Home உறவு-காதல் காதலில் வெற்றி பெற சில யோசனைகள்

காதலில் வெற்றி பெற சில யோசனைகள்

15

காதலை உணர்கிற தருணமும், காதலோடு நாம் வாழ்கிற தருண மும் மிகமிக அற்புதமானது. வெற்றி தோல்வி என்பதைத் தாண்டி காதல்தான் மனிதனை வழி நடத்துகிறது. அப்படிப் பட்ட காதலை சொல்ல பல வழிகள் உண்டு. முன்பெல்லாம் அன்னம், மயில், என பறவைகளை தூது விட்டு காதலை தெரிவித்தனர். இந்த நவீன யுகத்தில் பாதுகாப் பாக எவ்வாறு காதலை வெளிப் படுத் தினால் வெற்றிகரமாக்க முடியும் என்பதற்கு சில யோசனைகள் :
– நம் ஒவ்வொருவருக்குமே நமக்கு மிகவும் பிடித்தமானவர் களை சந்தித்த அந்த முதல் தருணம் மறக்க முடியாதது. அதனை நினை வூட்டும் விதமாக நம்முடைய செயல் கள் இருக்க வேண்டும்.
– நாம் காதலிக்கிறோம் என்பதை விட நாம் காதலிக்கப் படுகிறோமா ? என்பது மிகவும் முக்கியமானது. நீங்கள் விரு ம்பும் நபரே உங்களை விரும்புகிறார் என்றால் உங்களை விட அதிர்ஷ் டசாலி யாரும் கிடையாது. உடன டியாக காதலை கன்பார்ம் செய்யும் நடவடிக்கையில் இறங்க வேண்டிய துதான்.
– நண்பர்களுடன் சேர்ந்திருக்கும் தருணங்களில் உங்களவர் உடன் இருந் தால் அவரது மொத்த கவன மும் உங்கள் மீது மட்டுமே பதிகி றதா என்று கவனிக்கவும்.
– நீங்கள் கூறும் ஒவ்வொரு வார்த் தையும் உன்னிப்பாக கவனித்து பதில் கொடுத்தால் நிச்சயம் அவர் உங்களுடையவர்தான்.
– சாதாரணமாக பேசும் பொழுது நீங்கள் அணிய உள்ள உடையின் நிறம் பற்றி நண்பர்களுடன் பேசுங்கள். உங்களுக்கு மிகவும் பிடித்த கலரை நீங்கள் அணிய உள்ளதாக கூறினால் நீங்கள் விரு ம்பும் நபரும் அதே கலர் உடையில்தான் வருவார் என்பது நிச்சசயம்.
– உங்களுக்குப் பிடித்த பாடலை முணுமுணுங்கள். உடனே அது உங்களவரின் ரிங்டோனாகவோ, காலர் டியூனாகவோ மாறி விடும்.
– பிடித்த பொருட்களை கூறு வதை விட பிடிக்காத விசயங் களை கூறுங்கள். மறுநாள் முதல் நீங்கள் விரும்பும் நபருக்கு அது பிடிக்காத தாகிவிடும்.

– எந்த ஒரு விஷேச தினமென்றாலும் வாழ் த்து சொல்லுங்கள். அது உங்கள் மீதான மதிப் பை அதிக மாக்கும்.
– எதற்காகவும் பொய் சொல்லாதீர்கள். காதல் தருணங்களில் உண்மைதான் அன்பின் ஆழத் தை அதிகப் படுத்தும்.

– நீங்கள் விரும்பும் நபர் உங்களைத்தான் விரும்பு கிறார் என்பது நிச்சயமாக தெரிந்து விட்டால் நேரடியாக சென்று இடம் பொருள் பார்த்து காத லை வெளிப்படுத்துங்கள். இந்த காலத்தில் தூது விடுவது எல்லாம் சரிப்பட்டு வராது. நம் காதலிக் கும் நபரிடம் இருந்து முத்தமோ, அடியோ எது வென்றாலும் வாங்குவது நாமாகத்தான் இருக் கவேண்டும்.