Home பாலியல் பிரசவத்திற்கு பின் தாம்பத்திய வாழ்கை சிறப்பாக அமைய 8 வழிகள்

பிரசவத்திற்கு பின் தாம்பத்திய வாழ்கை சிறப்பாக அமைய 8 வழிகள்

74

இருமனம் இணையும் திருமண வாழ்க்கையில் முக்கியமான ஒன்றாக இருப்பது, தம்பதிகளின் தாம்பத்திய வாழ்கை. இவற்றை பற்றி பேசும் போது பெரும்போலனோர் தவிர்த்தல் அல்லது முகம் சுளித்தல் என்று முக பாவனை செய்வார்கள். ஆனால் தாம்பத்தியத்தை பற்றி தெரிந்து கொள்வது முக்கியமான ஒன்றாகும். என்னதான் தம்பதிகளின் தாம்பத்திய வாழ்கை சிறப்பாக சென்றாலும், கர்ப்பகாலம் மற்றும் குழந்தை என சிறிது இடைவெளி விழுந்துவிடும். இங்கு பிரசவத்திற்கு பின் தாம்பத்திய வாழ்கை சிறப்பாக அமைவதற்கான 8 வழிகளை பார்க்கலாம்.

1 உராய்வை தவிர்த்தல்
பெண்களது பிறப்புறுப்பில் வறட்சி மற்றும் புண் போன்றவை பிரசவத்தின் பின் ஏற்படுவது சாதாரணமான ஒன்று. இயற்கையாய் உராய்வை தவிர்க்கும் வழிகள் பயனளிக்காத போது, அதற்கென கடைகளில் கிடைக்கும் களிம்புகளை பயன்படுத்தலாம். இவைகளை பயன்படுத்தாமலே, உங்களால் ஈரப்பதத்தை உணர முடிந்தால் நீங்கள் தயார் என்று அர்த்தம். மேலே சொன்னது போல் இல்லை என்றால், நீங்கள் இதனால் உங்கள் துணைக்கு சரியானவராக இருக்க முடியவில்லை என்று குற்ற உணர்விற்கு உள்ளாக வேண்டியதில்லை. மேலும் வலி அதிகமாக இருந்தால் மருத்துவரை சந்திக்கவும்.

2 வலி ஏற்பட்டால் நிறுத்தவும்
பிரசவத்தின் பின் உடலுறவில் ஏற்படும் போது, அது வலி ஏற்படுத்த கூடிய ஒன்றாக இருக்கலாம். எனவே உடலுறவின் ஆரம்பத்தில் அதிக முன் விளையாட்டுகளில் ஈடுபட பரிந்துரைக்கப்படுகிறது. உங்களுக்கு உடலுறவின் போது வலி ஏற்பட்டால், உங்கள் துணையிடம் வேண்டாம் என்று சொல்லிவிடுங்கள். அவர் புரிந்து கொள்வார். ஒரு குழந்தைக்குப் பிறகு உடலுறவில் சமரசம் செய்யப்பட வேண்டும். பல நிலைகளை சோதித்து, நீங்கள் எந்த நிலையில் மிகவும் வசதியாக உணர்கிறீர்களோ அதை தொடருங்கள். இதற்கான சில உடல் பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். மேலும் வலி அதிகமாக இருந்தால் மருத்துவரை சந்திக்கவும்.

3 நெருக்கம்
உடலுறவு உங்களுக்கு எந்த விதமான மன அழுத்தம் மற்றும் அசௌகரியம் ஏற்படுத்த்தினாலும், அதில் ஈடுபடாதீர்கள். பிரசவத்தின் பின் உங்களது உணர்ச்சி அதிகரித்தால், முன்னெப்போதையும்விட வலுவாக இருக்கும். உடலுறவு எப்போதும் உங்களை நெருக்கமாக உணர செய்யும். உங்களுக்குள் இருக்கும் இந்த நெருக்கம் உங்கள் உடலுறவிற்கு உற்சாகம் கொடுக்கும். குழந்தையை கவனித்து கொண்டு, உங்கள் காதலையும் குறையாமல் பார்த்து கொள்வது கடினமான ஒன்றுதான். ஆனாலும் நீங்கள் செய்து தான் ஆக வேண்டும்.

