Home பாலியல் பெண்ணுறுப்பில் ஏற்படும் பிரச்சனைகள்

பெண்ணுறுப்பில் ஏற்படும் பிரச்சனைகள்

61

i3ஆணும் பெண்ணும் பல வழிகளில் உடலமைப்பில் ஒன்று போலவே உள்ளனர். இருவருக்குமே இதயம், சிறுநீரகம், நு ரையீரல் என்று பல உறுப்புகள் ஒரே மா தியாகவே உள்ளது. இவர்களுக்கிடை யே உள்ள ஒரே வித் தியாசம் இவர்களி ன் பாலியல் மற்றும் இனவிருத் திக்கான உடலுறுப்புகள் வெவேறு விதமாக அமைந்துள்ளதுதான். ஒரு ஆணும் பெண்ணும் இணைந்து குழந்தையை உரு வா க்க இந்த உறுப்புகள் மூலம்தான் சாத்தியம் ஆகிறது. பெண்க ளின் பல ஆரோக்கியப் பிரச்சினைகள் இந்த உறுப்புகளை பாதிப்பதாய் அமைந்துள்ளது. பாலியலுடன் சம்பந்தப்பட்ட நம் உடலுறுப்புகளை குறித்து பேசுவது சற்று கடினமான காரியம்தான். குறிப்பாக நீங்கள் வெட்கப்படுபவராக இருந்தால் இதை குறித்து விவாதிப்பது ரொம்பவே கஷ்டம். உடலின் பல்வேறு இனப்பெருக்க உறுப் புகளின் பெயர்கள் உங்களுக்கு தெரியவில்லை என்றாலும் விவாதிப்பது கஷ்டம்தான். இன விருத்திக்கான உடலுறுப்பு கள் பொதுவாகவே அந்தரங்கமான ஒன்றாகவே எங்கும் கருதப்படு கிறது. நம் உடல் எப்படி இயங்குகிறது என்று நமக்கு தெரிந்தால் நம் உடலை நம்மால் மேலும் நன்றாக பார்த்துக் கொள்ள முடியும். பிரச்சினைகள் வரும்பொழுது அதற்கான காரணங் ளை நம்மால் புரிந்து கொள்ள முடியும். அந் த அடிப்படையில் பிர ச்சினையின் காரணத் தை அறிந்து, எது சிற ந்த சிகிச்சை என முடி வெடுக்க முடியும். நம் மைபற்றி மேலும் மேலும் அறியும் பொ ழுது மற்றவர்களின் அறிவுரை (நல்ல தோ, கெட்டதோ எது வாய் இருந்தாலும்)யையும் மீறி நம்மா ல் சொந்த முடிவு எடுக்க முடியும். ஒரு பெண்ணுக்கு பெண் என்பதற்கு அடையாளமான இனவிருத்தி உறுப்புகள் உடலுக்கு உள்ளேயும், வெளியேயும் அமைந் துள்ளன. இவை பிறப்புறுப்புகள் அ ல்லது இனவிருத்திக்கான உறுப்புக ள் என அழைக்கப்படுகின்றன. வெ ளிப்பாகத்தை உல்வா என்றழைப்ப ர். இந்த பாகம் முழுவதையும் சில ர் யோனி என்றழைப்பதுண்டு. ஆ னால் யோனி என்பது உல்வாவின் திறப்பிலிருந்து உள்ளே க ர்ப்பப்பை வரை போகின்ற வழி யாகும். யோனியை சிலநேரங்களில் பிறப்பு வழி என்றும் அழைப்பது ண்டு. கீழேஉள்ள வரைபடத்தில் உல்வா விளக்கப்பட்டுள்ள து. அதன் பல்வேறு பாகங் களின் பெயர்கள் தரப்பட் டுள்ளன. ஆனால், பெண்ணுக்கு பெண் உடல் வித்தியாசப்ப டும். உறுப்புகளின் அளவு, வடிவம் நிறம்கூட வித்தியாசப்படு ம். குறிப்பாக வெளி