Home அந்தரங்கம் குழந்தைக்கு கொடுக்கும் தாய்ப்பாலை கணவர் பருகலாமா? இதனால் ஏதாவது பாதகம் உண்டா?

குழந்தைக்கு கொடுக்கும் தாய்ப்பாலை கணவர் பருகலாமா? இதனால் ஏதாவது பாதகம் உண்டா?

327

சில நாடுகளில் ஆன்லைனில் தாய்ப்பால் விற்கிறார்கள், சில ஆண்கள் இது ஆரோக்கியம் நிறைந்தது என நம்புவதால் அதனை வாங்கி அருந்துவதாக ஒரு தகவல் உண்டு. ஆனால் அந்தப்பால் அசுத்தமானதாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

‘இது சரியா? குழந்தைக்காக உற்பத்தி செய்யப்படும் தாய்ப்பாலை கணவர் அருந்தலாமா?’ என கேள்வி எழுப்பப்பட்டால் அருந்தலாம் என்பதே பதில். அம்மாவிற்கு பால் பற்றாக்குறை இல்லாமல் சுரக்கிறது, ஆரோக்கியமாக உள்ளார், இருவருக்கும் பால் கொடுப்பதால் தாயிற்கு எந்த வித சோர்வும் ஏற்படவில்லை எனில் குழந்தைக்கு கொடுக்கும் பாலை கணவருக்கும் கொடுக்கலாம்.

ஆனால் தாய்ப்பால் என்பது வளர்ந்த மனிதர்களுக்கு கிடையாது, அத்தியாவசிய ஊட்டச்சத்து தேவைப்படும் குழந்தைக்கு மட்டுமே! வளர்ந்த மனிதர்கள் குடித்தாலும் எந்த பலனும் இல்லை என்பது மருத்துவர்களின் கருத்து.

ஆனால் சிலர் தாய்ப்பால் கணவர் அருந்துவதை ஆரோக்கியம் என நம்புகின்றனர். தங்களது ஆரோக்கியத்திற்கு அது உதவலாம் என தீவிரமாக நம்புகின்றனர். இதனை தவிர்த்து இந்த விஷயத்தில் தாயின் சுத்தம் முக்கியம். இருவருக்கும் கொடுப்பதாக இருந்தால், தாய் தனது மார்பகத்தை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டியது அவசியம். மற்றபடி தாய் சம்மதித்து, குழந்தைக்கு பால் பற்றாக்குறை ஏற்படின் கணவரும் பருகலாம். பருகினாலும் வளர்ந்த மனிதருக்கு இது அத்தியாவசிய ஊட்டச்சத்தை கொடுக்காது.