4 உள்ளாடை அணிதல்
இது இப்போது பெரிதாகி இருக்கும், உங்கள் மார்பகங்களை சரியான இடத்தில் வைக்க உதவுகிறது. நீங்கள் தாய்ப்பால் கொடுப்பதால் அவற்றை தனியாக விட்டுவிட வேண்டும் என நினைப்பீர்கள். அவை எவ்வளவு மென்மையானவை, தொடுதல் எப்படி கையாளப்பட வேண்டும் என்று அவருக்குச் சொல்லுங்கள். பல பெண்களுக்கு உடலுறவின் பின் கசிவு ஏற்படுகிறது.

5 கனிவாக எடுத்துரைத்தல்
பிரசவத்தின் பின் உடலுறவிற்கு நீங்கள் தயாராக இருந்தாலும், உங்கள் உடல் அதற்கு ஒத்துழைக்காமல் போகலாம். அது போன்ற சமயங்களில் நீங்கள் உங்கள் துணையிடம் கோபப்படுவதை விட, கனிவாக எடுத்து கூறுங்கள். அதை அவர் உணர்ந்து ஏற்றுக்கொள்வர். அதிக எதிர்பார்ப்புகளை வைத்திருக்காதீர்கள், அதன் இடிப்பாடு உங்களுக்கு மோசமான அனுபவத்தை ஏற்படுத்தலாம். உடலுறவில் மிகுந்த நெருக்கம் வலியுறுத்தப்படுகிறது. புணர்ச்சிப் பரவச நிலைக்கு பின்னான உடலுறவு உங்களுக்கு உதவியாக இருக்கும்.

6 குழந்தை
குழந்தைக்குப் பிறப்புக்கு பிந்தைய காலங்களில், அளவுக்கு மேல் தரத்தில் கவனம் செலுத்துங்கள். குழந்தைகள் நன்றாக உறங்கும் நேரத்தை அறிந்து செயல்படுவது, உங்களுக்கு உதவியாக இருக்கும். இது உங்களை வசதியாகவும் உணரச்செய்யும். உங்கள் உடலுறவு குழந்தை பிறப்பிற்கு முன் இருந்தது போல் இப்போது இருக்காது.

7 நேரம் எடுத்து கொள்ளுங்கள்
ஹார்மோன் சமநிலையின்மை காரணமாக, பாலுணர்ச்சி இழப்பு இயற்கைதான். நீங்கள் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் தயாரான சமயத்தில் மட்டுமே உடலுறவில் ஈடுபட வேண்டும். உங்கள் கணவர் வருத்தப்பட நீங்கள் மட்டும் காரணம் அல்ல. சில அம்மாக்களுக்கு ஒரு வருடம் அல்லது அதற்கு மேல் ஆகலாம். நீங்கள் ஆரம்பத்தில் தயாராக இருந்தால், உங்கள் கணவர் உண்மையில் அதிர்ஷ்டசாலி தான். நிச்சயமாக, இதுகுறித்து மருத்துவரை ஆலோசிக்க வேண்டும். சில தாய்மார்கள் அதை உங்களின் முதல் முறை போல் உணர செய்யும் என்று சொல்கிறார்கள்.

8 பிறப்பு கட்டுப்பாடு
இதற்கு சிறந்த தீர்வாக, பிறப்பு கட்டுப்பாடு மாத்திரைகள் அல்லது பாதுகாப்பான உடலுறவு பரிந்துரைக்கப்படுகிறது. உங்களுக்கு மீண்டும் ஒரு குழந்தை பெற்றுக்கொள்ளவோ அல்லது உடனடியாக பெற்றுக்கொள்ளவோ விருப்பம் இல்லை என்றால், இம்முறைகளை பயன்படுத்தலாம்.