மற்றும் உள் மடிப்புகள் ஒருவருக்கு ஒருவர் வித்தியாசப்படும். மார்பகங்கள் மார்பகங்கள் எல்லா வடிவி லும் எல்லா அளவிலும் கா ணப்படும். ஒரு பெண்ணுக்கு 10 முதல் 15 வயது ஆகும் போது இது வளர ஆரம்பிக்கி றது. அதாவது சிறுமியாயிரு ந்து பூப்படையும் பருவத்தில் இது வளர ஆரம்பிக்கிறது. க ருத்தரித்த பின் குழந்தைக்கான பால் இங்குதான் உற்பத் தியாகிறது. உடலுறவின் போது இதைத் தொட்டால் பெண் ணின் யோனிக் குழாய் ஈரமாகி பெண்ணை உடலுறவுக்கு தயார்படுத்துகிறது. மார்பகத்தின் உள்பாகம் சுரப்பிகள் : குழந்தைக்கான பாலை உற்பத்தி செய்கிறது. சுரப்பி குழாய்கள் : இவை பாலை மார்புக் காம்புக்கு கொண்டு செல்கிறது. திறவு (Sinuses) : குழந்தை பால் குடிக்கு ம்வரை பால் இங்குதான் சேமித்து வைக்கப்படுகி றது. மார்புக்காம்பு : இதன் வழியே பால் வெ ளிவருகிறது. சில நேரம் இது விரை த்து வெளியே நீட்டிக் கொண்டிருக்கும். சில நேரம் இது தட்டையாக இருக்கும். ஏரியோலா (Areola) : மார்புக்காம்பை சுற்றிய கருத்த மேடான பகுதி. கருவட்டத்தில் உ ள்ளமேடுகள் எண்ணெய் பசை யைஉற்பத்தி செய்கின்றன. அவை மார்புக்காம்பை சுத்தமாகவும் மிரு து வாகவும் வைத்திருக்க உதவுகிறது. பருவமாற்றங்களும் ஹார்மோன்களும் ஹார்மோன்கள் உடலில் சுரக்கும் விஷேச வேதிப்பொருட்க ளாகும். இவை உடல் எப்போது, எப்படி வளர வேண்டும் என்பதை கட்டுப்படுத்துகி றது. ஒரு பெண்ணுக்கு முதல் மாத விடாய்க்கு சற்று முன்பு எஸ்ட்ரோ ஜன் மற்றும் புரோஜெஸ் டெரோன் என்ற இரு ஹார்மோன்கள் சுரக்கின் றன. இவை இரண்டும் பெண்ணுக் கே உரிய இரு முக்கிய ஹார்மோன் கள். இந்த இரு ஹார்மோன்களால் தான் பெண் பருவமடை கிறாள். பருவமடைந்தபின் மாதவிடாய் நிற்கும்வரை, ஹார்மோன் கள் பெண்ணை ஒவ்வொரு மாதமும் கருத்தரிப்பதற்கான வாய்ப்பிற்கு தயார்படுத்துகிறது. இந் த ஹார்மோன்களின் ஆணைப்படிதான் ஒவ்வொ ரு மாதமும் சினைப்பைகள் ஒரு முட்டையை வெளியி டுகின்றன. ஒரு பெண் கருத் தரிக்க இந்த ஹார்மோன்க ள் முக்கிய காரணமாய் வி ளங்குகின்றன. பல குடும்ப கட்டுப்பாட்டு வழிமுறைக ள் இந்த ஹார்மோன்களை கட்டுப்படுத்துவது மூலம் நடக்கிறது. கருத்தரித்த பின்பும், தாய்பால் ஊட்டும் போதும் கூட ஹார்மோன்கள் பல மாற்றத்தை உண்டாக்குகின்றன. இந்த ஹார்மோன்களால் தான் கர்ப்பமாயிருக்கும் போது மாதவிடாய் வருவ தில்லை. குழந்தை பிறந்த உடனே பால் சுரக்க வைப் பதும் இந்த ஹார்மோன்க ள்தான். ஒருபெண் இனவிருத்தி க் கான