Home பெண்கள் கருத்தரிப்பு புதிதாக திருமணமான பெண்கள் எளிதில் கர்ப்பம் தரிக்க சில ஆலேசனைகள்

புதிதாக திருமணமான பெண்கள் எளிதில் கர்ப்பம் தரிக்க சில ஆலேசனைகள்

129

திருமணமான தம்பதியர் என்னதான் ஜாலியாக சில வருடங்கள்
இருக்கலாம் என்று நினை த்தாலும் வீட்டில் இருக் கும் பெரியவர்கள் விட மா ட்டார்கள். குழந்தை குட்டியை பெற்றுக் கொடு த்துவிட்டு நீங்கள் ஜாலி யாக ஊர் சுற்றுங்கள் என் று அவசரப்படுத்துவார் கள். புதிதாக திருமணமா ன பெண்கள் எளிதில் கர்ப்பம் தரிக்க சில ஆலேசனைகளை மரு த்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சத்தான உணவு
புதிதாக திருமணமானவர் கள் சத்தான உணவுகளை உண்ண வேண்டும். ஏனெ னில் நிலம் வளமாக இரு ந்தால்தான் விளைச்சல் நன்றாக இருக்கும். என வே புதுமண தம்பதியர் அதிக கொழுப்புச் சத்துள் ள உணவுகளை தவிர்க்க வேண்டும். நாளொன்று க்கு 8 டம்ளர் தண்ணீர் அருந்த வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத் தியுள்ளனர். பெண்கள் ஆரஞ்சு, காரட் உள்ளிட்ட வைகளை அதிகம் எடுத்துக் கொள்ளவேண்டும்
ஏனெனில் இது செக்ஸ் ஹார்மோனை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கஉதவும். ஆண்கள் மீன் உணவு கள், வெள்ளைப் பூண்டு ஆகியவ ற்றை அதிகம் உட்கொள்ள வே ண்டும். இது விந்து வளர்ச்சிக்கு உதவும். புதுமணத் தம்பதியர் தினமும் தாம்பத்ய உறவு கொள் ளவேண்டும் என்கின்றனர் மருத் துவர்கள். இதன்மூலம் ஆணின் விந்தணு உற்சாகமடையும். இது டி.என். ஏவை சிதைவடையாமல் பாதுகாக்கிறது.
முறையான மாதவிடாய் காலம்

