Home குழந்தை நலம் பெற்றோர்களே குழந்தைகளோடு விளையாடுங்கள்

பெற்றோர்களே குழந்தைகளோடு விளையாடுங்கள்

19

குழந்தைகளுடன் செலவிடும் நேரத்தில் நீங்கள் பொறுமையையும், புரிதலையும், கற்றுக்கொள்வதற்கு இது ஒரு முக்கிய பங்காற்றுகிறது. குழந்தைகளுடன் விளையாடும்போது ஏற்படும் பந்தம் நெடுநாள் வரை நீடித்திருக்கும். இது தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் கவலைகளை பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்பை குழந்தைகளுக்கு ஏற்படுத்திக் கொடுக்கும். கடும் மன நெருக்கடியில் உள்ள பெரியவர்களுக்கு, குழந்தைகளுடன் செலவிடும் நேரத்தின் போது மன அழுத்தம் பெருமளவு குறைகிறது.

குழந்தைகள்-பெரியவர்கள் இடையே காணப்படும் சமூக, உணர்வு சார்ந்த நடத்தைகள், அவர்களிடையே காணப்படும் பந்தம் ஆகியவற்றில் ஆக்சிடோசின் என்ற ஹார்மோன் முக்கிய பங்கு வகிக்கிறது, அது மனதிற்கு ஆறுதலையும் அமைதியையும் தருவதாகக் கருதப்படுகிறது. குழந்தைகளுடனான விளையாட்டு மனத்திற்குத் தெம்பைத் தருவதோடு மட்டுமல்லாமல் மேலும் சுறுசுறுப்படையச் செய்கிறது.

ஒரே இடத்தில் அசையாமல் இருந்து கொண்டோ அல்லது டி.வி.யை பார்த்துக் கொண்டோ இருப்பவர்களுக்கு அந்தப் பழக்கத்திலிருந்து வெளியே வரவும் இது உதவுகிறது. உங்கள் கற்பனைத் திறனை தூண்டி புதிய சிந்தனைகளை வாழ்வில் புகுத்துகிறது. இது மன ஆரோக்கியத்தை மேம்பட வைக்கிறது. நாம் வளர வளர மெல்ல விளையாடுவதைக் குறைத்து விடுவோம் எனினும் விளையாட்டு உங்களை இளமையாகவும் மூளையை சுறுசுறுப்பாகவும் வைக்க உதவும்.