கட்டத்தை கடக்கும் பொழுது, இந்த இரு ஹார்மோன்களும் சுரப்பது படிப்படியா க குறையு ம். சினைப்பைகளும் முட்டையை வெளியிடாது. அவள் உடலில் கருத்தரித்தலுக்கானநிலை முடிந்து போகும். மாதவிடாய் முற்றிலுமாக நின்று போகும். இதற்கு பெ யர்தான் “மாதவிடாய் நின் று விடுதல்” (Menopause) அதைத் தொடர்ந்து பெண் ணின் உட லில் சுரக்கும் ஹார் மோன்களின் தன்மை மற்றும் அளவுக்கேற்ப அவ ளின் மனநிலை, காம உண ர்வு, எடை, உடல்சூடு, பசி மற்றும் எலு ம்பின் சக்தி ஆகிய வற்றிலும் மாற்றம் ஏற்படும். மாதவிடாய் ஒரு பெண் இனவிருத்திக்கான காலக்கட்டத்தில் இருக்கும் பொழு து, ஒவ்வொரு மாதமும் சில நாட் கள் அவளின் கர்ப்பப் பையிலிருந் து இரத்தம் யோனிக்குழாய் வழி யாக உட லை விட்டு வெளியேறு கிறது. இதற்கு பெயர்தான் மாதவி டாய். மாதவிடாய் நடப்பது உடல் நல்ல நிலையில் இருப்பத ற்கு அடையாளம். இதன் மூலம் உடல் கருத்தரித்தலுக்கு த யாராகிறது. இந்த மாதவிடாயை பல பெண்கள், தங்கள் வாழ்வின் ஒரு அம்சமாக ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால் பலநேரங்க ளில் அவர்களுக்கு இது ஏன் நிகழ்கிறது? இந்த மாற்றம் ஏன் ஏற் படுகிறது என்றெ ல்லாம் தெரிவதில்லை. மாதாந்திர சுற்று (மாத விடாய் சுற்று) மாதாந்திரச் சுற்று ஒவ்வொரு பெண்ணுக்கும் வித்தியாசப்ப டும். இரத்தப்போக்கு வரும் முதல் நாள் இது தொடங்குகிற து.பெரும்பாலான பெண்களு க்கு 28 நாட்களுக்கு ஒரு முறை இந்த ரத்தப்போக்கு ஏற்படும். சில பெண்களுக்கு 20 நாட்க ளுக்கு ஒரு முறை கூட இது ஏற்படும். சில பெ ண்களுக்கோ 45 நாட்களுக் கு ஒருமுறைதான் இது நிக ழும். மாதவிடாய் சுற்றின் போது, ஒவரியில் சுரக்கும் எஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெ ஸ் டெரான் ஹார்மோன்களின் அளவு மாறிக்கொ ண்டேயி ருக்கும். மாதச்சுற்றின் முதல்பாதியில் பெரும் பா லும் சினை ப்பையில் ஈஸ்ட்ரோஜன்தான் சுரக் கும். இதனால் கருப்பை யின் உட்சுவரில் ரத்தம் மற்றும் திசுக்களாலான மிருதுவான படலம் உரு வாகிறது. ஒரு வேளை பெண் கருத்தரித்தால் உருவாகும் குழந்தை இந்த மிருதுவா ன கூட்டில் சுகமாக இருக்கும். மாதச்சுற்றின் மத்தியில், கருப்பையின் மிருதுவான உட்சுவர் தயார் ஆன உடன், ஏதாவது ஒரு சினைப்பையில் இருந்து முட்டை ஒன்று வெளியேறு ம். இம்முட்டைஃபெலோப்பி யன் குழாய் வழியாக கருப் பையை அடையும். அப் போது பெண் கருத்தரிக்க ஆயத்த நிலையில் இருப் பாள். அப்போது