Home பாலியல் சுய இன்பம் (MASTURBATION) சில தகவல்கள்.

சுய இன்பம் (MASTURBATION) சில தகவல்கள்.

41

சுய-இன்பம்-MASTURBATION-சில-தகவல்கள்.சுய இன்பம் (MASTUBATION) தனியாகவே பாலியல் இன்பம் பெறுதலைக் குறிக்கும். நம்மில் பல பேர் சுய இன்பம் என்றாலே ஒரு குற்றச்செயல் போலதான் கருத்துக்களைச் சொல்வார்கள்.

எது எப்படியோ சில நிரூபிக்கப்பட்ட உண்மைகளை மட்டும் நான் சொல்லி விடுகிறேன். ஒரு ஆய்விலே அறியப் பட்டது 95 வீதமான ஆண்களும் 85 வீத மான பெண்களும் சுயஇன்பம் பெறுவதை ஒத்துக் கொள்கிறார்கள்.

ஒத்துக் கொள்ளாதவர்களிலும் சுய இன்பம் பெறுபவர்கள் ? திருமணமானவர்கள் கூட இடையிடை யே சுய இன்பத்தில் அந்த ஆய்வு வெளிக்கொணர்ந்தது.

ஆக சுய இன்பம் என்பது இருபாலரிலும் காணப்படும் பொதுவான ஒரு இயல்பு. ஆரம்ப காலத்தில் இந்த சுய இன்பம் என்பது பாலியல் வேறுபாட்டு குறையாகவே மருத்துவத்தாலும் பார்க்கப்பட்டது இருந்தாலும் இது தீங்கற்ற ஒரு சாதாரன செயலாகவே இப்போது நோக்கப்படுகிறது. சுய இன்பம் காரணமாக உடல்ரீதியாக எந்தத் தீங்கும் இல்லை.

இருந்தாலும் இது மனரீதியாக சில பாதிப்புக்களை ஏற்படு த்தலாம் . குறிப்பாக சுயஇன்பத்தில் அதிகம் நாட்டம் கொண்டு இல்லற இன்பத்தை தவிர்க்கும் போது குடும்பச் சிக்கல்கள் ஏற்படலாம். எனினும் சுய இன்பத்தால் நன்மைகளே அதிகம்

அவை

1. திருமணமாகாதவர்கள், திருமணமாகி துணையை பிரிந்து வாழ்பவர்கள், அல்லது திருமணமாகி பணிநிமித்தம் காரணமாக வெளியூர் (அ) வெளிநாடுகளில் இருக்கும் ஆண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களுடன் உறவுகொண்டு அதன் மூலம் பால்வினை தொற்று ஏற்படுவதை விட தனக்கு தானே சுய இன்பத்தில் ஈடுபட்டால் பால்வினை நோய்களிலிருந்து முழு பாதுகாப்பு.

2. புற்றுநோய் சம்பந்தமான நோய்களிலிருந்து முற்றிலும் நம்மை பாதுகாக்க உதவும்

3. மன அழுத்தம், உன உளச்ச‍லும் ஓரளவு குறைய வாய்ப்பு

இது தவிர சுய இன்பம் எந்தவொரு பாதிப்பையும் ஒருவருக்கு என்பதில் எந்த உண்மையும் இல்லை.குறிப்பாக சுய இன்பம் பெறுவதால் ஆண்மைத் தன்மை குறையும் என்பதில் எந்த உண்மையும் இல்லை.

மற்றும் குழந்தை பிறப்பதிலும் எந்தச் சிக்கலும் ஏற்படாது. ஒருவர் சுய இன்பத்தில் ஈடுபடும் போது வெளிவரும் விந்துகள் ஏற்கனவே உருவானவை.

அவர் சுய இன்பத்தில் ஈடுபடாவிட்டாலும் அவை தானாகவே வெளியேறிவிடும். இதனால் சுய இன்பத்தால் ஒருவரின் ஆண்மை குறைகிறது என்பதில் எந்த உண்மையும் இல்லை.

எனவே அதிகப்படியான சுய இன்பத்தால்

கை,கால் நடுக்கம்,
அசதி,
சோர்வு,
மனத்தளர்ச்சி,
விந்து முந்துதல்,
ஆணுறுப்பு எழுச்சி குறைபாடு,
உடலுறவில் நாட்டமின்மை,
துனைவியை திருப்தி படுத்த முடியாமை,
நினைவாற்றல் குறைபாடு,
எதிலும் கவனமின்மை,
படபடப்பு,
மற்றவர்களை நேருக்கு நேர் பார்க்க முடியாமை,
திருமணத்திற்கு தயக்கம்,
உறுப்பு சிறுத்தல்,
ஆணுறுப்பில் வலி
போன்ற உடல் மற்றும் உளவியல் பிரச்சினைகளால் பாதிக்கப்படுவோமோ என்ற அச்சத்தை தவிர்த்து, மேற்கண்ட பிரச்சினைகளால் பாதித்திருந்தால் தயங்காமல் உடனடியாக சிறப்பு மருத்துவரை சந்தித்து தகுந்த சிகிச்சை பெற்று பிரச்சினையிலிருந்து விடுபடுங்கள்.