Home பெண்கள் தாய்மை நலம் கர்ப்பப்பை வாய் பரிசோதனை அவசியம்

கர்ப்பப்பை வாய் பரிசோதனை அவசியம்

30

கர்ப்பப்பையில் தொற்றுகள், வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சனைகள் தொடர்ந்து இருந்தால் அதை அலட்சியப்படுத்தக் கூடாது. கர்ப்பப்பை வாய் புற்றுநோய், மரபு ரீதியில் வருவதற்கு வாய்ப்புகள் இல்லை. அறிகுறிகள் இருந்தால் தான், பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்பதில்லை.

மணமான பெண்கள், மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.குறைந்தபட்சம், 35 வயது முதல், 45 வயது வரையுள்ள பெண்கள், இந்த பருவத்தில் ஒருமுறையாவது, ‘பாப்ஸ்மியர்’ பரிசோதனை செய்து கொள்வது நல்லது.அதேபோல், 35 முதல் 45 வயதிற்குள், ஹெச்.பி.வி., பரிசோதனை செய்து கொள்வதும் நல்லது.

பாப்ஸ்மியர் பரிசோதனையில், வைரசால் உண்டாகும் மாறுதல்களை மட்டும் தான் கண்டுபிடிக்க முடியும். 35 வயதிற்கு கீழ் இருந்தால், இந்தப் பரிசோதனை தேவை இல்லை. மெனோபாஸ் எனப்படும் மாதவிடாய் நின்ற பெண்களும், பாப்ஸ்மியர் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.