பெண் உட லுறவுக் கொண்டாள், ஆ ணின் உயிரணு முட்டை யோடு சேர வாய் ப்புண்டு. இதற்கு கருத்தரித்தல் என ப்பெயர். அது கர்ப்ப காலத் தின் தொடக்கமும் ஆகும். மாதச்சுற்றின் இரண்டாம் பாக த்தில், அதாவது அவளது அடுத்த மாதவிடாய் தொடங் கும் வரை அவள் உடல் புரோஜெஸ்டொரோன் ஹார்மோனை சுரக்கிறது. இந்த ஹர்மோ னும் கருத்தரிதலுக்கு ஏதுவா க கருப்பையின் மிருதுவான உட்சுவரை உருவாக்குகிறது. பெரும்பாலான மாதங்களில் பெண்ணின் முட்டை கருத்த ரிக்காது. எனவே கருப்பையி ன் சுவர்ப்படலத்துக்கு தே வையிருக்காது. சினைப்பைகளும், ஹார்மோன்கள் சுரப்ப தை நிறுத்தி விடும். இதன் விளைவாய் சுவர்படலமானது உடைந்து சிதையும். உடைந்து சிதைந்த இரத்தக்குழம்பு கரு ப்பையிலிருந்து மாதவிடாயின்போது, உடலை விட்டு வெளியேறும். இதனோடு கூடவே முட்டையும் வெளியேறு ம். இது புதியமாதாந்திர சுற் றின் தொடக்கமாகும். மாத விடாய் நின்ற உடன் சினைப் பைகள் சுவர்ப்படலம் உரு வாகும். பெண்களுக்கு வய தாகி, மாதவிடாய் முற்றிலு மாக நிற்பதற்கு முன்பு இரத் தப்போக்கு அடிக்கடி ஏற்பட லாம். இரத்தப்போக்கின் அள வும், இளமையாய் இருந்தபோது உண்டானதைவிட அதிக மாக இருக்கலாம். மாதவிடாய் நிற்கப் போகும் காலத்தில் (மெனோபாஸை நெருங்கும் சமயத்தில்), மாதவிடாய் சில மாதங்கள் நின்று மீண்டும் தொடங்கலாம். பெண்ணின் இனவிருத்தி உறுப்பின் வெளிப்பாகங் கள் உல்வா : உங்கள் இரு தொடைகளு க்கு இடையே காணப்படும் இனவி ருத்தி உறுப்புகள் வெளிமடிப்புகள் : தடித்த சதைப் பகுதி கால்கள் ஒன்றாக இருக்கும்பொழுது இவை மூடிக்கொள் ளும். இது உள் பாகங்களை பாதுகாக் கிறது. உள்மடிப்புகள் : இது மிருதுவான தோல் பகுதி. இதில் முடி இருக் காது. தொ ட்ட உடனே உணர்ச்சி வரும். உடலு றவின் போது இப்பாகம் விரிவடையும். இதன் நிறம் கருமையாகும். யோனிக் குழாயின் திறப்பு : யோனியின் திறப்பு வாயில் ஹைமன் (Hymen) : யோனியின் திறப்பில் உள்ளே அமைந்துள்ள மெல்லிய சதைப் பகுதி. கடின வேலை விளையா ட்டு போன்ற நடவடிக்கைகளின் போது இத்தோல் பகுதி விரிவ டையும் அல்லது கிழிபடலாம். அப்போது லேசாக இரத்தம் வரு ம். முதன்மு றையாக உடலுறவி ன் போதும் இது கிழிபடலாம். ஒவ்வொரு பெண்ணுக்கும் ஹைமன் வித்தியாசப்படும். சில பெண்களுக்கு ஹைமன் னே இருக்காது. மோன்ஸ் (Mons) : முடிகள் அடர்ந்த, உல்வா வின் தடித்த மேல் பகுதி. கிளிட்டோரிஸ் : மலர்மொட்டு போன்று சிறு