் பற்றியும் பேசுகிறார் மகப்பேறு மருத்துவர் மாலா ராஜ்.
‘‘தாய் கருவுற்றிருக்கும் போது, 5வது மாதத்தில், அவளது கருவில் இருக்கும் பெண் குழந்தையின் முட்டைப் பையில் கோடிக்கணக்கி ல் முட்டைகள் உருவாகத் தொடங்கும். அந்தக் கரு, பிரசவித்து வெளியே வரும்போது, அதன் முட்டைப் பையிலிருந்த முட்டைகளின் எண் ணிக்கை லட்சங்களாகும். அதையடுத்து, கரு முட்டை உற்பத்தி இருக்காது.
அந்தப் பெண் குழந்தை, பூப்பெய்தும் போது, அதே முட்டைகள் ஆயி ரங்களாகியிருக்கும். மாதம் தோறும் மாதவிடாயின் போது, ரத்தப் போக்கில் ஒன்று, இரண்டு அல்லது அதிகபட்சமாக 3 முட்டைகள் வெளியேறும். அப்படியே முட்டைகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வரும். முட்டையின் இருப்பானது முற்றிலும் காலியாவ தைத் தான் ‘மெனோபாஸ்’, அதாவது ‘மாதவிலக்கு நின்று போதல்’ என்கி றோம்.
ரத்தப் போக்கு ஏன்?
மாதந்தோறும் மூளையில் உள்ள பிட் யூட்டரி சுரப்பியிலிருந்து, சினைப் பைக் கு சிக்னல் வரும். உற்பத்தியாகி தயா ராக உள்ள கரு முட்டைகளை, சினைக்குழாய் உள்ளே இழுக் கும். அங்கே அது ஆணின் உயிரணுவை சந்தித்தால், கருவாகி, குழந்தை யாக உருவா கும். அப்படி சந்திக்காத பட்சத்தில், கருப்பை சவ்வானது வெளியே றத் தொடங்கும். அதுதான் ரத்தப் போக்கு.
எது நார்மல்? எது பிரச்னைக்குரியது?
28-35 நாள்களுக்கு ஒரு முறை வர வேண்டும். 3 முதல் 5 நாள்கள் உதிரப் போக்கு இருக்கலாம். அந்நாள்களில் வெளியேறும் ரத்தத்தின் அளவு 80 மி.லி வரை இருக்கலாம். அதா வது ஒரு நாளைக்கு 3 முதல் 4 சானிட்டரி நாப்கின்கள் வரை மாற் றுவது நார்மல். 28 நாள் களுக்கு முன்னதாகவும், 35 நாள்கள் தாண் டியும் வருவது, 3 நாள்க ளுக்குள்ளாகவும், 5 நாள்களைத் தாண்டி யும் ரத்தப் போக்கு இருப் பது, 80 மி.லிக்கு மேலான ரத்தப் போக்கு… இதெல்லாம் பிரச்னைக்கான அறிகுறிகள்.
வலி
பூப்பெய்திய முதல் 2 வருடங்களில், மாத விலக்கின்போது, பெண்களுக்கு வலி இரு க்காது. அந்தக் காலக்கட்டத்தில் முட்டை உற்பத்தி இருக்காது. கர்ப்பப்பையின் உள் சவ்வு மட்டுமே ரத்தப்போக்காக வெளியே றும். 2 வருடங்கள் கடந்த பிறகுதான் முட் டை வெளியேறத் தொடங்கும். அப்போது தான் வலியும் ஆரம்பிக்கும். எனவே, மாத விலக்கின் போதான வலி என்பது சகஜமானதுதான். வலியானது, இயல்பு வாழ்க்கையை பாதிக்கிற அளவுக்கு அதிகமானால், கவனி க்கப்பட வேண்டிய ஒன்று.
வலிக்கான காரணங்கள் மூன்று. ‘பெல்விக் இன்ஃபெக்ஷன்’ – இடுப்பெ லும்புப் பகுதியின் தொற்று. அடுத்து என்டோமெட்ரியாசிஸ். மூன்றாவதா க அடினோமையாசிஸ். இடுப்பெலும் புப் பகுதித் தொற்றில் டி.பி உள்பட பல தொற்று இருக்கிறதா என்பது கண்டுபிடிக்க வேண்டும். மாதவிலக் கின் போது, கர்ப்பப்பையின் உள் சவ்வு மட்டுமே வெளி யே வரும். என்டோமெட்ரியாசிஸ் பிரச் னை உள் ளவர்களுக்கு, கருக்குழாய் வழியே ரத்தம் கசிந்து, பக்கத்தில் உள்ள திசு க்களைத் தொந்தரவு செய்யும். அடி னோமையாசிஸ் பிரச்னை உள்ளவ ர்களுக்கு, ரத்தப் போக்கு, எதிர் திசை யில், தசைகளுக்குள்ளே கசியும். இந்த மூன்று பிரச்னைகளையும் வலி உள்ள நேரத்தில் ஸ்கேன் மூலம் கண்டறி ந்து குணப்படுத்தலாம்.
