Home பாலியல் கல்யாணத்திற்கு முன்பு சுயஇன்பம் செய்வது சரியா?

கல்யாணத்திற்கு முன்பு சுயஇன்பம் செய்வது சரியா?

122

எரிவதை நிறுத்தினால் கொதிப்பது அடங்கி விடும்” சுயஇன்ப பழக்கத்தால் காமத்தை அடக்கி விட்டு மற்ற விஷயங்களில் கவனம் செலுத்த முடியும். கல்யாணத்திற்கு முன்பு மட்டும் அல்ல, கல்யாணத்திற்குப் பிறகும் கூட சுயஇன்பம் தவறில்லை. சொல்லப் போனால் சில நன்மைகளும் இதில் உள்ளன. இது ஆண் பெண் இருபாலருக்கும் பொருந்தும். சுயஇன்பம் மட்டும் இல்லைனா பலரும் பல தவறான வழிகளில் செல்ல வாய்ப்புகள் அதிகம்.

பருவ வயதை அடைந்தவுடன் ஆண்களின் உறுப்பு விறைப்படைந்து விந்தணுக்களை வெளியேற்றத்துடிக்கிறது. அவ்வாறே பெண்ணின் உறுப்பு சினை முட்டைகளைத் தயாரித்து, ஆணின் விந்தணுவின் ஊடுருவலுக்காகத் தவிக்கிறது. இப்படியான நேரத்தில் இயற்கையாகவே ஆண்களின் விந்து தூக்கத்தின் பொழுது வெளியேற்றும் செயலை உடல் இயல்பாகவே புறத்தூண்டுதல் இல்லாமலே செய்து விடுகிறது. பெண்களின் சினை முட்டை பயனிழந்து உடைந்து மாதவிடாயாக வெளியேறி விடுகிறது.

இக்காலப் பகுதியில் ஆணின் உறுப்பு பலமான அழுத்தங்களுக்கு உட்படுத்தப்பட்டு, விந்தை வெளியேற்றும் பழக்கம் உருவாக காரணமாகிறது. பெண்களுக்கு மாதவிடாய் தொடங்கும் நாட்களில் உடல் சூடும், உறுப்பில் நமைச்சலும் ஏற்பட்டுப் புறத் தூண்டுதலை நாடச் செய்யும். இது தான் சுயஇன்பத்துக்கு காரணமே தவிர, வேறு எந்த குற்ற உணர்வும் கொள்ளக்கூடாது.