பாகம். உல்வாவின் பாகங்க ளிலேயே மிகுந்த உணர்ச்சி தரக்கூடியது. இதையும் இதைச் சுற்றியு ள்ள பகுதியையும் தேய்த்தால் பெண்ணுக்கு பாலிய ல் வேட் கை அதிகமாகி உச்சக் கட்டத்தை அடைவாள். சிறுநீர்த்துவாரம் : சிறுநீர் குழாயின் வெளித்திறவு வா யில். சிறுநீர்ப் பையில் சேமிக்கப்ப ட்டுள்ள சிறுநீர் இக்குழாய் வழியே தான் உள்ளிருந்து வெளியே வருகி றது. ஆசனவாய் (Anus) : குடல்வாய் திறப்பு, கழிவு (மலம்) இதன் வழியாக வெளியே றும் பெண்ணின் இனவிருத்தி உறுப்புகளின் உட்பாகங்கள் சினைப்பை: ஒவ்வொரு மாதமும் சினைப்பையிலிருந்து ஒரு முட்டை பெலோப்பியன் குழாய்க்கு அனுப்பப்படுகிறது. ஒரு ஆணின் விந்தணு இதோடு இ ணையும் பொழுது அது குழந்தையாக உருப்பெற துவங்குகிறது. ஒரு பெ ண்ணுக்கு இரு சினைப் பைகள் இருக்கும் கருப் பையின் இரு புறமும் ஒவ்வொன்றும் இருக்கு ம். ஒவ்வொரு சினைப் பையும் ஒரு திராட்சைப்பழ அளவில் இருக்கும். கர்ப்பப்பை வாய் : கருப்பையின் வாயைத் தன் கர்ப்பப்பைவாய் என சொல் கிறோம். கருப்பையின் இத்திறப்பு யோனிக்குள் செல்கிறது. ஆணின் உயிரணு கர்ப்பப்பைக் குள் கர்ப்பப்பை வாயில் உள்ள சிறுதுவாரம் வழி யே உள்ளே நுழைகிறது. அதே நேரத்தில் ஆண் குறி போன்ற மற்றவை கருப்பையில் நுழைய முடியாதபடி இதுதடுக்கிறது. குழந் தைப் பிறப்பின்போது, இது திறந்து குழந்தை வெளியே வர உதவுகிறது. .ஃபெலோப்பியன் குழாய்கள் : இக்குழாய்கள் சினைப்பையையும் கர்ப்பப்பையையும் இணைக்கிற து. சினைப்பை ஒரு முட்டையை வெளியிடும் போது, அம்முட்டை இக்குழாயில் பயணம் செய்து கரு ப்பை யை அடைகிறது. கர்ப்பப்பை : உள்ளே வெற்றிடத் தைக் கொண்ட தசையாலான பகுதி மாத விடாயின் போது இங்கிருந்து தான் இரத்தம் வெளியேறு கிறது. கருத்தரித்த பின் குழந்தை இங்குதான் வளர்கிறது. யோனிக்குழாய் அல்லது பிறப்புவழி: உல்வா (Vulva)விலிருந்து கர்ப்பப்பை க்கு செல்லும் பாதை தான் யோனிக் குழாய். இதன் தோல் பகுதி விஷேச மானது. உடலுறவின் போதும் குழந் தைப் பிறப்பின்போது இத்தோல் பகுதி சுலபமாக விரிவடை கிறது. இதிலிருந்து வெளிப்படும் திரவம் அல்லது ஈரம் யோ னிக்குழாயை சுத்தமாக வைத்துக் கொள்ள வும், கிருமி கள் தாக்காமலும் பாதுகாக்கிற து. பெண்களின் பாலியல் பிரச்சனைகள் வளர்கின்ற பருவத்தில் பெரும்பாலான பெ ண்களுக்கு காதல் மற்றும் காம உணர்வுக ள் வரத்தான் செய்யும். தாங்கள் யாரையா வது தொடவேண்டும் அல்லது யாராவது தங்களை தொடவேண்டும் என்று