ஃபைப்ராயிட்ஸ்
இது வயதானவர்களுக்கு வரக்கூடிய ஒரு பிரச்னை. ரத்தப் போக் கும், வலியும் மிக அதிகமாக இருக்கு ம். கர்ப்பப் பையின் தசைகளுக்குள் ளேயோ, வெளியிலோ அல்லது கர்ப் பப்பை சவ்வுக்குள்ளேயோ கட்டிகள் மாதிரி உருவாவதைத்தான் ‘ஃபைப் ராயிட்ஸ்’ என்கிறோம். இதை ஆரம் பத்திலேயே கண்டுபிடித்து, குணப்ப டுத்திவிட்டால், வலி யும் அதிக ரத்தப் போக்கும் கட்டுப்படும்.
அதிகப் போக்கு ஏன்?
அதிகமான ரத்தப் போக்கினை ‘மெனரேஜியா’ என்கிறோம். ஃபைப்ரா யிட்ஸ், தைராய்டு, அடினோமையாசிஸ், சினைப்பை நீர்கட்டிகள், ஹார்மோன் கோளாறு என இதற்குப் பல கார ணங்கள் இருக்கலாம். ஒரு சிலருக்கு மாத விலக்கு வருவதற்கு 3 – 4 நாள்கள் முன்பே பழு ப்பு நிறத்தில் திட்டுத் திட்டான ரத்தப் போக்கு தென்படும். கர்ப்பப் பையின் உள்ளே சதை வள ர்ச்சி உள்ளதா என்பதைக் கண்டறிந்து, இதற்கு சிகிச்சை தரலாம். அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், ரத்தப் பரிசோதனை, ஹீமோகிராம் சோதனை கள் அவசியம். ஹார்மோன் கோ ளாறுதான் கா ரணம் என்பது உறுதி செய்யப்பட்டால், தற்கா லிக மாக அவர்களுக்கு கருத்தடை மாத்தி ரைகள் தரப்படும். அது ஹார் மோன் சுரப்பை சீராக்கி, அதன் மூலம் ரத்தப் போக்கையும் மட்டுப் படுத்தும்.
ஃபைப்ராயிட்ஸ் என்றால், லேப்ராஸ்கோப்பி அல்லது ஹிஸ்ட்ரோ ஸ்கோப்பி சிகிச்சையின் மூலம் கட் டிகளை அகற்றலாம். கர்ப்பப் பையி ன் உள் சவ்வின் அடர்த்தி அதிகமாகி யிருப்பதுதான் காரணம் எனக் கண் டுபிடித்தால், ஹிஸ்ட்ரோஸ்கோப் பி அல்லது தெர்மா சாய்ஸ் சிகிச் சையின் மூலம் சரி செய்யலாம். லேட்டஸ் ட்டாக ‘மெரீ னா’ என்கிற கருவி பரிந்துரைக்கப் படுகிறது. இ தை, கர்ப்பப்பையி னுள் செலுத்தினால், அது ஹார்மோன்களை சுரந் து, கர்ப்பப் பையை சுருக்கும். ரத்தப் போக்கு கட்டுப்படும்.
குறைந்தால் ஆபத்தா?
சிலர் ஒரே ஒருநாள்தான் ரத்தப் போக்கு இருந்தது என்பார்கள். ‘ஆலிகோமெனரேஜியா’ எனப்படுகிற இதற்கு பிசிஓடி உள்ளிட்ட ஹார் மோன் கோளாறு, உடல் பருமன், தைராய்டு, அதிக புரோலேக்டின் சுரப்பு, டி.பி., கர்ப்பப் பையின் உள் சவ்வு மெலிந் திருத்தல் எனப் பல காரணங்கள். இதற்கும் பரிசோ தனைகளும், சிகிச்சைகளும் தே வை.
வயது கடந்தும் வராத பூப்பு
15 வயதுக்குப் பிறகும் பூப்பெய்தவில் லை என்றால் மூளையில் இருந்து சினை ப்பைகளுக்கோ, சினைப்பையி லிருந்து, கர்ப்பப்பை ஹார்மோன்களு க்கோ செல்லும் பாதையிலோ அல்ல து கர்ப்ப வாயிலோ ஏதோ பிரச்னை இருக்கலாம். இதற்கு சிகிச்சை தேவை . சிலருக்கு அபூர்வமாக பிறவியிலே யே கர்ப்பப்பை இருக்காது. அல்லது கர் ப்பப்பை முதிர்ச்சியடையாமலிருக்கும். இத்தகைய பிறவிக் கோளா றுகளை ஒன்றும் செய்ய முடியாது.