Home அந்தரங்கம் திருமணத்துக்கு முன்பே காதலித்து உடல் ரீதியாக உறவு கொண்டவர்கள் வாழ்க்கை எப்படி இருக்கும்?

திருமணத்துக்கு முன்பே காதலித்து உடல் ரீதியாக உறவு கொண்டவர்கள் வாழ்க்கை எப்படி இருக்கும்?

130

“வெர்ஜின் பொண்ணுக எல்லாம் டைனோசர் காலத்திலேயே அழிஞ்சு போச்சு” என்று கிண்டல் செய்யும் ரேஞ்சுக்கு பெண்களின் கற்பு இழிவாக பார்க்கப்படுகிறது என்றால், காலம் எப்படி மாறி இருக்கு பாருங்க. கல்யாணம் குறித்த பேச்சு எடுத்த உடனே, ஏதோ பைக் வாங்குற மாதிரி, “மச்சான் பர்ஸ்ட் ஹேண்ட் எல்லாம் எதிர் பார்க்க கூடாது, செகண்ட் ஹேண்ட் இல்லைனா, 3rd ஹேண்ட் கூட வரலாம்” மனசு விடாதடா” என்று சர்வ சாதரணமாக சொல்லிவிட்டு செல்கிறான்.

காதலிக்கும் உணர்வு வந்துவிட்டாலே, காமமும் கூடவே வந்து விடும் போல. இன்னும் சில காதல் காமம் இருப்பதால் மட்டுமே, ஏதோ வண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. அதுவும் இல்லை என்றால், பிரேக் ஆப் என்ற எண்டு கார்டு போட்டுவிட்டு, அடுத்த காதலுக்கு டேக் அடிப்பார்கள். காதலித்து “சர்வமும்” முடிந்த பின்னர், காதல் கசந்துவிட்டால், அடுத்த துணையை நோக்கி செல்லும் போக்கு ரொம்பே அதிகரித்துவிட்டதை காண முடிகிறது. பிறகு திருமண வயது வந்தால், முடிவு அப்படியே உல்டாவா மாறும்.

அதுவரையில் காதல் மட்டுமே கண்ணுக்கு தெரிந்தது, அடுத்து குடும்பம், சம்பளம் என்பதை நோக்கி பேச்சு நகரும். அது ஒத்து வராவிட்டால், மனம் ஒத்து இருவரும் பிரிந்து விடலாம் என்று, காதலை தியாகம் வேறு செய்வார்களாம். ஆனால் அதற்கு முன்னாலே உடல் ரீதியான உறவு பலமுறை நடந்திருக்கும். அடுத்து இருவரும் பிரிந்து திருமணம் செய்துகொண்டாலும், திருமணத்திற்கு முன்பான உறவின் வடு, கடைசி வரைக்கும் உறுதிக்கொண்டே தான் இருக்கும்.

அதிலும் நான் பார்த்த அனுபவம் இதைவிட மோசம். காதலித்த இருவர் பிரிந்து, வெவ்வேறு நபரை திருமணம் செய்து கொண்டு, பின்னர் மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தவுடன் மீண்டும் உறவை தொடர்கின்றனர். இதெல்லாம் எங்கோ போய் முடியப்போகுதோ? தெரியவில்லை. ஒரு சில புனிதமான காதலை கண்ட எனது வாழ்வில், இந்த மாதிரியான சம்பவங்களை எல்லாம் கேள்விப்பட்ட பிறகு, திருமணத்தின் மீது ஒருவித பயம் வந்தாலும், நம்பிக்கை தான் வாழ்க்கை என்கிற பிடியில் ஓடிக்கொண்டிருக்கிறேன்.