Home குழந்தை நலம் பச்ச குழந்தைகளின் தாய்களே! உங்க கவனத்திற்கு . !

பச்ச குழந்தைகளின் தாய்களே! உங்க கவனத்திற்கு . !

19

ஒரு தாய்க்கு தனது வாழ்நாளில் எது சவாலாக இருக் கிறதோ இல்லையோ ஆனால்

குழந்தை வளர்ப்பில், அதுவும் கைக்குழந்தையைக் கையாள்வது ஒவ்வொரு தாய்க் கும் சவாலான விஷயம்தான். அ திலும் ஒரு வயதுக்குட்பட்ட குழ ந்தை அதிகமாக அழும்போது, அது எதற்காக அழுகிறது, என்ன செய்தால் அழுகை நிற்கும் எனத் தெரியாமல் திகை க்கிற தாய்மார் தான் அதிகம்.

கைக்குழந்தையைப் பொறுத்தவரை ‘அழுகை’என்பது ஒருமொழி. தாயின் கவனத்தை த் தன்மீது ஈர்ப்பதற்குப் பயன்படு த்தும் எளியவழி. பசி,தாகம், தனி மை, களைப்பு போன்ற சாதாரண க் காரணங்களால் குழந்தை தின மும் மொத்தத்தில் சுமார் ஒரு மணி நேரம் அழுவது இயல்பு. இ க்கால அளவு அதிகரித்தால் அல் லது குழந்தை தொடர்ந்து அழுகி றது என்றால், அதைக் கவனிக்க வேண்டும்.

பசிக்கு அழும் குழந்தை

குழந்தை பசிக்காகத்தான் அழுகிறது என்பது பல தாய் மாரின்முதன்மைக் கணிப் பு. இது பெரும்பாலும் உண் மைதான் என்றாலும், பசி யையும் தாண்டிப் பல கார ணங்களால் குழந்தை அழ க்கூடும்.

குழந்தை பசிக்காகத்தான் அழுகிறதா என்பதை உறுதி செய்ய, தாயானவர் தன் விரலை நன்றாகச் சுத்தப்படுத்திக் கொண்டு, குழந்தை யின் வாய்க்குள் வைத்தால், உடனே குழந்தை விரலைச் சப்பத் தொடங்கிவிடும். இதன் மூலம் குழந்தை பசியால் அழு கிறது என்பதை உறுதிப்படுத்தி க் கொள்ளலாம். பொதுவாக, கு ழந்தை போதிய அளவு பால் குடித்த பின்னர், இரண்டு மணி நேரத்துக்குள் அழுதால், அது நிச்சயம் பசிக்காக இரு க்காது. வேறு காரணத்தால் அது அழக்கூடும்.

பசிக்கு அடுத்தபடியாகத் தாகம் எடுத்தால் குழந்தை அழும். உதாரணமாக, திட உணவுசாப்பிடும் குழந்தைக் குச் சில தாய்மார் உணவை க் கெட்டியாகப் பிசைந்து கொடுத்துவிடுவார்கள். இத னால் உணவு விக்கிக்கொ ள்ளும். குழந்தைக்குத் தாகம் எடுக்கும். இதனால் சாப் பிட்ட பிறகு குழந்தை அழும். அப்போது கொஞ்சம் தண் ணீரைக் கொடுத்தால், குழந்தையின் அழுகை நின்று விடும்.

பால் குடித்த பிறகு சிறுநீர் கழிப் பது, மலம் கழிப்பது போன்றவற் றால் உள்ளாடை, படுக்கை போ ன்றவை ஈரமாகி விடும்போது, அதைத் தெரியப்படுத்தவும் குழ ந்தை அழும். குழந்தை இரவில்அழுவதற்குப்பெரும்பா லும், இதுதான் காரணமாக இருக்கும். ஈரமான துணி யை மாற்றிவிட்டால் அழுகை நிற்கும்.

ஆடைகளில் கவனம்!

அதிகக் கனமான ஆடைகள், இறுக்கமான ஆடைகள், உறுத் துகிற ஆடைகள் மற்றும் கால் கொலுசு, கழுத்து செயின், இடு ப்பு ஆபரணங்கள் ஆகியவற் றாலும் குழந்தை அடிக்கடி அழலாம். பருத்தி நூலில் த யாரிக்கப்பட்ட `டயபரு’க்குப்பதிலாக, நாகரிகம் என்ற பெயரில் இப்போது செய ற்கை இழையில் தயாரிக் கப்பட்ட `டயபரை ’த்தான் குழந்தைக்குப் பெரும்பா லும் அணிவிக்கி றார்கள்.

