Home சூடான செய்திகள் செக்சும் அவசியம் தான்

செக்சும் அவசியம் தான்

19

செக்ஸின் வரலாற்றை புரட்டிப் பார்த்தால் அது ஆதாம்-ஏவாள் காலத்திலேயே துவங்கிவிட்டது. இன்று, உலகெங்கும் உயிர்கள் வியாபித்து பரவிக் கிடக்கின்றன என்றால், அதற்கு காரணம் இந்த செக்ஸ் தான்.

இந்த செக்ஸை பூ மாதிரி கையாள வேண்டும். மலர்ந்த மல்லிகைப் பூக்களை அலுங்காமல் குலுங்காமல் தொடுத்து, தலையில் பெண்கள் சூடியிருந்தால் தான் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். அந்த பூக்களின் மீது வன்முறையை பிரயோகிப்பதுபோல் கசக்கினால் அதனால் எந்த பயனுமே கிடைக்காது.

அடிப்படையில், செக்சும் அப்படித் தான். கணவன்-மனைவியர் பரஸ்பரம் தங்களை புரிந்துகொண்டு அந்த இன்பத் தேடலில் மென்மையுடன் இறங்கினால் தான் இருவரும் அங்கே வெற்றிக்கொடி நாட்ட முடியும். வன்முறைக்கு அங்கே சற்று இடம் கொடுத்தாலும்கூட முழு திருப்தி என்பது இல்லாமல் போய்விடும்.

ஆத்ம ரீதியாக கணவன்-மனைவியர் இணையும்போது தான் உண்மையான சுகத்தை அனுபவிக்க முடிகிறது. நாங்கள் சந்தோஷமாகத் தான் இருக்கிறோம் என்று 100 சதவீதம் திருப்தி கொள்ள முடிகிறது.

ஆனால், இன்றைய தம்பதியரில் பலருக்கு செக்ஸ் பற்றிய அறிவு போதுமானதாக இல்லை. சிலர், அதை குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற கடமைக்காகவே செய்கிறார்கள். இப்படி இயந்திரத்தனமாக செயல்படுவதில் எந்த பயனுமே இல்லை.
உங்களை உண்மையாக-முழுமையாக புரிந்துகொள்ளுங்கள். அதன்பின், செக்ஸ் என்னும் இன்பக் கடலில் நீந்துங்கள். அப்போதுதான், உடலும், மனமும் சேர்ந்து திருப்திக் கொள்ளும்.

சில தம்பதியர் இருக்கிறார்கள். வாரம் இரு முறையோ அல்லது மூன்று முறையோ உடல் தேவைக்காக மட்டும் செக்ஸ் வைத்துக்கொள்கின்றனர். அந்த குறுகிய வட்டத்திற்குள்ளேயே சுழன்று கொண்டிருக்கின்றனர்.
இப்படி அவர்களது உறவு நகரும்போது, தேவையில்லாத விஷயங்களுக்கு எல்லாம் டென்ஷன் ஏற்பட்டு பிரச்சினைகளின் பட்டியல் தான் நீண்டுகொண்டே போகிறது. அதன் உச்சக்கட்டம் தான் விவாகரத்து.
நகரவாசியான ராமையாவுக்கு திருமணமாகி ஒரு மாதம் தான் ஆகியிருந்தது. செக்ஸை, மனைவியிடம் திருப்தியாக அனுபவிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். யாரிடம்போய் இதுபற்றி கேட்பது என்று தயங்கினார். மனைவி பத்தாவது வரையே படித்த கிராமத்துப் பெண் என்பதால், அவளிடமும் அவரால் மனம் விட்டு பேசமுடியவில்லை. மனதிற்குள் பலவற்றையும் போட்டு குழப்பிக் கொண்டார்.

அவரது இந்த குழப்பத்தை தெரிந்துகொண்ட அவரது நண்பர் ஒருவர், பலான படங்களை இருவரும் போட்டுப்பார்த்தால் திருப்தியாக அனுபவிக்கலாம் என்று யோசனை சொன்னார். அங்கே இங்கே என்று அலைந்து, படாதபாடுபட்டு அந்த படத்தை வாங்கி வந்துவிட்டார்.

