Home சூடான செய்திகள் திருமணத்துக்கு பின்னரும் மறக்க முடியாத காதல்: 2 வருடமாக கணவரை நெருங்க விடாத பெண்

திருமணத்துக்கு பின்னரும் மறக்க முடியாத காதல்: 2 வருடமாக கணவரை நெருங்க விடாத பெண்

26

கோவை பீளமேடு அண்ணாநகர் விகாஷ் லே–அவுட்டை சேர்ந்த என்ஜினீயர் தங்கராஜ். சம்பவத்தன்று இரவு நியூஸ்கீம் ரோட்டில் கூலிப்படையால் வெட்டப்பட்டார்.

இதுகுறித்து விசாரிக்க கோவை மாநகர போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. துணை கமிஷனர் பர்வேஸ்குமார், உதவி கமிஷனர் பாஸ்கரன் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படையில் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரன் உள்ளிட்டோர் தீவிர விசாரணையில் இறங்கினர்.

விசாரணையில் அவரது மனைவி ரம்யாவே (30) கூலிப்படையை ஏவி கணவரை கொலை செய்ய திட்டம் தீட்டியது தெரியவந்தது. இதுகுறித்து அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:–

கல்லூரியில் படிக்கும்போதே நானும் சமீர் என்பவரும் உயிருக்கு உயிராக காதலித்தோம். அப்போதே பல இடங்களுக்கு சென்று உல்லாசமாக இருந்தோம். இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்தோம்.

எதிர்பாராதவிதமாக தங்கராஜூக்கு எனது பெற்றோர் என்னை கட்டாய திருமணம் செய்து வைத்தனர். இதனை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. காதலனை விட்டு மற்றொருவரை கணவராக ஏற்றுக்கொள்ள என்னால் இயலவில்லை.

முதலிரவில் இருந்தே கணவர் என்னை நெருங்காமல் பார்த்துக்கொண்டேன். தனித்தனியாகவே படுத்துக் கொண்டோம். ஏன் என்று கணவர் கேட்டால் உடல்நலம் சரியில்லை என்று கூறி சமாளித்து வந்தேன். இன்னும் 2 வருடம் கழிந்து குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்று ஒதுங்கியே இருந்தேன். கணவரை ஒருமுறை கூட தொட அனுமதிக்கவில்லை.

இந்நிலையில் கணவரை வேலைக்கு அனுப்பி விட்டு சமீரை வீட்டுக்கு வரவழைத்து உல்லாசமாக இருப்போம். வெளியில் வேலை இருப்பதாக கூறிவிட்டு நானும், சமீரும் பல இடங்களுக்கு சென்று உல்லாசமாக இருந்தோம்.

இனியும் கணவருடன் சேர்ந்து வாழ முடியாது என்று விவாகரத்து பெற்று காதலனுடன் சேர்ந்து விடலாம் என்று அவரிடம் சண்டைபோட்டால் அவர் பதிலுக்கு சண்டைக்கு வராமல் அமைதியாக சென்றுவிடுவார். இதனால் அவர் கதையை முடித்துவிட்டால் நாங்கள் ஒன்று சேர்ந்து விடலாம் என்று நினைத்து கூலிப்படையை ஏவி கொல்ல முடிவு செய்தேன்.

வசமாக மாட்டிக்கொண்டேன். எனது காதல் நல்ல காதல்தான். பெற்றோர் இன்னொருவருக்கு வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைத்ததால் அது கள்ளக்காதலாக மாறிவிட்டது.

மேற்கண்டவாறு அவர் போலீசில் கூறினார்.