Home குழந்தை நலம் குழந்தையின் நுண்ணறிவுத் திறனை அதிகரிக்கும் தாய்ப்பால்

குழந்தையின் நுண்ணறிவுத் திறனை அதிகரிக்கும் தாய்ப்பால்

21

தாய்ப்பாலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியே குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவுகிறது. குழந்தைகளின் நுண்ணறிவுத் திறனை அதிகரிப்பதில் தாய்ப்பால் முக்கிய பங்கு வகிப்பதாக ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கிறது. புட்டிப்பால் குடித்து வளர்ந்த குழந்தைகளை விட தாய்ப்பால் குடித்து வளர்ந்த குழந்தைகளின் நுண்ணறிவுத் திறன் பல மடங்கு அதிகரித்திருப்பதாக கனடாவைச் சேர்ந்த பல்கலைக்கழக ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டது. 15,000 குழந்தைகள் இந்த ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டனர். முதல் 3 மாதங்கள் தொடங்கி 12 மாதங்கள் வரை தாய்ப்பால் ஊட்டி வளர்க்கப்பட்ட பிள்ளைகளில் 5.9 சதவிகிதம் அதிக நுண்ணறிவுத்திறன் வெளிப்பட்டிருக்கிறது கண்டறியப்பட்டது.

தாய்ப்பால் ஊட்டி வளர்க்கப்பட்ட குழந்தைகள் ஆறு வயதை அடையும் நிலையிலேயே தமது நுண்ணறிவுத்திறனைக் காண்பிக்க ஆரம்பித்து விடுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதற்குக் காரணம் தாய்ப்பாலின் கட்டமைப்பில் மூளை வளர்ச்சிக்கு அவசியமான கொழுப்பு அமிலங்கள் தான் என்கின்றனர் ஆய்வாளர்கள். பாலூட்டும்போது தாய்க்கும் பிள்ளைக்கும் இடையே ஏற்படும் உடல்ரீதியான தொடுதல் மற்றும் பேச்சுப் பரிமாற்றங்கள் கூட இதில் தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனால் குழந்தைகளின் நுண்ணறிவு வளர்ச்சி தாய்ப்பாலின் நேரடி விளைவால் ஏற்படுகிறதா அல்லது தாய்ப்பால் ஊட்டும்போது தாய்க்கும் பிள்ளைக்கும் இடையே ஏற்படும் பலமான உறவுப்பாலம் மூலம் ஏற்படுகிறதா என்பதை ஆய்வாளர்களால் உறுதியாக தெரிவிக்க முடியவில்லை. குறைந்தது 6 மாதங்களாவது குழந்தைகளுக்குப் பாலூட்டுவது நுண்ணறிவுத்திறனை மட்டுமன்றி நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.