ஆனால், மனைவியிடம் அதுபற்றி சொல்ல பயம். இவள் கிராமத்துப்பெண் ஆயிற்றே! எப்படி நினைக்கப்போகிறாளோ என்று பயந்தபடியே அவளிடம் பேச முயன்றார். அப்போது, அவருக்கு திடீரென்று ஒரு சந்தேகம். ஒருவேளை நாம் அதுபற்றி சொல்லப்போய், இவள் தவறாக நினைத்துவிட்டால்… என்று யோசித்தார்.

உடனே அந்த முடிவுக்கு வந்தார். டி.வி.டி.யில் என்ன இருக்கிறது என்று சொல்லாமலேயே போட்டு விடுவோம் என்று கணக்குப்போட்டு, பிளேயரில் அதை போட்டு ஓட விட்டுவிட்டார். மனைவியையும் பக்கத்தில் அமர வைத்துக்கொண்டார்.

டி.வி.யில் எதிர்பாராத காட்சிகள்வர அந்த பெண் நடுங்கியே போய்விட்டார். அவளது நடுக்கத்தை பார்த்த ராமையா டி.வி.யை ஆப் செய்து, அவளை சமாளிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.

இப்படி, ராமையா மாதிரி தான் பல ஆண்கள் செயல்படுகின்றனர். மனைவியின் விருப்பம்-ஆசை என்னவென்று தெரிந்துகொள்ளாமல், அவர்கள் தேவையை மட்டுமே நிறைவேற்றிக்கொள்வதில் குறியாக இருக்கிறார்கள்.
செக்ஸை பொருத்தவரை ஒரு ஆணால் 2 நிமிடத்திற்குள்ளாகவே உச்சக்கட்டத்தை எட்டிவிடலாம். ஆனால் பெண் அப்படி அல்ல. அவள் உச்சக்கட்டத்தை நெருங்க குறைந்தது 12 நிமிடங்கள் ஆகும் என்று கணக்கு சொல்கிறார்கள் செக்ஸாலஜிஸ்ட்டுகள்.

உண்மை நிலவரம் இப்படி இருக்கும்போது, தங்கள் தேவையை மட்டும் மனைவியிடம் கணவன் ஆனவன் நிறைவேற்றிக்கொள்வது என்பது, அந்த மனைவியானவளின் ஆசைகளை – விருப்பங்களை – எதிர்பார்ப்புகளை புறக்கணிக்கும் செயல் என்றே கூற வேண்டும்.

உண்மையைச் சொல்லப்போனால், சரியான செக்சும், சரியான அன்பும் தான் வாழ்க்கை. ஒரு தம்பதியர் இடையே செக்ஸ் உறவு திருப்தியாக இருக்கும்போது தான், அங்கே மகிழ்ச்சி என்ற ஆனந்த பூ மலர்கிறது. அன்பு இருந்தால் தான் செக்ஸ் உறவு திருப்தியாக அமையும்.

இரு கைககள் சேர்ந்து தட்டினால் தான் ஓசை வரும். அதுபோல், கணவன்&மனைவி இருவரும் அன்பால் பிணைந்து, உடலால் இணைந்தால் தான் அங்கே செக்ஸில் சரியான திருப்தி கிடைக்கும்.

ஒருவரது மனசுக்கு பிடித்த விஷயம் என்பதுபோல், ஒருவரது உடலுக்கு படித்த விஷயங்கள் என்றும் இருக்கிறது. அந்த விஷயங்களை தம்பதியர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். அதை கண்டுபிடித்து துணையை ஆனந்தத்தின் எல்லைக்கு கொண்டு செல்ல வேண்டும்.

ஒருவரது உடலுக்கு பிடித்தவை என்பதை எப்படி தெரிந்துகொள்வது?
* செக்ஸ் வைத்துக்கொள்வதற்கு முன்புள்ள நேரத்தில் கணவன்-மனைவி இருவரும் வீட்டில் அல்லது இருவருக்குள் எந்த பிரச்சினையாக இருந்தாலும் தூக்கி எறிந்துவிட வேண்டும். அப்போது தான் உங்கள் உடலின் விருப்பங்களை தெரிந்துகொள்ள முடியும்.

* தனிமையில் இருவரும் மனம்விட்டு பேசுங்கள். கணவனைவிட மனைவி அதிகம் படித்திருந்தாலும், அதிக சம்பளம் வாங்குபவராக இருந்தாலும், அதையெல்லாம் மறந்து, அவள் எனக்காக, நான் அவளுக்காக என்ற எண்ண ஓட்டத்தில் பேசுங்கள். நிறைய பேசுங்கள். அப்போது, ஒருவரையருவர் நன்றாக புரிந்துகொள்ள வாய்ப்புகள் கிடைக்கும்.

