Home பெண்கள் தாய்மை நலம் ஒவ்வொரு கர்ப்பிணியும் தெரிந்து வைத்திருக்க‍

ஒவ்வொரு கர்ப்பிணியும் தெரிந்து வைத்திருக்க‍

42

ஒவ்வொரு கர்ப்பிணியும் தெரிந்து வைத்திருக்க‍ வேண்டிய முக்கிய குறிப்புக்கள்
வயிற்றில் இருக்கும் த‌னது குழந்தையைப் பற்றிய‌
எண்ண‍ற்ற‍ கனவுகளுடனும் எவ்வ‍ளவுதான் அசௌக ரியங்கள் ஏற்பட்டாலும் எல்லா வற்றையும் தாங்கிக் கொள்ளும் கர்ப்பிணிப் பெண்கள் அந்த குழந் தையின் முகத்தைப் பார்த்ததும் அடையும் மகிழ்ச்சி சொல்லில் அடங்காது.
எந்தவலியைவேண்டுமானாலும் தாங்கமுடியும், ஆனால் பிரசவ வலி வந்தால், அதைத்தாங்கிக் கொள்வது என்பது கடினமானது. ஏனெனில் பெண்களுக்கு வரும் வலிகளிலேயே பிரசவ வலி மிகவும் கொடிய து. ஆகவே கர் ப்பமாகஇருப்பவர்கள், பிரசவ வலி வரப் போகிறது என்பதைத் எப்படி நிச்சயம் தெரிந்து கொள் ள வேண்டும். அவ்வாறு பிரசவ வலி வருகிறதென்றால், அதற் கென்று சில அறிகுறிகள் உள்ள ன. அந்த அ றிகுறிகளைமுன்பே தெரிந்துகொண்டால், அந்த வலி ஆரம்பிப்பதற்கு முன்பே மருத்துவமனைக்கு சென்று விடலாம். இப்போது அந்த அறிகுறிகள் என்னவென்று பார்ப்போமா!
* பிரசவ வலி வருவதற்கா ன அறிகுறிகளில் முக்கிய மானது முதுகுவலிதான். எப்போது முதுகுவலி சாதா ரணமாக வரும் வலியை விட, அளவுக்கு அதிகமாக வருகிறதோ, அதை வைத் து பிரசவ வலி வரப்போகிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
* கர்ப்பமாக இருக்கும் போ து குழந்தையின் வளர்ச்சி யினால் கருப்பை விரிவ டையும். அதுவே குழந்தை வெளியே வர ஆரம்பிக்கி றதென்றால், அதாவது பிர சவ வலி வரப்போகிறதென்றால், அந்த கருப்பை சுருங் குவதற்கு ஆரம்பமாகும். அவ்வாறு கருப்பை சுருங்கும் போது எந்த ஒரு வலியும் இருக்காது. ஆனால் நன்கு கூர்ந்து கவனித்தால், கருப்பை சுருங்குவதை அறியலாம். ஆகவே அதை வைத்து நன்கு தெரிந்து கொ ள்ளலாம்.
* கருப்பை வாய்க்குழாயிலிருந்து அதிகளவில் சளி போன்ற திரவம் வெளியேற ஆரம்பிக்கும். அவ்வா று வருவதுப்போல் தெரிந்தால், அதை வைத்தும் அறிந்து கொள்ள முடியும்.
* சில நேரங்களில் கருப்பையிலிருந்து இரத்தம் வடிய ஆரம்பிக்கும். அவ்வாறு நிகழ்ந்தால், உடனே மருந்து வரை அணுக வேண்டும்.
* ஏழாவது மாதத்திற்குமேல் அடி க்கடி சிறுநீர் அவசரமாக வருவது போன்று இருக்கும். ஆனால் அது வே பிரசவம் நடைபெறப் போகிற தென்றால், அப்போது சற்று வித் தியாசமாக உணர்வீர்கள். சொல் லப்போனால், வயிற்றில் ஒன்று மே இருக்காது, இருப் பினும் அவசரம் என்பதுபோல் இ ருக்கும். ஏனெனில் அது வயிற்றில் இருக்கும் குழந்தை வெளியே வருவத ற்கான ஒரு அறிகுறி.

* ஏழாம் மாதத்திலிருந்து வ யிற்றில்உள்ள குழந்தையின் அசைவை நன்குஉணரமுடியு ம். ஆனால் பிரசவவலி வரு வதற்குமுன், குழந்தையின் அசைவு குறைந்துவிடும். ஏ னெனில் அப்போது குழந்தை வெளியே வருவதற்கு ஒரு சரியான ஒரு நிலையை அமைந்து இருப்பதே ஆகும்.

மேற்கூறியவையே பிரசவவலி வரப்போவதற்கான அறிகுறி. ஆகவே இந்த மாதிரி யான அறிகுறிகளை நீங்கள் உணர்ந்தால், உடனே மருத்து வமனைக்கு செல்வது நல்லது. மேலும் வேறு என்ன அறிகுறி கள் இருக்கும் என்பது உங்களு க்கு தெரிந்தால், அதை எங்க ளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.