அதிலும் `டயபர்’ என்பது அவசரத் தேவைக்கு என்பது போய், இப்போது எந்த நேரமும் அணிவிக்கப்படும் ஓர் உள்ளாடையாக அது மாறிவி ட்டது. இதனால் ஒவ்வாமை ஏற்பட்டு, குழந்தைக்கு அரிப்பு ம் தடிப்பும் உண்டாகின்றன. இதன்காரணமாகவும் குழந் தைகள் அடிக்கடிஅழுவதுண்டு .

பூச்சி கடித்தால்?

தன்னுடைய உடலில் ஏதேனும் புதிதாக ஊர்வது போ ல் உணர்ந்தால், அப்போது குழந்தை அழலாம். எறும்பு, கொசு, பூச்சி, பேன் கடித்தாலோ, சருமம் அரித்தாலோ குழந்தை அழும். புட்டிப்பாலில் சர்க்க ரை கலந்து குழந்தைக்குக் கொடுக்கு ம்போது, அதில் சில சொட்டுகள் வாய் ஓரத்தில் ஒழுகியிருக்கும். சர்க்கரை வாசனைக்கு வரும் எறும்பு கடித்து விடும். அப்போது குழந்தை யின் சரு மத்தில் ஒவ்வாமை ஏற்பட்டுச் சிவந்த தடிப் புகள் ஏற்படலாம்.

சிலநேரம், ஒவ்வாமை குழந்தையின் குரல் நாணையு ம் தாக்கியிருந்தால், சருமத் தடிப்புகளோடு சரியாக மூச்சுவிட முடியாமல் குழந்தை அழும். அப்போது குழந்தையின் குரலும் மாறுபட்டிருக்கும்.

வயிற்று வலி – காது வலி

குழந்தைக்கு வயிற்றுவலியும் காதுவலியு ம் ஏற்படுவது மிகவும் சகஜம். குழந்தை தன்னுடைய தொடையை வயிற்றில் மடித்து வைத் துக் கொண்டு அழுதால், அதற்கு வயிற் றில் வலி இருக்கிறது என்று புரிந்து கொள்ளலாம்.

குழந்தைக்கு அளவுக்கதிகமாகப் பால் அல்லது திட உணவைக்கொடுத்து விட் டால், வயிறு உப்பி அழ ஆரம்பிக்கும். இதுபோல் உணவுடன் அதிகக்காற்று வயிற்றுக்குள் சென்றுவிட்டாலும், குழந்தை அழும். தா ய்ப்பால் கொடுத்து முடித்தவுடன், ஒவ்வொரு முறையு ம் குழந்தையைத் தூக்கித்தோ ளில் போட்டுக்கொண்டு அதன் முதுகைத் தட்டிக் கொடுக்கவே ண்டும். இதனால்குழந்தையின் வயிறு தாயின் தோளில் அழுந் திக்காற்று வெளியேறி விடும் . குழந்தையும் அழுவதை நிறு த்திவிடும்.

சில வேளை குழந்தைக்குக் குடல் சொருகிக் கொள்ளு ம். இதனால் குழந்தைக்கு வயிறு வீங்கி, வலி தாங்க முடியாமல் தொடர்ந்து அழும். அப்போது மலத்தில் ரத்தம் போ கும். கூடவே வாந்தியும் வரும். உணவு ஒவ்வாமை காரணமாக வும் வயிற்றில் வலி வந்து குழந் தை அழும்.

காதின் உட்பகுதியில் செவிப்பறைக்குப் பின்னால் சீழ் இருக்கும்போது குழந்தைக்குக் காது வலிக்கும். அப் போது காதுப் பகுதியைத் தொட் டால், அதிகமாக அழும். செவிப் பறையில் சீழின் அழுத்தம் அதி கமாகி அதில் துளை விழுந்து, வெளிக்காதின் வழியாகச் சீழ் வடிந் துவிட்டது என்றால், காது வலி குறைந்துவிடும். இதன் பிற கு குழந்தை அழாது.

சளி, ஜலதோஷம், வயிற்றுப்போக்கு

சளி, மூக்கு ஒழுகல், மூக்கு அடைப்பு, காய்ச்சல், தலை வலி, உடல் வலி, இளைப்பு, நெஞ்சில் வலி, சிறுநீர்க் கடுப்பு, மலச் சிக்கல், வாந்தி போன்ற காரணங்களாலும் குழந்தை அழ க்கூடும். இந்த மாதிரி நேரங்க ளில் குழந்தை பால் குடிக்காது; தொடர்ந்து அழுவது, வீறிட் டு அ ழுவது, உடலை முறுக்கி அழுவது என்று அழுகைச் சத் தம் வேறுபடும்.

