Home பாலியல் தூக்கத்தில் பல செக்ஸ் கனவுகள் வந்தால் என்ன செய்ய வேண்டும்..?

தூக்கத்தில் பல செக்ஸ் கனவுகள் வந்தால் என்ன செய்ய வேண்டும்..?

28

ஒரு டாக்டர் டீன் ஏஜ் ஆண்களுக்கு பதில் அளிக்கிறார் எல்லோரும் படித்து தெரிந்து கொள்ளவும். ஹலோ டாக்டர், நான் டீன் ஏஜ் பருவத்தில் உள்ளேன். எனக்கு தூங்கும்போது விந்து வெளியேறுகிறது. இது வாரத்துக்கு இரண்டு மூன்று முறை நடக்கிறது.

நான் சுய இன்பம் செய்வதில்லை. ஆனால் எனக்கு பல செக்ஸ் கனவுகள் வருகின்றன. இதில் பல வினோதமான கனவுகள் வேறு, உதாரணமாக ஆண்களோடு செக்ஸ் செய்வது போல கனவுகள் வருகின்றன. இந்த கனவுகள் வரும் போது எனக்கு விந்து வெளியேறிவிடுகிறது. இந்த வியாதியை எப்படி குணப்படுத்துவது?

பதில்:- இதை ஆங்கிலத்தில் (Nocturnal Emission ) அல்லது (Wet Dreams) என்று சொல்கிறார்கள். நம்ம ஊரில் ரகசிய நோய் (?) வைத்தியர்கள் இதை “சொப்பன ஸ்கலிதம்” என்று கூறுவார்கள்.

முதலில், இது ஒரு நோயே கிடையாது. இது ஒரு சர்வ சாதாரணமான நிகழ்வுதான். கிட்டத்தட்ட 80% ஆண்களுக்கு, குறிப்பாக டீன் ஏஜ் பருவத்தில் அடிக்கடி நிகழும் சம்பவம் தான் இது. சுய இன்பம் செய்வது போலவே, இதுவும் ஒரு வகை இயற்கையான விசயமே.

இரண்டாவதாக, நீங்கள் சுய இன்பம் செய்வதில்லை என்று சொல்லி இருக்கிறீர்கள். சுய இன்பம் செய்யாதவர்களுக்கு தூக்கத்தில் விந்து வெளியேற அதிக வாய்ப்புள்ளது. உங்கள் வயதில், உங்கள் உடலுக்கும் (மனதுக்கும்) காமத்தின் வெளிப்பாடு தேவையாக இருக்கிறது. இதனால் தான் நீங்கள் தூங்கும்போது விந்து வெளியேறுகிறது.

சில மருத்துவர்கள், ஈஸ்ட்ரோஜென் (estrogen) என்கிற பெண்மை ஹார்மோன் கலந்த மாத்திரைகளை மருந்தாக கொடுப்பார்கள். இதனால் உங்கள் ஆண்மை குறைந்து, சொப்பன ஸ்கலிதம் நிற்க வாய்ப்புள்ளது. ஆனால் தயவு செய்து இந்த மாத்திரைகளை சாப்பிடாதீர்கள். ஏனென்றால் இது போன்ற மாத்திரைகளால் பல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளன. உதாரணமாக, உங்களுக்குப் பெண்களைப் போல மார்பகம் வளர வாய்ப்புள்ளது.

உங்களுக்கு தூக்கத்தில் விந்து வெளியேறாமல் இருக்க வேண்டுமென்றால், நீங்கள் சுய இன்பம் செய்யலாம். சுய இன்பம் குறித்து உங்களுக்கு குற்ற உணர்வு இருந்தால்,

பல வினோதமான கனவுகள் வருவதாக குறிப்பிட்டு இருக்கிறீர்கள். நீங்கள் விழித்திருக்கும்போது சுய இன்பம் செய்தால், உங்கள் கற்பனைகளை கட்டுப்படுத்தலாம். ஆனால் நீங்கள் உங்கள் பருவத்தில் வரும் நியாயமான காம உணர்வுகளை வெளிப்படுத்தாதால், உங்கள் கனவுகள் விசித்திரமாக வருகின்றன.

குறிப்பு: பெண்களுக்கும் தூக்கத்தில் இது நிகழும். ஆனால் அவர்களுக்கு விந்து வெளியேறாமல், பெண்ணுறுப்பிலேயே திரவம் சுரந்து நின்று விடுவதால், அது வெளியே தெரியாது. ஏன் பல பெண்களுக்கு தூங்கி எழுந்த பின்பு இப்படி ஒரு நிகழ்வு நடந்ததே தெரியாமலும் இருக்க வாய்ப்பு உண்டு.