Home ஜல்சா கல்லூரி மாணவியை கற்பழித்து படமெடுத்து மிரட்டிய பள்ளி தாளாளர்

கல்லூரி மாணவியை கற்பழித்து படமெடுத்து மிரட்டிய பள்ளி தாளாளர்

19

திருச்சி சமயபுரம் அருகே நர்சிங் கல்லூரி மாணவியை கற்பழித்ததோடு, ஆபாச படம் எடுத்து மிரட்டிய பள்ளி தாளாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருச்சி சமயபுரத்தை சேர்ந்த நர்சிங் கல்லூரி மாணவியான உஷா (19). அவர் பன்னிரெண்டாம் வகுப்பு படித்தபோது தொடக்கப்பள்ளி ஒன்றின் தாளாளரான ராஜசேகர் (47) என்பவரிடம் டியூசன் சென்றுள்ளார். அப்போது ராஜசேகர் அவர் மீது அக்கறை காட்டுவதுபோல் சில சில்மிஷங்களையும் செய்துள்ளார்.

பின்னர் அவர் கல்லூரியில் சேர்ந்து படித்தபோது அவரைப் பார்ப்பதற்காக ராஜசேகர் அடிக்கடி கல்லூரிக்கு வந்துள்ளார். இதனால் அவரது பெற்றோர் கல்லூரியில் இருந்து நிறுத்தியுள்ளனர். பின்னர், ஒரு நர்சிங் கல்லூரியில் சேர்ந்துள்ளார்.

இந்நிலையில், உஷா கணினி மற்றும் ஆங்கில அறிவை பெருக்கிக் கொள்வதற்காக மீண்டும் ராஜசேகரிடம் பயிற்சி வகுப்பில் சேர்ந்துள்ளார். இதனை பயன்படுத்திக் கொண்டு மீண்டும் ராஜசேகர் பாலியல் பலாத்காரங்கள் செய்ய தொடங்கியுள்ளார்.

மேலும், கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஒரு நாள் இரவு ராஜசேகர் எனது விருப்பம் இல்லாமலேயே கற்பழித்ததாகவும், செல்போனில் அவரது உடலை படம் எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டியும் உள்ளார். இதனை வெளியே சொன்னால் இந்த படங்களை எல்லாம் இன்டர்நெட்டில் வெளியிடுவேன் என்றும் மிரட்டியுள்ளார்.

ராஜசேகர், அந்த காட்சிகளை காட்டி மிரட்டியே பல முறை மாணவியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் மாணவி கர்ப்பம் அடைந்துள்ளார். இதனை அவரிடம் கூறியபோது, சில மாத்திரைகளை கொடுத்து கருவை கலைத்துள்ளார்.

இது குறித்து அந்த மாணவி சமயபுரம் காவல் நிலையத்தில் ஒரு புகார் ஒன்றை அளித்துள்ளார். இதனையடுத்து சமயபுரம் காவல் துறையினர் ராஜசேகர் மீது கற்பழிப்பு, கொலை முயற்சி உள்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.