Home பெண்கள் தாய்மை நலம் கர்ப்பகாலத்தில் ஊர் சுற்றினால் கவனம் தேவை!

கர்ப்பகாலத்தில் ஊர் சுற்றினால் கவனம் தேவை!

28

கருவில் குழந்தை தங்கிய நாள் முதல் பிரசவநாள் வரை கர்ப்பிணிகள் தங்கள் உடல் நலனில் அதீத கவனம் செலுத்தவேண்டும். வீட்டில் உள்ள பெரியோர்களும் அதற்கேற்ப ஆலோசனைகளை கொடுத்துகொண்டுதான் இருப்பார்கள். இருந்தாலும் பயணம் செல்வது போன்ற விசயங்களில் மருத்துவர்களின் ஆலோசனைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். அதற்கேற்ப அறிவுரைகளை வழங்கியுள்ளனர் மகப்பேறு மருத்துவர்கள்.

கர்ப்பமான காலத்திலிருந்து செய்ய கூடிய ஒவ்வொரு வேலையையும், அணுகுமுறைகளையும் மிகுந்த கவனத்துடன் செய்ய வேண்டும். பயணம் செய்யும் காலத்தில் சில வழிமுறைகளை பின்பற்றினால் கர்ப்பிணிகள் கருவில் உள்ள குழந்தைகளை கவனமாக பாதுகாக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

அதிக பயணம் வேண்டாமே

கர்ப்பகாலத்தில் பயணம் செய்ய பாதுகாப்பான மாதம் மூன்றாவது மாதத்திலிருந்து ஆறாவது மாதங்கள் வரை மட்டுமே. இந்த மாதங்களில் பயணம் செய்வது மட்டுமே பாதுகாப்பானது.

கரு உருவான ஆரம்பக்காலத்தில் அதிக தூரத்தில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அக்காலக்கட்டத்தில் தான் கரு வளர்ச்சி அடைகிறது. மேலும் நீங்கள் பயணம் செய்யும் போது அபார்சன் ஏற்படுவதற்கு நிறையவே வாய்ப்புள்ளது. மேலும் தாயின் உடல் நலமும் பாதிப்பிற்குள்ளாகும்.

உயர் ரத்த அழுத்தம்

கர்ப்பகாலத்தில் பயணம் செய்ய கூடாது என்று கூறப்படுவதற்கு முக்கிய காரணம் உயர் இரத்த அழுத்தம், கர்ப்பம் தொடர்பான சிக்கல்கள், போன்றவை பயணம் ஒத்தி வைக்க பிற காரணங்களாக உள்ளன.

குறை வளர்ச்சி குழந்தைகள்

கருவுற்ற காலத்தில் பயணம் செய்யும் போது வளர்ச்சி குறைந்த குழந்தை பிறக்க நேரிடலாம். கரு சிதைவிற்கும் அதிக வாய்ப்புள்ளது.. ஒரு வேளை கருவில் இரட்டை குழந்தையாக இருப்பின் இரு குழந்தைகளும் பாதிப்பிற்குள்ளாகும் என்பதை கவனத்தில் கொண்டு பயணம் செய்வதை முடிவெடுக்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.

நீங்கள் நீண்ட தூரம் பயணம் செய்ய திட்டமிடப்பட்டு இருப்பின் உங்கள் உடல் நலம் குறித்து மருத்துவரிடம் ஆலோசனை பெற்று செல்வது அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள்.