Home காமசூத்ரா பெண்கள் ஆண்களுடன் கட்டில் உறவில் தொந்தரவாக இருப்பதாக நினைப்பது

பெண்கள் ஆண்களுடன் கட்டில் உறவில் தொந்தரவாக இருப்பதாக நினைப்பது

51

பெண்களுடன் அந்தரங்கம்:தாம்பத்தியத்தை பொறுத்தவரை ஆண்கள், பெண்கள் மத்தியில் ஹோர்மோன், உச்சம் எட்டும் முறை மட்டுமல்ல, ஆசைகளும் கூட வேறுபடும். ஆண்கள் பெரும்பாலும் உடல் ரீதியாகவும் பெண்கள் ஆசை பெரும்பாலும் மன ரீதியாகவும் தான் இருக்கும்.வெளியே நவநாகரிகமாக இருந்தாலும் கூட இந்த விடயத்தில் பெண்கள் கொஞ்சம் கூச்ச சுபாவத்துடன்தான் இருப்பார்கள். எனவே, ஆண்கள் கொஞ்சம் கவனமாக நடந்து கொள்ள வேண்டியது அவசியம்.

வியர்வை!
உடல் துர்நாற்றம் என்பது இயல்பான ஒன்று தான். சிலருக்கு வியர்வை சுரப்பி அதிகமாக சுரக்கும். இதனால், அவர்கள் குளித்து விட்டு உடலுறவில் ஈடுபட்டாலும் கூட துர்நாற்றம் வரும். பெரும்பாலும் தாம்பத்தியத்தின் போது தங்களிடம் இருந்து துர்நாற்றம் வெளிப்படுவதை பெண்கள் அவமானமாக கருதுகிறார்கள். ஆண்களிடம் இருந்து வெளிப்பட்டால் அசௌகரியமாக கருதுவார்கள்.

வெளிச்சம்!
சில ஆண்கள் பற்பல படங்களை பார்த்துவிட்டு, வெளிச்சத்தில் தாம்பத்தியத்தில் ஈடுபட விரும்புவார்கள். ஆனால், 70 வீதத்திற்கும் மேலான பெண்களுக்கு அப்படி ஈடுபட பிடிப்பதில்லை. மேலும், இதை அவமானமாக கருதும் மனோபாவமும் கொண்டிருக்கிறார்கள்.

உடை!
சில ஆண்கள் முற்றிலுமாக உடைகளை அகற்றிய பிறகு தாம்பத்தியத்தில் ஈடுபட விரும்புவார்கள். கிராமப்புறப் பெண்கள் மட்டுமல்ல, சில நகர்ப்புற பெண்களுமே கூட இவ்வாறு தாம்பத்தியத்தில் ஈடுபடும் போது அசௌகரிய உணர்வுடனும், சங்கடமாகவும் கருதுகிறார்கள்.