Home இரகசியகேள்வி-பதில் கேள்விக்கு மயக்கமா..? தயக்கமா..?

கேள்விக்கு மயக்கமா..? தயக்கமா..?

27

செக்ஸ் உறவுக்கு என் உடம்பு தகுதியானதா, தயாரா என்பதை எப்படி அறிவது?

ஒவ்வொரு பெண்ணுக்கும் முதலில் அவளது உடலின் மீது, அழகின் மீது நம்பிக்கை வரவேண்டும். எல்லாரிடமும் பிளஸ்சும் இருக்கும். மைனசும் இருக்கும். பிளஸ்சான விஷயங்களை ஹைலைட் செய்யக் கற்றுக்கொள்ள வேண்டும். கண்ணாடி முன் நின்று கொண்டு உடல் முழுவதையும் ஆராயவும். அப்போது உங்கள் உடலில் சில பகுதிகளை உங்களுக்குப் பிடிக்கும். சிலது பிடிக்காமல் போகும். பிடிக்காததற்கான காரணங்களைப் பாருங்கள். அந்த இடத்தையும் அழகாக்க என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யுங்கள். செக்ஸ் உறவுக்கு உங்களைத் தகுதிப்படுத்திக் கொள்ள, தயார்படுத்திக் கொள்ள இதுதான் அடிப்படை.

நான் கன்னித் தன்மை உடையவள்தான் என்பதை என் கணவருக்கு எப்படி நிரூபிப்பது?

மனத்தளவில் நேர்மையாக இருக்கிற பட்சத்தில் நீங்கள் இதை நிரூபிக்க வேண்டிய தில்லை. முதல் முறை செக்ஸ் உறவின் போது பெண்ணின் பிறப்புறுப்பின் வாயிலான கன்னிச் சவ்வு கிழிந்து இரத்தப் போக்கு இருக்கும். ஆனால் விளையாட்டு, நட னம், உடற்பயிற்சி போன்றவற்றில் தீவிரமாக ஈடுபட்ட பெண்களுக்கு அவற்றின் மூலமும் ஏற்கனவே கன்னி சவ்வு தளர்ந்திருக்கும். முதல் முறை உறவின் போது, கணவரிடம் அவரது செக்ஸ் அனுபவங்களைக் கேளுங்கள். அப்படி அவருக்கு எதுவும் இல்லாத பட்சத்தில் இருவருக்கும் பிரச்சினை இல்லை. அவருக்கு அந்த விஷயத்தில் அனுபவம் இருப்பதாகத் தெரிந்தால், பயமின்றி, திருமணத்துக்கு முன்பு நீங்கள் ஈடுபட்டிருந்த மேற்சொன்ன விஷயங்களைப் பற்றிச் சொல்லி அவரைத் தெளிவுப்படுத்துங்கள்.

முதல் முறை உறவு என்பது மரண வலியாக இருக்குமாமே?

முந்தைய பதிலில் சொன்னபடி கன்னி சவ்வு கிழிவதால் ஏற்படுகிற வலியே அது. ஆனால் அதுவும் பலரும் நினைத்து பயப்படுகிற அளவுக்கு மரண வலியெல்லாம் கிடையாது. அடுத்தடுத்த உறவுகளில் தானாக சரியாகி விடும். முதல் உறவு என்பது தம்பதியர் இருவருக்குமே மனத்தளவில் நிறைய இறுக்கத்தையும், டென்ஷனையும், பயத்தையும் தரக் கூடியது. அந்தச் சூழ்நிலை தவிர்க்கப்பட வேண்டும்.

உறவில் உச்சக் கட்டம் அடைய நான் என்ன செய்ய வேண்டும்?

முதல் வேலையாக அதைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பதைத் தவிர்க்க வேண்டும். பொதுவாகப் பெண்களுக்கு உறவின் போதான 20 முதல் 60 நிமிடங்களில்தான் உச்சக்கட்டம் உண்டாவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. பல பெண்களுக்கு அதற்குள் உறவே முடிவுக்கு வந்து விடுவதால் உச்சக் கட்டம் என்பதையே அறியாமலிருக்கிறார்கள். உறவுக்கு முன்பான விளையாட்டுக்களில் கணவரை அதிக நேரம் செலவிடச் சொல்ல வேண்டும். உங்களை எந்த மாதிரியான ஸ்பரிசம், எந்த விஷயம் கிளு கிளுப்படைய வைக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டு கணவரிடம் அதைத் தெரிவிக்க வேண்டும்.

உறவு முடிந்ததும் ஆண்கள் உடனடியாகத் தூங்கி விடுவது ஏன்?

உறவின் போதான உச்சக் கட்டத்தில் ஆண், பெண் இருவரது உடலிலிருந்தும் ஆக்சிடாக்சின் என்கிற ஹார்மோன் வெளியேறுகிறது. தாய்ப்பால் ஊட்டும் போது வெளியேறும் அதே ரசாயனம்தான் இது. அதனால்தான் தாய்ப்பால் குடித்த குழந்தை உடனே தூங்கி விடுகிறது. இந்த ஆக்சிடாக்சின் அம்மா- பிள்ளை இடையே பிணைப்பை உண்டாக்கக் கூடியது. அதே மாதிரிதான் செக்ஸ் உறவுக்குப் பின், பெண், ஆணைக்கட்டிக் கொண்டிருப்பதை விரும்புகிறாள். உறவுக்குப் பிறகான உறக்கத்துக்கு இதுதான் காரணம்.

செக்ஸ் உறவு வைத்துக் கொள்ள கால இடைவெளி ஏதும் அவசியமா?

திருமணமான புதிதில் அப்படியிருப்பதில்லை. போகப் போக அந்த நாட்டம் சற்றே குறைவது சகஜம். அளவுக்கதிகமான செக்ஸில் உடலுக்கு ஆபத்து ஏதும் இல்லை என்றாலும், சீக்கிரமே சலிப்பை உண்டாக்கும் அது. நினைத்தவுடன் அடைகிற விஷயத்தை விட, காத்திருந்து கைகளில் கிடைக்கிற விஷயத்துக்குத் தனி மதிப்பும், மவுசும் உண்டல்லவா? அதே மாதிரிதான் இதுவும்.