Home சூடான செய்திகள் கணவனிடம் மனைவி உண்மையாகவே எதிர்பார்ப்பது என்ன தெரியுமா?.

கணவனிடம் மனைவி உண்மையாகவே எதிர்பார்ப்பது என்ன தெரியுமா?.

32

கணவன் மனைவி உறவென்பது மிகவும் நெருக்கமானது மனம் விட்டு மனம் பேசப்படவேண்டியது, விட்டுக்கொடுப்பாலே கட்டியெழுப்பப்படவேண்டியது, பரஸ்பர ஒத்துளைப்பால் உயர்வுறவேண்டியது.

இதனாற்றானன்றோ நாலடியாரில்கூட “கொண்டானின் துன்னிய கேளிர் பிறரில்லை” என குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது ஒரு மனைவிக்கு கணவனைவிட எந்த ஒரு உறவுமே மிக நெருக்கமானதாக அமையப்போவதில்லை என்பதாகும்.

இத்தகைய மனைவி கணவனிடத்தில் பல எதிர்பார்ப்புக்களினைக் கொண்டிருப்பாள். அதனை கணவன் கண்டுகொள்ளாத சந்தர்ப்பத்திலேயே குடும்பத்தினுள் பிரிவினைகள் அதிகரிக்கின்றன.

சரி ஒரு மனைவி அப்படி என்னதான் கணவனிடத்தில் எதிர்பார்க்கிறாள் என்பதைப் பார்த்தால், இவற்றைப் பட்டியலிட்டே காட்டமுடியும்.

அன்பாகவும் , பிரியமாகவும் இருக்க வேண்டும்.
எப்போதும் மனது புண்படும்படி பேசக் கூடாது.
எந்த நிலையிலும் கோபப்படக்கூடாது.
கஸ்டப்பட்டுச் சமைத்த சாப்பாட்டில் குறை சொல்லக் கூடாது
கோவம் வந்தாலும் பலர் முன்னிலையில் திட்டக்கூடாது.
எந்த இடத்திலும் மனைவியை விட்டுக் கொடுக்க கூடாது.
முக்கிய விழாக்களுக்கு இருவரும் சேர்ந்து போக வேண்டும்.
தன்னிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.
தான் சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்ம
னைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், அதை மதிக்க வேண்டும்.
வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வேண்டும் பாராட்ட வேண்டும்.
பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும்.
வாரம் ஒரு முறையாவது. மனம் விட்டுப் பேச வேண்டும்.
மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்.
ஆண்டுக்கு ஒரு முறையாவது தூர இடங்களுக்கு சுற்றுலா செல்ல வேண்டும்.
பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும்.
இருவருக்கும் ஒளிவு மறைவு இருக்கக்கூடாது.
தன்னை கணவன் முழுமையாக நம்ப வேண்டும்.
முக்கியமானவற்றை தன்னிடமும் கூற வேண்டும்.
தன்னிடம் அடுத்த பெண்ணைப் பாராட்டக் கூடாது.
அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசப்பட வேண்டும்.
தனக்கு இருக்கும் கஷ்டம் தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும்.
உடல் நலமில்லாத போது உடனிருந்து கவனிக்க வேண்டும்.
சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.
சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.
குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் ‘இது உன் குழந்தை ‘ என்று ஒதுங்கக் கூடாது.
அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும்.
நேரத்திற்குச் சாப்பிட வேண்டும்.
சாப்பாடு வேண்டுமென்றால் முன் கூட்டியே சொல்ல வேண்டும்.
எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லி விட்டுச் சொல்ல வேண்டும்.
சொன்ன நேரத்திற்கு வர வேண்டும்.
எப்போதும் வீட்டு நினைப்பு வேண்டும்.
மனைவியின் பிறந்த நாள் தெரிய வேண்டும்.
மனைவிக்குப் பிடித்தவற்றைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
பொய், சூது, மது, மாது போன்ற தீய பழக்கங்கள் கூடாது.
மனைவி வீட்டாரைக் குறை சொல்லக் கூடாது.
கைச் செலவுக்கு பணம் தர வேண்டும்.

இந்த அனைத்து விடையங்களிலும் எந்தவொரு மனைவியும் கண்டிப்பாக மிகுந்த எதிர்பார்ப்புடனேயே இருப்பாள்.

அதனைப் புரிந்து ஒவ்வொரு கணவனும் புரிந்துணர்வுடன் செயற்படுகின்றபோதுதான் இல்லறம் நல்லறமாகின்றது எனலாம்!