Home சமையல் குறிப்புகள் பஞ்சாபி சிக்கன் கறி இப்படி சமைத்து சாப்பிட்டு பாருங்கள்!

பஞ்சாபி சிக்கன் கறி இப்படி சமைத்து சாப்பிட்டு பாருங்கள்!

30

பஞ்சாபி சிக்கன் கறி மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும். பஞ்சாபி சிக்கன் கறி எப்படி சமைப்பது எனப் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

சிக்கன்-1/2கிலோ
தயிர் – 3/4கப்
இஞ்சி விழுது-1 டீஸ்பூன்
பூண்டு விழுது-1 டீஸ்பூன்
மிளகாய் தூள்-1 டீஸ்பூன்

அரைப்பதற்கு:
பெரிய வெங்காயம்- 3
தக்காளி-3
கிராம்பு-2
மிளகு-5
ஏலக்காய்-3
மல்லித்தூள் -1டீஸ்பூன்

செய்முறை

அரைக்க கொடுத்துள்ள பொருட்களை நன்றாக மிக்சியில் இட்டு அரைத்துக் கொள்ளவும்.

கழுவி சுத்தம் செய்யப்பட்ட கோழியுடன், தயிர், இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு போட்டு பிரட்டி 1 மணிநேரம் ஊற வைக்கவும்.

கடாயை அடுப்பில் வைத்து 5 டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அரைத்து வைத்துள்ள விழுதை போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். மசாலா நன்கு வதங்கிய பின்,கோழியை அதனுடன் சேர்த்து வதக்கவும்.

பிறகு தேவையான அளவு தண்ணீர் விட்டு, கோழி வெந்ததும் இறக்கி வைத்து, கொத்தமல்லி இலையைப் போடவும்.

சப்பாத்தி, பரோட்டாவிற்கு ஏற்ற பக்கா உணவாகும்.