வயிற்றுப்போக்கு காரணமாகக் குழந்தைக்கு வயிற்றி ல் வலி வந்து அழும் அல்லது உடலில் நீர்ச்சத்து அதிகமாக வெளியேறி, தாகம் அதிகரித்து நாக்கு வறண்டு அழுவது வ ழக்கம். மருத்துவரைப் பார்ப்ப தற்குள் சிறிது உப்புச் சர்க்க ரைக் கரைசலைத் தண்ணீரில் கலந்து குழந்தைக்குக் கொடுத் தால், அழுகை நின்றுவிடும்.

குழந்தைக்குக் குளிர் அடித்தாலும் அழும். புழுக்கமாக இருந்து உடல் வியர்த்தாலும் அழும். வாஷிங்மெஷின் , வாக்குவம் கிளீனர், ஹேர் டிரையர் போன்றவற்றின் சத்தம் பிடிக்காமல் குழந் தை அழலாம். இந்தப் பிரச்ச னைகளைச் சரி செய்தால் மட்டுமே குழந்தையின் அழு கை நிற்கும்.

பால் பற்கள் ஒவ்வொன்றாக முளைக்கத் தொடங்கும் போது குழந்தை அழும். சில மருந்துகளின் பக்க வி ளைவால் வயிற்றைப் புரட்டும்; வாந்தி வருவது போலிருக்கும். இதனாலும் குழந்தை அழலாம்.

தூக்கும்போது கவனம்!

ஆறு மாதங்கள் வரையிலும் குழந்தை யின் தலை நிற்காதபோது, கழுத்துப் பகுதியை நல்ல பிடிமானம் கொடுத்து த்தான் தூக்க வேண்டும். இல்லையென்றால், குழந்தை க்குக் கழுத்து சுளுக்கி வலி ஏற்ப டும். அப்போது தொடர்ச்சியாக அழும். இதற்குச் சுளுக்கு எடுக் கிறேன் என்று சுயமருத்துவம் செய்யக்கூடாது. உரிய மருத்து வரை அணுகித் தகுந்த சிகிச்சை யைப் பெற்றுக் கொண்டால் மட்டுமே சரியான தீர்வு கிடைக்கும்.

களைப்பும் உறக்கமும்

குழந்தை தொடர்ச்சியாக அழு வதற்குக் களைப்பு ஒரு முக்கி யக் காரணம். எந்த நேரமும் குழந்தையைத் தூக்கிவைத்துக் கொஞ்சுவது, விளையாடுவது, தொட்டிலில்போட்டு ஆட்டுவது , உறவினர் படையெடுப்பு போ ன்றவற்றால் குழந்தை களைத் துவிடும். இதனாலும் அழும். இந்தப் பழக்கங்களைக் குறைத்துக் கொண்டால் குழந்தை அழுவதும் குறையு ம்.

குழந்தைகளுக்குப் பொழுதுபோ காதபோது, தனியாக இருக்கும் போது, விளையாடத் துணை கி டைக்காதபோது, தன்னையாரும் கவனிக்கவில்லை என்று நினை க்கும்போதுஸ இப்படிப் பல சந்தர்ப்பங்களில் குழந்தை கள் அழும். அப்போது குழந்தையைக் கைகளில் தூக்கி வைத்துக் கொண்டாலேயே அழு கையை நிறுத்திவிடும். அல்ல து, குழந்தையுடன் பேசி, சேர்ந்து விளையாடி, சிரிப்பூட்டினால் அழுகை நிற்கும்.

பொம்மை, பந்து என்று வயதுக்கு ஏற்ற விளையாட்டுப் பொருட்களைக் கையில் கொடுத்துவிட்டால் குழந்தை அழுவதை நிறுத்திவிடும். ஒரு வய துக்கு மேற்பட்ட குழந்தையாக இரு ந்தால் சிறிது நேரம் காரில்/இரண்டு சக்கர வாகனத்தில் பாதுகாப்பாக வெளியே அழைத் துச் செல்லலாம்.

குழந்தைக்கு உறக்கம்வந்தால்கூட, சிறிதுநேரம் அழு ம். அப்போது தாலாட்டுப் பாடி உறங்க வைப்பதுதான் ஒரே தீர்வு. ஆனால், இன்றைக்கு எத் தனை இளம் தாய்மாருக்குத் தாலாட்டுப் பாடத் தெரியும்? இ தற்கும் ஒரு வழி இருக்கிறது. செல்போனில் தாலாட்டுப் பாடல்களைப்பதிந்து கொ ண்டு, இம்மாதிரி நேரங்களில் போட்டுவிட்டால், அதை க்கேட்டுக்கொண்டே குழந்தை உறங்கிவிடும்.