Home சூடான செய்திகள் பூஜா காந்தி படத்தில் ஆபாசம்: இயக்குனர் மனைவி போர்க்கொடி

பூஜா காந்தி படத்தில் ஆபாசம்: இயக்குனர் மனைவி போர்க்கொடி

22

 

சென்னை: நடிகை பூஜா காந்தி மீது இயக்குனர் மனைவி திடீர்  புகார் கூறி இருக்கிறார். கொக்கி, திருவண்ணாமலை உள்ளிட்ட  படங்களில் நடித்திருப்பவர் பூஜா காந்தி. தற்போது கன்னட  படங்களில் நடித்து வருகிறார். மறைந்த கன்னட நடிகை  கல்பனாவின் வாழ்க்கையை மையமாக வைத்து ‘அபிநேத்ரி‘  என்ற படத்தை தயாரித்து நடிக்கிறார். இப்படத்தின் ஸ்கிரிப்ட்  தனக்கு சொந்தமானது என்று சமீபத்தில் எழுத்தாளர் ஒருவர்  கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அத்துடன் கல்பனாவின்  குடும்பத்தாரும் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து  படத்துக்கு தடைவிதிக்கப்பட்டது. பின்னர் பூஜா காந்தி அப்பீல்  மனு தாக்கல் செய்ததில் படத்தை தொடர அனுமதி தரப்பட்டது.  இந்நிலையில் புதிய சிக்கல் எழுந்துள்ளது. மறைந்த பிரபல  கன்னட இயக்குனர் புட்டன கனகலுக்கும், கல்பனாவுக்கும்  தொடர்பு இருந்ததுபோல் நெருக்கமான காட்சிகள் வைத்து  இக்கதை அமைக்கப்பட்டிருப்பதாக நண்பர்கள் மூலம் தெரிய  வந்துள்ளது. மறைந்த ஒருவரைபற்றி தவறாக கூற பூஜாவுக்கு  என்ன உரிமை இருக்கிறது? அவர் வேறு மாநிலத்தை  சேர்ந்தவர்.

கன்னட மூத்த கலைஞர்களைபற்றி அவருக்கும் ஒன்றும்  தெரியாது. குறிப்பிட்ட காட்சிகளை படத்திலிருந்து நீக்க  வேண்டும் இல்லாவிட்டால் இதை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு  தொடருவேன் என்று புட்டன்ன கனகல் மனைவி கர்நாடக  பிலிம் சேம்பருக்கு கடிதம் அனுப்பி இருக்கிறார். விரைவில்  இதுபற்றி பிலிம்சேம்பர் நடவடிக்கை எடுக்கும் என்று தெரிகிறது.  இந்த விவகாரம் பூஜாகாந்திக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தி  இருக்கிறது. இயக்குனர் மனைவியின் புகார்களை அவர்  மறுத்திருக்கிறார்.