Home பெண்கள் தாய்மை நலம் தாய்பால் கொடுப்பதனால் இருவருக்கும் நன்மைகள் என்ன?

தாய்பால் கொடுப்பதனால் இருவருக்கும் நன்மைகள் என்ன?

32

உலகத்தில் இடத்துக்கு இடம் மாறுபட்ட உணவுகளை உட்கொள்கிறோம் . (கோதுமை , அரிசி ,கிழங்கு) ஆனால் உலகம் முழுவதும் ஒரு மனதாக எல்லேரும் ஏற்றுக்கொண்டு கொண்டு உட்கொள்ளும் ஒரே உணவு தாய் குழந்தைக்கு ஊட்டும் தாய் பால் மட்டும் தான். அது நிச்சயமாக அதிசய உணவு. நமது இந்திய சகோதரிகளை கருத்தில் கொண்டு மனம் வெதும்பி இந்த பதிவை எழுதுகிறேன் திருமணமான எல்லேரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் இது.
தாய் பால்எப்படி உருவாகிறது தெரியுமா?
அம்மாவின் மார்பகத்தில் குழந்தை வாய் வைக்கும்போது,தாயின்மூளையில் உள்ள ப்ரோலேக்டின் (Prolactin) என்கிற ஹார்மோன் தூண்டப்பட்டு, ரத்தம் பாலாக மாற உதவி செய்கிறது. ஆக்சிடோசின் (Oxytocin) என்கிற மற்றொரு ஹார்மோன் சுரந்து மார்பகத்தில் உள்ள குழாய்கள் (Lactiferous ducts) வழியாக தாய்ப்பால் வெளிவருகிறது.

மேலை நாடுகளின் பெரும்பாலான பெண்கள், குழந்தைகளுக்கு தாய்ப்பால் தர விரும்புவதில்லை.இதேபோல் இந்தியாவில் உள்ள இளம் தாய்மார்களும் உண்மை புரியாமல் அழகு கெட்டுவிடும் என்று நினைத்துக் கொண்டு குழந்தைகளுக்கு தாய்ப்பால் தருவதை சிலவாரங்களிலேயே நிறுத்தி விடுகின்றனர் என்பது வேதனைக்குறிய விஷயம்.

தாய்ப்பால் அளிப்பது வரம்.அதற்குக் கொடுப்பினை வேண்டும். எத்தனையோ பெண்கள் குழந்தை இல்லாமையால் வருத்தப் பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் குழந்தை பெறும் வரம் பெற்றவர்கள் அந்தப்பேற்றின் மகத்துவம் தெரியாமல் அதை அலட்சியப் படுத்துகின்றனர்.
குழந்தைகளுக்கு 1வருடம் முதல் 2வருடம் வரை கண்டிப்பாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும். ஏனெனில் தாய்ப்பாலுக்கு நிகர் வேறு உணவில்லை. ஒரு தாய் அன்போடு குழந்தைக்கு பால் தரும் போது முன்று வகையான நன்மைகள் ஏற்படுகின்றன.1 )தாய்க்கு பல நன்மைகளும் 2 )குழந்தைகு பல நன்மைகளும் 3 )இருவருக்கும் சேர்த்து பல நன்மைகளும் ஏற்படுகின்றன.

1)தாய்க்கு ஏற்படும் நன்மைகள்
1 )மார்பகப் புற்று நோயிலிருந்தும் பாதுகாப்பு.
2 )இது ஒரு இயற்கையான கருத்தடைமுறையாகும்.
3 )கர்பப்பை சூலக புற்று நோயிலிருந்தும் பாதுகாப்பு.
4 )உயர் ரத்த அழுத்த நோய்யில் இருந்து பாதுகாப்பு.
5 )இதய நோய் பாதிப்பு வராது
6 )”கர்ப”தொப்பை மற்றும் ஊளசதை குறைவது
7 )பால் நெறி கட்டுவது இயற்கையாக சரியாகும்
8 )உண்மையில் தாயின் இளமையும், அழகும் பாதுகாக்கப்படுகிறது.
9 )பக்கவிளைவு

2)குழந்தைக்கு ஏற்படும் நன்மைகள்
1 )குழந்தைக்கு மனரீதியாக தன்னம்பிக்கை வளரும்
2 )உடற்பருமன்
3 )ஒவ்வாமை அலர்ஜியை போக்கும்
4 )எதிர்ப்பு சக்தி
5 )சிறுநீரக பாதிப்பு
6 )மாசுபடுதல் என்பதே கிடையாது
7 )குழந்தையின் ஜீரணத்திற்கு சுலபமானது
8 )குழந்தையின் முளை வளர்ச்சி முழுமையாடைய
9 )எலும்பு வளர்சிக்கான முக்கிய காரணம்
10)வலுவான பற்கள்
11)வயிற்றுபோக்கு மற்றும் மலச்சிக்கல்
12)புட்டிப் பால் கொடுப்பதால் ஏற்படும் பாதிப்புகளில் சில……..

