Home சூடான செய்திகள் கண்களை நக்கும் மோகம்: குருடாகும் அபாயம்!

கண்களை நக்கும் மோகம்: குருடாகும் அபாயம்!

17

காதலர்கள் தங்களது கண்களை ஒவ்வொருவர் மாற்றி மாற்றி நக்கும் பழக்கமானது மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். கண்களை நக்கும் இவ் வினோத பழக்க வழக்கமானது ‘Oculolinctus’ என அழைக்கப்படுகின்றது.

இவ்வாறு செய்வதன் மூலம் பாலியல் ரீதியிலாக தூண்டுதல் அடைவதாக நம்பப்படுகின்றது. ஜப்பானில் இப் பழக்க வழக்கம் பல காதல் கலாசாரமாக மாறியுள்ளது. இளம் வயது காதலர்களிடையே இது மிகவும் பிரபலமானது.

எனினும் இப்பழக்கத்தின் காரணமாக கண்களில் தொற்று நோய்கள் அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சில வேளைகளில் நிரந்தரமாக குருடாக மாறக்கூடிய அபாயமும் நிலவுவதாக மருத்துவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஜப்பானில் மட்டுமன்றி பல நாடுகளில் இவ் விநோத நடவடிக்கை நீண்ட காலமாக பழக்கத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பான பல விடயங்கள் சமூகவலையமைப்புகளில் பரவிக்கிடப்பதால் பலர் இதை முயன்று பார்ப்பதாகவும் இதனால் நோயினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது. யுடியூப்பிலும் இது தொடர்பான பல காணொளிகளைக் காண முடிகின்றது. விழி வெண்படலமானது நரம்புகள் மிக்க, உணர்வு கூடிய பகுதி என்பதால் இதனை நக்கும் போது வித்தியாசமான உணர்வு ஏற்படுவதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால், இச்செயற்பாடால் இலகுவாக பக்றீரியா கடத்தப்படுவதால் கண்களுக்கு பாரிய அச்சுறுத்தல் நிலவுவதாக வைத்தியர்கள் எச்சரிக்கின்றனர். எனவே இளைஞர்கள் இது தொடர்பாக அவதானமாக இருக்கவேண்டுமென வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.