Home ஆண்கள் ஆண்மை பெருக பல மணி நேரம் விறைப்புத்தன்மையுடன் காணப்பட்ட இனப்பெருக்க உறுப்பு?

பல மணி நேரம் விறைப்புத்தன்மையுடன் காணப்பட்ட இனப்பெருக்க உறுப்பு?

714

வயாகரா என்ற வார்த்தையை சொன்னதும், 60களில் தொடங்கி, இன்றைக்கு பரவலாக பேசப்படும் 90ஸ் கிட்ஸ் வரைக்கும், புருவம் மேலே உயரும். என்ன வயசு கோளாறு எட்டிப்பார்க்குதா? என்கிற மாதிரியான கிண்டல், கேலி பேச்சுகளை எதிர்கொள்ள வேண்டி வரும். இன்னமும் வயாகரா என்றால், பாலுணர்வை தூண்டும் மருந்து என்றே பலரும் நினைத்துக்கொண்டிருக்கின்றனர். உண்மை அது இல்லை.

ஏதேதோ கண்டுபிடிக்கப்போய், கடைசியில் வேறொன்று வந்த கதையை கேட்டிருப்போம். தான் பாட்டுக்கு சிவனேன்னு இருந்த நியூட்டன் தலையில் ஆப்பிள் விழுந்து ஈர்ப்பு சக்தியை கண்டுபிடித்த மாதிரி, வேறு ஏதோ பிரச்சனைக்கு மருந்து கண்டுபிடிக்கப்போய், கடைசியில் அது பாலுணர்வை தூண்டும் மருந்தாகவே நிலை பெறும் அளவுக்கு மாறிவிட்டது.

அமெரிக்காவை சேர்ந்த மருந்து நிறுவன ஆராய்ச்சியாளர்கள், இதய தமனி விரிவடையச்செய்யும் மருந்தை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் மூழ்கியிருந்தனர். அதில் வெற்றியும் கண்டு, இறுதிகட்ட பரிசோதனையாக, ஒரு மனிதனிடம் மருந்தை சோதித்து பார்த்தனர். அவர்கள் எதிர்பார்த்ததை விடவுமே, மாத்திரை சூப்பராக வேலை செய்தது.

இதில் அதிர்ச்சிகர திருப்பமாக இதய தமனி விரிவடைந்ததோடு மட்டுமல்லாது, மாத்திரை உட்கொண்டவரின் இனப்பெருக்க உறுப்பு, பல மணி நேரம் விறைப்புத்தன்மையுடன் காணப்பட்டது. ஏதோ தப்பு நடந்து போச்சு டோய்! என்று குழப்பத்தில் ஆராய்ச்சியாளர்கள் குழம்பி போயிருக்க, இன்னொரு பக்கம் அதற்கான மார்கெட் எகிற ஆரம்பித்தது.

புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட மாத்திரை, இதய தமனியை மட்டும் விரிவடைய செய்வதில்லை, ஆணுறுப்பின் விறைப்புத்தன்மையை அதிகரித்து, நீண்ட நேரம் பாலுணர்வை தூண்டச்செய்யும் என்பதை, மீண்டும் ஆராய்ச்சி செய்து உலகிற்கு அறிவித்தனர். இதயம், நுரையீரல் போன்றவற்றைப் பலப்படுத்த கண்டுபிடிக்கப்பட்ட மாத்திரை, இன்றைக்கு வேறு சிலவற்றையும் பலப்படுத்திக்கொண்டிருக்கிறது.

llife happy too-good

“ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்” என்று சும்மா பேச்சுக்கு சொல்லுவோம். ஒரு மாங்காய் கிடைக்குமா என்று நினைத்துக்கூட நேரத்தில், இரண்டு ஜாக்பாட் வாய்ப்பை ஒரே நேரத்தில் அள்ளிய, அமெரிக்க மருந்து நிறுவனம், இன்றைக்கு வரைக்கும் அசைக்க முடியாத ஜாம்பவனாக உருவெடுத்திருக்கிறது. நின்னு பேசும் வரலாறு.