Home அந்தரங்கம் செக்ஸ்சை முழுமைப்படுத்தி, திருப்திப்படுத்துவது எது!

செக்ஸ்சை முழுமைப்படுத்தி, திருப்திப்படுத்துவது எது!

181

அளவிற்கு அதிகமாக செலுத்தப்படும் அன்புதான் தம்பதிகளிடையேயான செக்ஸ் செயல்பாட்டை முழுமைப்படுத்தி, அதை திருப்திக்குரியதாக மாற்றுகிறது.

அதனால் தம்பதிகள் தங்களிடம் இருக்கும் சின்னச்சின்ன பிணக்குகளை மறந்து சிரித்துப் பேசி அன்பை மேம்படுத்திக் கொண்டே படுக்கை அறைக்குள் நுழைய வேண்டும்.

செக்சை தங்களுக்கு பிடித்த நல்ல விளையாட்டாக எடுத்துக்கொண்டு, விளையாட்டுத் தனமாகவே அதில் ஈடுபட வேண்டும். இந்த விளையாட்டு வெற்றி, தோல்வி, திருப்தி போன்ற அனைத்துக்கும் அப்பாற்பட்டதாக அன்பை மட்டுமே பிரதானமாகக் கொண்டதாக அமையவேண்டும்.

தூக்கம் என்பது ஒரு நாள் முழுக்க மனதும்- உடலும் அனுபவிக்கும் டென்ஷனைத் தீர்ப்பது. நேற்றுதான் தூங்கியிருக்கிறோமே அதனால் இன்று தூங்கவேண்டாம் என்று யாரும் கருதுவதில்லை. தினமும் தூங்கித்தான் ஆக வேண்டும் என்பது கட்டாயம். அதுபோல் செக்சையும் நினைக்கக்கூடாது.

தூக்கத்திற்கு முன்னால் ஏற்படுத்திக்கொள்ளும் பொழுதுபோக்கு என்றும் செக்சை கருதிவிடக்கூடாது. தம்பதிகளிடையேயான செக்ஸ் என்பது கடமைக்காக என்ற நிலையில் இருந்து விடக்கூடாது. இருவரையும் தூக்கத்திற்கு கொண்டு செல்லும் மருந்தாகவும் அதை கருதிவிடக்கூடாது.

ஏதோ இதுவும் ஒரு வேலை என்ற மனநிலையில் இருவரும் உறவில் ஈடுபடவும் கூடாது. உறவுக்கு நீங்கள் இருவரும் தயாராக இருக்கும் நாளில் காலையில் இருந்தே உங்கள் நினைவில் அந்த இன்பம் இருக்கட்டும். அதை நினைவில் வைத்துக்கொண்டே உற்சாகத்தோடு வேலைகளைப் பாருங்கள்.

அன்று இரவு உணவை சற்று முன்பாகவே முடித்துவிட்டு, வேலைகளை எல்லாம் செய்து முடியுங்கள். வழக்கமாக கணவனும்- மனைவியும் பேசித் தீர்க்க வேண்டிய விஷயங்களை எல்லாம் பேசிவிட்டு, அன்போடு, ஆவலோடு படுக்கை அறைக்குள் நுழையுங்கள்.

அங்கு சென்ற பின்பு தொந்தரவிற்குரிய பேச்சு, சிந்தனை எதுவும் தேவையில்லை. உடல், மனது இரண்டையும் உற்சாகப்படுத்தவும்- அன்பை மேம்படுத்தவும் செக்ஸ் அவசியம் என்பதை உணர்ந்து அதற்குரிய செயலில் ஈடுபடுங்கள். காலையில் செயல்படுவது, அந்த நாள் முழுவதையும் மகிழ்ச்சிக்குரியதாக்கும்

ஆணின் செக்ஸ் உணர்வு மாற்றங்கள்

இளவயதில் ஆர்வமும் வேகமும் கொண்டதாக செக்ஸ் இருக்கிறது. எளிதில் தீ பற்றிக் கொண்டு வெடித்துச் சிதறி அடங்கிவிடும் மத்தாப்பு போன்றது அது. 20களில் இருக்கும் வாலிபன் உடலுறவு தொடங்கிய 2 நிமிடத்திலிருந்து 5 நிமிடத்திற்குள் உச்ச கட்ட இன்பத்தை தொட்டு நின்றுவிடுகிறான். ஆனால் அந்நிலையில் பெண் முடிவுறாத வேட்கையுடன் மேலும் உறவுக்கு ஏங்கி நிற்பாள்.

ஆனால் நடு வயதில் கணவன் இயல்பாகவே மெதுவான, நிதானமாக செயல்பட்டு தனது மனைவிக்கு சமமாக உறவில் அதிக நேரம் நீடித்திருக்கிறான். சிகாகோ பல்கலைக் கழக ஆய்வறிக்கையின் படி 20 வயதுகளில் இருக்கும் பெண்கள் மிகக்குறைவாகவே உச்சட்ட சிலிர்ப்பு நிலையை அடைகின்றனர் என்றும் 40 வயதுகளில் இருக்கும் பெண்களே அதிகமாக அந்நிலையை அடைகின்றனர் என்றும் தெரிகிறது. மனைவியை சிலிர்ப்பு நிலைக்கு கொண்டு போவதில் ஆர்வம் காட்டும் கணவன் இயல்பாகவே தானும் அந்தப் பரவசத்தை அடைகிறான்

கவர்ச்சியைக் கண்ணால் கண்டாலே இளமைப் பருவம் மோக வயப்படும். வயது முதிரும் போது மோகத்திற்கு பார்வை மட்டும் போதுமானதாக இருப்பதில்லை. தொடு உணர்ச்சிகளே அந்நிலைக்குத்; தூண்ட முடியும். எனவே தான் இவ்வயதுகளில் நிதானமும் செயல்திறனும் இவ்விஷயத்தில் உதவிகரமாக இருக்கிறது.இளமைக் காலத்தில் உறவுக்கு அழைப்பதில் ஆண்தான் முன்கை எடுக்கிறான். ஆனால் நடுவயதில் பெண்தான் ஆர்வம் மிகுந்தவளாக இருப்பாள்

காரணம் ஆண் பெண் இருவர் உடலிலும் சுரக்கும் எஸ்ட்ரோஜன் மற்றும் டெஸ்டோஸ்டெரோன் திரவங்கள் வயது கூடும்போது மாற்றமடைகின்றன. ஆணுக்கு இவையிரண்டும் அளவில் குறையத் தொடங்கும். ஆனால் பெண் உடலில் டெஸ்டோஸ் டெரோனின் குறைவை எஸ்ட்ரோஜன் ஈடுகட்டுகிறது. எனவேதான் ஆணை விடவும் பெண் நடுவயதில் அதிக ஆர்வம் கொண்டவளாக இருக்கிறாள்