3)இருவருக்கும் ஏற்படும் நன்மைகள்
1 )தாய்க்கும் குழந்தைக்கும் இடையிலான பந்தம் வளரும்,
2 )சக்கரை நோய் வராது
3 )பால் செலவுகள் குறையும்
4 )இதய நோய் பாதிப்பு வராது
5 )மருத்துச் செலவுகள் முழுமையாகக் குறையும்

1)தாய்க்கு ஏற்படும் நன்மைகள்:-

1 )உண்மையில் தாயின் இளமையும், அழகும் பாதுகாக்கப்படுகிறது.
தாய்ப்பால் அளிப்பதால் அம்மாவின் உடல்வாகு சீர்கெட்டுவிடும் என்பதைப் போன்ற அபத்தம் வேறு எதுவும் கிடையாது. சொல்லப்போனால், குழந்தை தாய்ப்பாலுக்காக மார்பகங்களை அடிக்கடி உறிஞ்சுவதன் விளைவாக, அம்மாவின் யூட்ரஸ் சுருங்குகிறது. அதனால் அவளது வயிற்றுப்பாகம் கருவுறுவதற்கு முன்பு இருந்த பழைய வடிவை சீக்கிரமே பெறுகிறது. மற்ற தாய்ப்பால் கொடுக்காத தாய்மார்களோடு ஒப்பிடும் போது போது குழந்தை பிறந்தவுடன் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களின் உடல் எடை சீக்கிரம் குறைந்து சிக்கென்ற தோற்றம் வரும்

2 )இது ஒரு இயற்கையான கருத்தடைமுறையாகும்.
முதல் இரண்டு மாதம் மாதவிடாய் தள்ளிபோகும் அதாவது கருமுட்டை வெளி வராமல் தடுக்கும் இருந்தாலும் கருத்தடை முறையை பிள்ளைப் பெற்று 42 நாட்களின் தொடங்கலாம்

3 )”கர்ப”தொப்பை மற்றும் ஊளசதை குறைவது
சிலர் பிரசவத்துக்குப் பிறகு சரசரவென எடை போட்டுவிடுவார்கள். மீண்டும் பழைய உடல்வாகைப் பெற முழுமையான தாய்ப்பால் கொடுப்பது உதவும் குழந்தை பாலுக்காக மார்பகங்களை அடிக்கடி உறிஞ்சுவதன் விளைவாக அம்மாவின் யூட்ரஸ் சுருங்குகிறது. அதனால் அவளது வயிற்றுப்பாகம் கருவுறுவதற்கு முன்பு இருந்த பழைய வடிவை சீக்கிரமே பெறுகிறது.

4 )உயர் ரத்த அழுத்த (Blood Pressure)நோய்யில் இருந்து பாதுகாப்பு.
அமெரிக்காவில் உள்ள வடக்கு கரோலினா பல்கலைக்கழகமானது 56000 அமெரிக்க தாய்மார்களிடம் இந்த ஆய்வை மேற்கொண்டனர். அதில் பிறந்த குழந்தைகளுக்கு தாய்பால் கொடுக்காத 8900 பெண்களுக்கு உயர் ரத்தஅழுத்த நோய் (Blood Pressure)ஏற்பட்டிருந்ததை கண்டறிந்தனர். அதேசமயம் தாய்பால் கொடுத்த பெண்களுக்கு உயர்ரத்த நோய் எதுவும் ஏற்படவில்லை. எனவே தாய் பால் கொடுப்பதற்கும், பெண்களுக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கும் தொடர்ப்பு இருப்பது தெரிய வந்தது.

