Home சூடான செய்திகள் காதலரை பெற்றோர் சம்மதத்துடன் மணந்த ‘வெயில்’ பட நாயகி பிரியங்கா

காதலரை பெற்றோர் சம்மதத்துடன் மணந்த ‘வெயில்’ பட நாயகி பிரியங்கா

17

வெயில் படத்தில் பசுபதிக்கு ஜோடியாக நடித்த பிரியங்கா தனது காதலர் இயக்குனர் லாரன்ஸ் ராமை பெற்றோர் சம்மதத்துடன் மணந்தார்.

பரத், பசுபதி, பாவனா நடித்த வெயில் படத்தில் பசுபதிக்கு ஜோடியாக நடித்தவர் பிரியங்கா. இதையடுத்து அவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்தார். தமிழில் பெரிய அளவில் பெயர் வாங்க முடியாத அவருக்கு விலாபங்களுக்கு அப்புறம் என்ற மலையாள படத்திற்காக கேரள அரசின் சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தது.

இந்நிலையில் பிரியங்காவுக்கும், ஓம்கராம் என்ற படத்தின் இயக்குனர் லாரன்ஸ் ராமுக்கும் இடையே காதல் மலர்ந்தது. கடந்த 2 ஆண்டுகளாக அவர்கள் காதலித்து வந்தனர். பிரியங்காவின் காதல் விவகாரம் அவரது வீட்டுக்கு தெரிந்தபோது முதலில் அவர்கள் எதிர்த்தாலும் பிறகு பச்சைக் கொடி காட்டினர்.

இதையடுத்து திருவனந்தபுரத்தில் உள்ள ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் வைத்து அவர்களின் திருமணம் நேற்று நடந்தது. இதில் அவர்களின் பெற்றோர்களும், முக்கிய உறவுக்காரர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

அதன் பிறகு பிரியங்கா செய்தியாளர்களிடம் கூறுகையில்,

மனதிற்கு பிடித்தவரையே மணந்துள்ளேன். திருமணத்திற்கு பிறகு நான் நடிப்பதற்கு எனது கணவர் தடை போடவில்லை. அதனால் வாய்ப்பு கிடைத்தால் நல்ல கதாபாத்திரங்களில் மட்டும் நடிப்பேன். தற்போது 2 மலையாள படஙகளில் நடித்து வருகிறேன் என்றார்.