Home ஆண்கள் கொரோனா வார்டில் மதுப்போத்தலுடன் ஆட்டம் போட்ட இளைஞர்!

கொரோனா வார்டில் மதுப்போத்தலுடன் ஆட்டம் போட்ட இளைஞர்!

73

திருமணம் செய்துகொண்டு அடிச்சுக்கிட்டும் அழுதுகிட்டும் இருப்பதை எல்லாம் பார்த்தாலே திருமணம் செய்யும் ஆசையே போயிடும். இதையெல்லாம் நட்பு அல்லது உறவு வட்டாரத்தின் அருகில் இருந்து பார்த்து, வெறுத்து போனவர்கள் தான் திருமணமே வேண்டாம் என்ற மனப்பாங்கிற்கு வருகின்றனர். திருமணபந்தத்தில் உள்ளவர்களின் காதல் தென்படாமல் சண்டை சச்சரவுகளை மட்டுமே கவனித்ததால் தான், கல்யாணம் என்ற பேச்சினை எடுத்தாலே சிலர் தூர ஓடி விடுகின்றனர். இந்த சூழலுக்கு வர வேறொரு முக்கிய காரணம் பெண் கிடைக்காத நிலை. சரி, ஆண் தன் வாழ்க்கை முழுவதும் திருமணமே செய்து கொள்ளாமல் இருந்தால் எப்படி இருக்கும்?

பேச்சிலராக இருக்கும் போது மனித வாழ்க்கை எவ்வளவு சுகமாக இருக்கிறது? திருமணம் என்ற பந்தத்தை நுழைத்து அது ஏன் இவ்வளவு சிக்கலாக மாற்றப்படுகிறது என்பதற்கான விடை தெரியும். குறைவான வருமானமே மிதமிஞ்சி விடும். சொத்து, வருவாய் என இரண்டுமே வீணடிக்கப்படும். எந்த கமிட்மென்ட்டும் இல்லாது போய்விடுவதால், நல்லது கெட்டது என எந்த தேவைகளுக்கும் செல்ல முடியாத நிலைவரும். அப்படி சென்றாலும் திருமணம் செய்து கொள்ளாதவர்களை, வேற்று கிரகவாசி போலவே பார்ப்பார்கள். அதுவும் திருமண வயதை கடந்து, தொலை தூரத்தில் தங்கி வேலை செய்கிறோம் என்றால், சொந்தங்கள் நமக்கு கற்பனையிலே கல்யாணம் செய்துவைத்து, குழந்தையை ஸ்கூலுக்கே அனுப்பி வைத்திருப்பார்கள். நாமும் பெற்றோர்களின் மரியாதையை கவனத்தில் கொண்டு, நம்மை நல்லவர்கள் என காட்டிக்கொள்ள துறவி வேஷம் போட வேண்டும்.

வாழ்வில் வெறுப்பு தட்டாமல் இருக்க மனதிற்கு புதிது புதிதாக ஏதோ ஒரு அனுபவத்தை கொடுத்து கொண்டே இருக்க வேண்டும். பயணங்கள் மேற்கொள்வது, புதுப்பணியிடம் என அவரவர் மனமாற்றத்திற்கு ஏற்றவாறு. இவற்றின்மீதும் ஒரு கட்டத்தில் விரக்தி ஏற்படும் போது, சூழல் வாழ்வில் பெண் இல்லாத வெற்றிடத்தை உணர்த்திவிடும். குறிப்பாக சொந்த பந்தங்களை பார்க்கும்போது..! இப்படி நீங்களும் உங்களது வாழ்வில் திருமணம் ஆகாத பெண்ணையோ ஆணையோ பார்க்கும் போது, அவர்கள் தங்களது வாழ்வை துணை இல்லாமல் எப்படி நகர்த்துகிறார்கள் என யோசித்தது உண்டா?