5 )இதய நோய் பாதிப்பு வராது
உடலில் உள்ளகொழுப்பு குழந்தைக்கு சத்தாக மாறி சென்று விடுவதால் இதயம் பாதுகாக்கப்படுகிறது மற்றும் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு இல்லை என்று ஆய்வுகள் தெரிவிகின்றன

6 )கர்பப்பை சூலக புற்று நோயிலிருந்தும் பாதுகாப்பு.
குழந்தை பாலுக்காக மார்பகங்களை அடிக்கடி உறிஞ்சுவதன் விளைவாக அம்மாவின் யூட்ரஸ் சுருங்கி பழைய நிலையை அடைகிறது.எனவே நோய் தொற்று புற்று நோயிலிருந்தும் பாதுகாக்கப்படுகிறது

7 )பால் நெறி கட்டுவது இயற்கையாக சரியாகும்
முறையாக பால் புகட்டினால் எம்மா பால் கட்டுது அப்புறம் வலிக்குது குத்துது குடையுது ஏன்?

8 )பக்கவிளைவு
குழந்தைக்கு பால் தராமல் பாலை நிறுத்துவதற்கு எடுக்கும் அனைத்து முயற்சியும் பக்கவிளைவு தான்.ஒவொரு முயற்சியும் ஒவொரு வகையில் பக்கவிளைவை தரும்
9)மார்பகப் புற்று நோயிலிருந்தும் பாதுகாப்பு.

2)குழந்தைக்கு ஏற்படும் நன்மைகள்:-

1 )குழந்தைக்கு மனரீதியாக தன்னம்பிக்கை வளரும்
தாய்க் கும் சேய்க்கும் மனஅமைதி மகிழ்ச்சி ஆகியவை ஏற்படுகிறது. கையில் எடுத்து மார்போடு அணைத்து பால் கொடுப்பதன் மூலமாக குழந்தைக்கு ஒரு பாதுகாப்பு உணர்ச்சி ஏற்பட்டு அது மனநிறைவோடு காணப்படுகிறது.

2 )உடற்பருமன்
தாய்பபால் உட்கொள்ளும் பிள்ளைகள் மற்ற குழந்தையை விட உடற் பருமனால் சிறிதாகவே பாதிக்கப்படுகின்றனர். குழந்தைகளுக்கு நீண்ட நாட்கள் தாய்பபால் கொடுப்பதால் உடல் பருமனாவது ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தப்படுகிறது.

3 )அலர்ஜியை போக்கும்
தாய்ப்பால் பிறந்த குழந்தைகளுக்கு ஆஸ்துமா மற்றும் காது சம்பந்தப்பட்ட நோய்கள் உண்டாவதைத் தடுக்கும்.பசும்பால் கொடுப்பது சில பிள்ளைகளுக்கு அலர்ஜி எனப்படும் ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது. ஆனால் குழந்தைக்கு என்று உற்பத்தி ஆகும் பால் தாய்ப்பால் எனவே அது ஒவ்வாமையை ஏற்படுத்தாது. பசும்பாலோடு ஒப்பிடும்போது தாய்ப்பால் கொடுப்பது 100 சதவீதம் பாதுகாப்பானது.

4 )எதிர்ப்பு சக்தி
பிறந்த குழந்தைக்கு நோய் எதிர்ப்பு மண்டலம் முழுமையாக வேலை செய்யத் தொடங்காது. இந்த நேரத்தில் குழந்தைக்கு நோய் எதிர்ப்புச் சக்தி வேண்டும். எப்படி அதை ஏற்படுத்துவது? தாய்ப்பாலில்‘இம்யூனோக்ளோபின் ஏ’ என்கிற பொருள் இந்த நோய் எதிர்ப்பு சத்தியை அதிகரிக்கச் செய்கிறது. மேலும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்குத் தேவையான டி.எச்.ஏ (Docosahexaenoic acid) மற்றும் ஏ.ஆர்.ஏ. (Arachidonic Acid) ஆகியவையும் தாய்ப்பாலில் நிறைந்து உள்ளன. எனவே, தாய்ப்பாலுக்கு இணையான உணவு குழந்தைக்கு வேறு எதுவும் கிடையாது.