முறையற்ற மாதவிலக்கு கர்ப்பம் தரித்த லை தாமதப்படுத்தும் எனவே இக்குறை பாடு உள்ளவர்கள் மருத்துவர்களின் ஆலோ சனையை பெறவேண்டும். கட்டுப்பான எடையை கடைபிடிக்க வேண்டும். 28 முதல் 32 நாட்களுக்குள் சுழற்சியாக பெண்களுக்கு மாதவிடாய் வருவது ஒழுங்கான மாத வி டாய் பருவமாகும். மாத விடாய் ஆரம்பிக் கும் முதல் நாளில் இருந்து 14-வது நாள் பெண்ணின் முட்டை வெளியேறும். இந்த முட்டை வெளியேறி 24 மணி நேரத்திற்குள் ஆணின் விந்தணுவை சந்தித்தால் கரு உரு வாகும் என்கின்றனர் மருத்துவர்கள். என வே மாதவிடாய் ஏற்பட்டு பதினோராவது நாளில் இருந்து உடலுறவில் இரண்டு மூன்று நாட்களுக்கு ஈடுபடும் போது கருக்கட்டல் நடைபெறுவதற்கான சந்தர்ப்பம் அதிகமாகும்.
மது, புகை கூடாது
மதுபழக்கத்தை தவிர்க்க வேண்டும். புகைப்பிடித்தலை அறவே ஒதுக்க வே ண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். பெண்கள் காபி குடிப்பதை தவிர்ப்பது கர்ப்பம் தரித்தலை 50 சதவிகித வா ய்ப்பை அதிகரிக்கிறது. தினமும் 40 நிமிட உடற்பயிற்சி அவசியம். இது தம்பதியரின் உடலில் உள்ள தேவை யற்ற கொழுப்பை குறைத்து மன அழுத்ததை நீக்குகிறது. உடலில் நோய் தாக்காமல் தங்களை தற்காத்துக்கொள்ளவேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்து ள்ளனர்.
தாயாக சிறந்த பருவம்
உலகளவில் புள்ளி விவரக் கண க்கின்படி ஒரு பெண் தன்னுடைய இருபது வயதிலிருந்து முப்பது வயதிற்குள் குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதே சிறந்த கால கட்டமாகக் கருதப்படுகிறது. 20 க்கு குறைந்தோ அல்லது முப்ப துக்கு மேற்பட்டோ குழந்தைக ளைப் பெற்றுக் கொள்வது தாயி ன் உடல் ரீதியாகவும், குழந்தை யின் வளர்ச்சி ரீதியாகவும், பல பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். முப்பது முப்பத்தைந்து வயதுக்கு மேல் கர்ப்பம் தரிக்கும் பெண்கள், இளம் வயது கர்ப்பிணிகளை விட பல இன்னல்களுக்கு ஆளாவதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.
பெண்களுக்கு வயதாவது என்பது நோயல்ல என்றாலும் வயது ஆக ஆக இடுப்பு எலும்பு நெகிழ்ந்து குழ ந்தை வெளிவருவதற்கு சுலப மாக வழி ஏற்படுத்தி கொடுக்க இயலாமல் போய்விடும். முதிர்ந் த பெண்களுக்குப் பிறக்கும் குழந் தைகளுக்கு உடல் ரீதியான பாதி ப்புகளும், மூளை பாதிப்புகளும் இருக்க வாய்ப்பிருப்பதாக மருத்து வக் குறிப்புகள் சொல்கின்றன
டவுன் சிண்ட்ரோம் எனப்படும் மூளை வளர்ச்சி குன்றிய அல்லது உடல் குறைகளுடன் கூடிய குழந்தைகள் பிறப்பதற்கு அதிக வாய்ப் புகள் இருப்பதாகத் தெரிகிறது. ஆனால் இதற்கான பரிசோதனைகள் முன் கர்ப்ப காலத்திலேயே செய்யப்பட்டு கண்டறிந்து சொல்வதற்கான மருத்துவ முன்னேற்றங்களும் இப் போது அதிகரித்துள் ளன.
நோயற்று இருங்கள்
கர்ப்பம் தரித்தபின்னர் இய ற்கையான எந்த உணவுக ளையும் விருப்பப்படி சாப்பிடலாம். செயற்கையான இரசாய னங்கள் சேர்க்கப்பட்ட உணவுகளைத் தவிர் த்தல் நல்லது. பழுத்த அன்னாசி சாப்பிடுவ தால் கர்ப்பத்திற்கு எந் தப் பாதிப்பும் இல்லை. போலிக் அசிட் எனப் படும் மாத்திரையை நாளைக்கு ஒன்று என்ற வீதத்தில் விழுங்கு வது நல்லது
இறுதியாக மாதவிடாய் ஏற்பட்ட நாளை மறக்காமல் குறித்து வைத் துக் கொள்ளுங்கள். வேறு எந்த மாத் திரை எடுக்கும் முன்னும் வைத்திய ஆலோசனை பெற வேண்டும். எந்த வொரு மருத்துவப் பரிசோதனைக்கு முன்னும் ஆலோசனை பெற வேண் டும். நீரழிவு, வலிப்பு ,ஆஸ் த்மா, ரத்த க்கொதிப்பு போன்ற நோய்கள் இரு ப்பின் கர்ப்பம் தரிப்பதற்கு முன் அவை சிறந்த கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் அப்பொழுதுதான் ஆரோக்கியமான சந்ததியை உரு வா க்க முடியும்.