Home சூடான செய்திகள் பகலில் கல்லூரிக்கு ராத்திரியில் விபச்சாரத்துக்கு..!

பகலில் கல்லூரிக்கு ராத்திரியில் விபச்சாரத்துக்கு..!

17

பகலில் கல்லூரிப் பெண்கள் போலவும், ராத்திரியானால் விபச்சாரத்திலும் ஈடுபட்டு பரபரப்பைக் கிளப்பி வருகின்றனராம் நாக்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான இளம் பெண்கள், இவர்களில் பெரும்பாலானவர்கள் கிராமப்புறத்தைச் சேர்ந்த இளம் பெண்கள் என்பதுதான் பரபரப்புக்கு முக்கியக் காரணம்.
இதற்கு முன்பு வரை நாக்பூரில் உள்ள கங்கா ஜமுனா பகுதியைத்தான் அந்த ஊரின் சிவப்பு விளக்குப் பகுதியாக அனைவரும் பார்த்து வந்தனர். ஆனால் தற்போதோ, நாக்பூரைச் சுற்றியுள்ள பல கிராமங்களைச் சேர்ந்த இளம் பெண்கள் விபச்சாரத்திற்காக நாக்பூரை முற்றுகையிட்டு வருகின்றனராம்.
வாடி, ஹிங்கனா, கல்மேஸ்வர், கம்ப்டீ உள்ளிட்ட நாக்பூரைச் சுற்றியுள்ள சிறிய ஊர்கள், கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான இளம் பெண்கள் நாக்பூரில் கல்லூரியில் படிக்க வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்களில் கல்லூரி முடிந்ததும் இரவில் விபச்சாரத்தில் ஈடுபடுகின்றனராம்.
அதேபோல பல இளம் பெண்கள் வேலை பார்ப்பதாக கூறி நாக்பூரில் வந்து தங்கி அங்கு விபச்சாரத்தில் ஈடுபடுகின்றனராம்.
இவர்களில் பெரும்பாலானவர்கள் தங்களது படிப்புச் செலவு, குடும்பச் செலவுக்காக விபச்சாரத்தில் ஈடுபடுவதாக கூறுகின்றனர். ஆனால் பலர் ஆடம்பரமாக வாழ்க்கை நடத்த விபச்சாரத்தை நாடுவதாக கூறுகின்றனர்.
நாக்பூரைச் சேர்ந்த வர்ஷா பாக்ளே என்ற சமூக சேவகி கூறுகையில், பல இளம் பெண்கள் தொலை தூரத்திலிருந்து வந்து நாக்பூரில் தங்குகின்றனர். படிக்கவும், வேலை பார்க்கவும் வரும் இவர்கள் தங்களது குடும்பத்தைக் காக்கவும், தங்களது செலவுகளுக்காகவும் இரட்டை வாழ்க்கை நடத்துகின்றனர்.
இவர்களுக்கு 18 முதல் 25 வயதுக்குள்தான் உள்ளது. அதேசமயம், இவர்கள் அனைவரும் வறுமையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறி விட முடியாது. நல்ல வசதி படைத்த பெண்களும் இவர்களில் அடக்கம். இவர்கள் ஆடம்பரமான வாழ்க்கைக்காகவும், ஜாலிக்காகவும் விபச்சாரத்தில் ஈடுபடுகின்றனர்.
இவர்களில் பலரது குடும்பங்கள் நாகரீகமானவை, சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் இருப்பவை. வசதியானவையும் கூட. இவர்களும் விபச்சாரத்தில் ஈடுபடுவதுதான் ஆச்சரியம் தருகிறது.
விபச்சாரத்தில் ஈடுபடும் பல இளம் பெண்கள் கலை, அறிவியல், வணிகப் படிப்புகளைப் படித்து வருபவர்கள் ஆவர்.
இந்தப் பெண்களுக்கு பணத்தின் மீதான மோகம் அதிகமாக இருக்கிறது. கை நிறையப் பணத்தைப் பார்த்து விரும்பியே இந்த தொழிலுக்கு வருகின்றனர். பலர் நேரடியாக வாடிக்கையாளர்களிடம் பணத்தைப் பெறுகின்றனர். சிலர் புரோக்கர்கள் மூலமாக பணத்தைப் பெறுகின்றனர்.
இந்தப் பெண்கள் ஒவ்வொருவரும் ஏகப்பட்ட சிம் கார்டுகளை வைத்துள்ளனர். குறைந்தது 5 முதல் 6 சிம் கார்டுகளை இவர்கள் வைத்துள்ளனர். தங்களுக்குப் பிடித்த வாடிக்கையாளர்களிடம் எண்களையும் கொடுத்துக் கொள்கின்றனர்.
இவர்கள் ஒரு இரவுக்கு குறைந்தது 6000 வசூலிக்கின்றனர். சிலர் ரூ. 10,000 வரை கூட சம்பாதிக்கின்றனர்.
சில பெண்கள் மணிக்கணக்கிலும் ரேட் பேசி வருகின்றனர். அதாவது ஒரு மணி நேரத்திற்கு ரூ. 1500 முதல் 2000 வரை இவர்கள் வசூலிக்கின்றனர்.
இந்தப் பெண்கள் குறைந்தது வாரத்திற்கு 2 முறை விபச்சாரத்தில் ஈடுபடுகின்றனர். இதனால் இவர்களிடம் மாதந்தோறும் பெருமளவில் பணம் புழங்குகிறது. அதை வைத்து ஜாலியாக விருப்பப்படி செலவு செய்து வருகின்றனர்.
பல பெண்கள் இந்தப் பணத்தை வைத்து ஆடம்பரமாக செலவிடுகிறார்கள். காஸ்ட்லியான செல்போன்கள் வாங்குகிறார்கள். மேக்கப் சாதனங்களை வாங்கிக் குவிக்கிறார்கள். விதம் விதமான டிரஸ் வாங்கிப் போட்டுக் கொள்கின்றனர்.
நாக்பூரில் தொழில்முறை செக்ஸ் தொழிலாளர்கள் 300 பேர் உள்ளனர். இவர்களில் முக்கால்வாசிப் பேர் மாணவிகளே என்றார் வர்ஷா.