5 )சிறுநீரக பாதிப்பு
மாட்டு பாலில் உள்ள அடர்த்தி காரணமாக குழந்தையின் சிறுநீரகங்கள் அதிக அளவில் செயல்பட வேண்டியிருக்கிறது. பிற்காலத்தில் சிறுநீரக பாதிப்பு ஏற்பட 80 சதவிதம் வாய்ப்பு உள்ளது

6 )மாசுபடுதல் என்பதே கிடையாது
உலகத்திலேய மாசு இல்லாத ஒரே உணவு தாய்பபால்

7 )குழந்தையின் ஜீரணத்திற்கு சுலபமானது
மாட்டு பாலை விட அடர்த்தி குறைவானது எனவே சுலபமாக ஜீரணமாகும் (மாட்டுப் பால் கண்று குட்டியின் ஜீரணஅமைப்பிற்கு தகுந்த அளவிற்கு அடர்த்தி அதிகமானது )மாட்டுப்பாலில் உள்ள சத்துக்களும் குழந்தையின் உடல் ஜீரணனித்து ஏற்றுக்கொள்ளாமல் மலமாக வெளியேற்றிவிடும்

8 )குழந்தையின் முளை வளர்ச்சி முழுமையாடைய
உங்கள் குழந்தை உலகம் போற்றும் திறமை யோடும் ஆற்றலோடும் வளரவேண்டுமாஅப்படியென்றால் தாய்ப்பால் கொடுங்கள். ஏன் என்றால் புட்டிப்பால் குடித்த குழந்தைகளை விட தாய்ப்பால் குடித்த குழந்தைகள் அறிவு ஜீவிகளாக இருப்பதை லண்டன் தேசிய அறிவியல் கழகம் நியூசிலாந்தில் 1037குழந்தைகளிடம் நடத்தப்பட்ட டி.என்.ஏ. ஆய்வில் உறுதி செய்யப்பட்டது..மற்ற பால் மூலம் குழந்தையின் உடல் வேண்டுமானால் நன்கு வளர்ச்சியடையலாம்.ஆனால் மூளை வளர்ச்சிக்கு உரியது தாய்ப்பால் தான்.

9 )எலும்பு வளர்சிக்கான முக்கிய காரணம்
குழந்தையின் உடல் ஜீரணனித்து ஏற்றுக்கொள்ளும் கால்சியம் தான் எலும்பு வளர்சிக்கான முக்கிய காரணம். மாட்டுப்பாலில் உள்ள கால்சியம் அடர்த்தி அதிகம் குழந்தையின் உடல் ஏற்றுக் கொள்ளாமல் மலமாக போய்விடும்

10 )வலுவான பற்கள்
தாய்ப்பாலில் குழந்தையின் உடல் ஏற்றுக்கொள்ளும் கால்ஷியம், பாஸ்பரஸ் மற்றம் பிற உணவுத் சத்துக்கள். அதிகமாக இருக்கின்றன. தாய் தன் சேய்க்கு தாய்ப்பால் கொடுப்பதைத் தவிர்க்கக் கூடாது. தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகளுக்கு பற்கள் உறுதியாக அழகாக பால்போல் வெளுத்து பக்குவமாய் முளைக்கும்.மேலும் பல் சொத்தை எலும்பு நோய் வராமல் காக்கிறது
11)வயிற்றுபோக்கு மற்றும் மலச்சிக்கல்
குழந்தை தாய்பாலினால் நோய் எதிர்ப்பு சக்தியினை பெறுவதினால் குழந்தை பல்வேறு நோய்களினாலும்,வயிற்றுபோக்கினாலும் அவதியுராது மலச்சிக்கலையும் ஏற்படுத்தாது.
12)புட்டிப் பால் கொடுப்பதால் ஏற்படும் பாதிப்புகளில் சில……..
பிறந்த குழந்தைக்குப் புட்டிப்பால் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். புட்டிப்பால் கொடுக்கும் குழந்தைக்குப் போதிய ஊட்டச்சத்து கிடைக்காததால் பற்கள் வலுவிழந்து பொலிவிழந்து முளைக்கும். முளைத்த பல் சிறுகச் சிறுகச் சிதையும். மேலும் புட்டிப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு பாலிலுள்ள சர்க்கரைப் பொருள்கள் பற்களில் படலமாகப் படிந்து, கிருமிகளால் தாக்கப்பட்டு பால் பற்களுக்கு பற் சொத்தையை வரவழைக்கும். புட்டிப்பால் குடிக்கும் குழந்தைகள் ரப்பரை வாயில் வைத்து அழுத்திச் சுவைப்பதால் மென்னையான குழந்தையின் தாடை பாதிக்கப்பட்டு, தாடை முன்னோக்கி வளரும்.