* மனைவியின் உடலில் எங்கே, எப்படி தொடும்போது அவளுக்கு இன்பம் கிடைக்கிறது? எப்படி பேசும்போது அவளிடம் இன்ப கிளர்ச்சி ஏற்படுகிறது? எத்த மாதிரி முத்தம் கொடுக்கும்போது இவள் இன்பத்தில் திக்குமுக்காடுகிறாள்? என்பதை ஒரு கணவன் அறிந்திருப்பது அவசியம். அதுபற்றி மனைவியிடம் அன்பாக கருத்து கேட்பது நல்லது தான்.

* எல்லா ஆண், பெண்களுக்கும் இன்பம் தரக்கூடிய உடல் பகுதிகள் ஒரே மாதிரியானவை அல்ல. அதனால், உடலின் சுக மையங்கள் எவை என்பதை இருவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இதுபற்றி ஒருவர் மற்றொருவரிடம் கேட்டு தெரிந்துகொள்வதிலும் தப்பில்லை தான்.

* செக்சில் ஒருவரையருவர் வருடுவது என்பது ஒரு முக்கியமான செயல். காதுகளை பின்பற்றி வருடுவதும், முத்தம் கொடுப்பதும் பெண்களுக்கு அதிக சுகம் தரும் என்பது ஆராய்ச்சியின் மூலம் தெரிய வந்து இருக்கிறது. ஆனால், சில பெண்கள் அதை தவிர்க்கவும் செய்கிறார்கள். மனம் விட்டு பேசும்போது தான் அதுபோன்ற குறைபாடுகளை தெரிந்து, போக்கிக்கொள்ள முடியும்.
* கணவன்-மனைவியர் இடையே அதிக பிரச்சினை ஏற்பட காரணமாக கூறப்படும் புகார்களில் முதலிடம் பெறுவது செக்ஸ் அதிருப்தி தான். துணையிடம் செக்ஸை முழுமையாக அனுபவிக்க முடியாதபோது, அதுவே பல்வேறு பிரச்சினைகளுக்கும் காரணமாகிவிடுகிறது. அவளுக்காகத் தான் நான் பிறந்திருக்கிறேன், எனக்காகத் தான் அவள் பிறந்திருக்கிறாள் என்பதுபோல் பேசுவது கணவன்-மனைவியர் இடையே பிரச்சினைகளை தவிர்க்கும்.

* எந்தவொரு செயலையும் திரும்பத்திரும்ப செய்யும்போது போரடித்துவிடும். செக்சும் அதுபோன்றது தான்! செக்ஸ் வைத்துக்கொள்ளும் நேரம், இடம், சூழ்நிலைகளை மாற்றிக்கொள்வதும், செக்ஸ் நடவடிக்கைகளில் புதுமைகளை புகுத்துவதும் ஆசைகளை கணவன்-மனைவியர் இடையே அதிகரிக்கச் செய்யும். இருட்டு, குறைந்த வெளிச்சம், வெளிச்சம் என்று, உறவு வைத்துக்கொள்ளும் அறையின் சூழ்நிலைகளையும் மாற்றிக் கொள்ளலாம்.

* செக்ஸின் ஆரம்ப நிலை கட்டிப்பிடித்தல் தான். ஒரு தம்பதியர் அடிக்கடி கட்டிப்பிடித்து முத்தங்களை பரிமாறிக்கொண்டால் அவர்களது சருமம் பளபளப்பாகும், முடி நன்கு வளரும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். வேலையின் காரணமாக மனஅழுத்தத்தில் இருப்பவர்கள், திருப்தியாக செக்ஸ் வைத்துக்கொள்வதன் மூலம் அந்த பாதிப்பில் இருந்து இயல்பான நிலைக்கும் திரும்புவதும் ஆராய்ச்சியின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மொத்தத்தில், செக்ஸ் என்பது இறைவன் கொடுத்த வரம். அந்த ஆரோக்கியமான விஷயத்தை ஆபாசமாக நோக்காமல் பார்த்தால் நிச்சயம் துணையிடம் மனம்விட்டு பேசலாம், திருப்தியாக உறவு வைத்துக்கொள்ளலாம், மகிழ்ச்சியாகவும் வாழலாம்.