Home சமையல் குறிப்புகள் சாதத்துக்கு அருமையான வான்கோழி குழம்பு

சாதத்துக்கு அருமையான வான்கோழி குழம்பு

25

வான்கோழி குழம்பு மிகவும் சுவையாக இருக்கும். இந்த குழம்பை சாதத்துடன் பிசைந்து சாப்பிட அருமையாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:

வான்கோழி – 1/2 கிலோ
உப்பு – தேவையான அளவு
[பாட்டி மசாலா] மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
[பாட்டி மசாலா] மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
தண்ணீர் – 1 கப்

மசாலாவிற்கு…

எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் – 2
தக்காளி – 3
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
மல்லித் தூள் – 2 1/2 டேபிள் ஸ்பூன்
சோம்பு பொடி – 2 டீஸ்பூன்
கரம் மசாலா – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி – சிறிது
செய்முறை :

வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

வான்கோழி கறியை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

குக்கரை அடுப்பில் வைத்து, அதில் வான்கோழி, உப்பு, மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 3 விசில் விட்டு, தீயைக் குறைத்து, 15 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

பின் அடுப்பை அணைத்து, விசில் போனதும் குக்கரைத் திறந்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும். எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்க வேண்டும்.

அடுத்து அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 1 நிமிடம் கிளறி, உப்பு, [பாட்டி மசாலா] மிளகாய் தூள், [பாட்டி மசாலா] மல்லித் தூள், சோம்பு பொடி, [பாட்டி மசாலா] கரம் மசாலாவை சேர்த்து கிளற வேண்டும்.

பின்பு அதில் வேக வைத்துள்ள வான்கோழியை நீருடன் ஊற்றி கிளறி, 15 நிமிடம் மூடி வைத்து கொதிக்க விட்டு இறக்கி கொத்தமல்லியைத் தூவினால், வான்கோழி குழம்பு ரெடி!!!