3)இருவருக்கும் ஏற்படும் நன்மைகள்:-

1 )தாய்க்கும் குழந்தைக்கும் இடையிலான பந்தம் வளரும்
தாய்பால் என்பது தாயுக்கும் குழந்தைக்கும் இடையே நடக்கும் பாசப்பகிர்வு. தாய்ப்பாசம் தளைத்தோங்க தாய் தன் குழந்தைக்குக் கொடுக்கும் தாய்ப்பால் பிற்காலத்தில் குழந்தை மனதில் தாயின் மீதுள்ள பாசம் உலகில் வேறு எந்தவொரு பொருளின்மீது உள்ளதைவிடவும் பலமடங்கு அதிகரிக்கச் செய்கிறது என்பது அறிவு சார்ந்த சான்றோர் கருத்து.

2 )மருத்துச் செலவுகள் முழுமையாகக் குறையும்
நோய் எதிர்ப்பு சக்கியை இயல்பாகவே தருவதாலும் மருத்துச் செலவுகள் முழுமையாகக் குறையும்

3 )பால் செலவுகள் குறையும்
குழந்தைக்கு பால் தருவதற்காக தாய் சத்தான காய்+கறிகள் சாப்பிடும் செலவை விட மாட்டுப்பாலுக்கு ஆகும் செலவு அதிகம்

4)இதய நோய் பாதிப்பு வராது
பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் இருவருக்குமே சர்க்கரைநோய் ஏற்படாது, கொழுப்பு சத்துநோய் ஏற்பாடாது, இதயநோய் வருவதற்கான வாய்ப்பே இல்லை என்று அமெரிக்காவில் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

5 )சக்கரை நோய் வராது
தாய்க்கு:- இரத்த சர்க்கரை பாலக மாற்றப்படுவதால் உடலின் சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படும்
குழந்தைக்கு:-தாய்ப்பால் கொடுப்பதால் லூக்கேமியா எனும் இரத்த சம்பந்தமான கேன்சர் ,சர்க்கரை நோய் (டைப் 1) மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் பிற்காலத்தில் ஏற்படுவதத் தடுக்கிறது.

6 )பக்கவிளைவு
தாய்க்கு:-குழந்தைக்கு பால் தராமல் பாலை நிறுத்துவதற்கு எடுக்கும் அனைத்து முயற்சியும் பக்கவிளைவுதான்
குழந்தைக்கு:-தாய் பால் தராமல் நிறுத்துவதால் பிற்காலத்தில் ரத்தசோகை போன்ற நோய்கள்

என்னவெல்லாம் இருக்கின்றன தாய்ப்பாலில்?
தாய்ப்பாலில், புரதம், கார்போஹைட்ரேட், அத்யாவசியக் கொழுப்பு அமிலம் போன்ற ஊட்டச்சத்துக்களும் இரும்பு, கால்சியம், பொட்டாசியம், சோடியம் உள்ளிட்ட தாது உப்புக்களும் இ, கே ஆகிய வைட்டமின்களும் நிறைந்து உள்ளன.இவைகளில் ஒரு சில மாட்டு பாலிலும் இருக்கிறது ஆனால் குழந்தையின் உடல் ஜீரணனித்து ஏற்றுக்கொள்ளாமல் மலமாக வெளியேற்றிவிடும்

மருந்து:-தாய்பாலில் உள்ள ஒரு விதமான என்சைம் உடலில் உள்ள ஒரு சில பாகங்களில் பாக்டீரியா தங்க விடாது. அதனால் தாய்பால் கொண்டு சில வகையானவற்றை குணப்படுத்த முடியும். அதில் ஒன்று தான் மூக்கடைப்பு. அதனால் குழந்தையின் மூக்கில் சில துளிகள் விட்டு ஒரு பத்து செகண்ட்ஸ் பிடித்து விட்டால் மூக்கடைப்பு சரியாகும்.பூச்சுகடி, காதுவலி, டையபர் போடுவாதால் உண்டாகும் ராஷ் மற்றும் பலவற்றை ஆற்றும் சக்தி இந்த தாய்ப்பாலுக்கு உண்டு.

தாய்ப்பாலின் நன்மைகளை மட்டும் சொல்லுவதற்கே இந்தப்பதிவு பெரியதாக தோன்றியதால் பல விசயங்களை சுருக்கி இருக்கிறேன் அடுத்தபதிவில் பாலுட்டும் முறைகள்,தாய் பால் தாரளமாக சுரக்க வழிகள்,பாலுட்டும் தாய்மார்கள் உண்ணும் உணவுமுறைகள்,உறக்கமுறைகள்,போன்றவற்றை பார்க்கலாம்