அவர்கள் இச்சையுடன் நி னை ப்பது சாதாரண விஷயம்தான். பெண்கள் உடலுறவில் ஈடு பட பல காரணங்கள் உண் டு. சிலர் குழந்தைவேண்டி உடலுறவில் ஈடுபடுகிறார் கள். சில ருக்கு உடலுறவு சந்தோஷம் அளிப்பதாய் உள்ளது. சிலருக்கு அது தே வைப்படுகிறது என்பதனா ல் உடலுறவில் ஈடுபடுகி றார்கள். சிலர், அதில் விரு ப்பம் உண்டோ, இல்லை யோ, மனைவி என்ற அடிப்படையி ல், கடமைபோல் அதில் ஈடுபடுகிறார்கள். சிலர்பணத்திற்கா க அல்லது வாழ்க்கையில் உயிர் வாழ் வதற்கு தேவையான உணவு அல்லது தனது குழந்தைகளுக்கு உடைகள் வா ங்குவதற்காக அல்லது தங்க இடம் வே ண்டி கட்டாயப்படுத்தப்பட்டு அதில் ஈடு படுத்தப் படுகிறார்கள். மற்ற பெண்கள் தன்னுடைய துணைவ ன் தன்னை அதிகம் நேசிக்கவேண்டும் என்பதற்காக உடலுற வில் ஈடுபடுகிறார்கள். சில நேரங்களில், பெண்ணின் நண்ப னோ அல்லது காதலனோ, பெண் தயாராக இல்லாத போது கூட அவனுடன் உடலுறவு கொள்ளவேண் டும் என வலியுறுத்தி அவ ளை ஏற்றுக்கொள்ளச் செய் கிறான். தான் விரும்பாத பொழுது, எந்த ஒரு பெண்ணும் உட லுறவின் ஈடுபடக்கூடாது. தான் அதற்கு தயார் என்று பெண் ணாகிய நீங்கள் முடிவு செய்த பின்னரே அதில் ஈடுபட வேண்டும். உடலுறவு என்பது, அதில் ஈடுபடும் இருவருக்கு மே மகிழ்ச்சி தரக்கூடிய து. ஆனால் அதில் பய மோ, வெட்கமோ இருக் கும் பட்சத்தில் அந்த மகி ழ்ச்சி கிடைப்பது கடின ம். உடலுறவுக்கு நீங்கள் தயாரானவுடன், கருத்த ரித்தல் மற்றும் பால்வி னை நோய்களி லிருந்து உங்களை எப்போதும் பாதுகாத்துக் கொள்ள தயாராக இரு க்க வேண்டும். காதலனோடு உடலுறவு வைத்துக் கொள்ள நிர்பந் தம் உலகம் முழுவதும், பல பெண்களும் இளம் பெண் களும் விருப்பமில்லாமல் உடலுறவில் ஈடுபட நிர்பந் திக்கப்படுகிறார்கள். பெரு ம்பாலும் காதலர்கள் என் று சொல்லிக் கொள்ளும் அவர்களின் ஆண் நண்பர்களே இவ்வாறு நிர்ப்பந்திக்கிறார்கள். சில இடங்களில் இதை ‘காதலனின் பலாத் காரம்’ (Date rape) என்றழைக்கின்றனர். இந்த நிர்ப்பந்தம் உட ல் ரீதியானது மட்டும ல்ல. உணர்வுகளாலு ம், வார்த்தைகளாலு ம் கூட அவர்கள் நிர்ப் பந்திப்பார்கள். விருப் பமில்லாமல் யாரையும், யாரும் பாலுறவுக்கு நிர்ப்பந்திக்கக் கூடாது. உங்கள் குடும்ப உறுப்பினர் யாராவது உங்களோடு உடலுறவு வைத்துக் கொ ள்ள முயற்சித்தால் (முறைக் கெட்ட உறவு) நீங்கள் விரும்பவில்லையெனில் உங் கள் விருப்பத்திற்கு மாறாய், எவ்வளவு நெருக்கமானவராய் இருந்தாலும், அவர் உங்களை தொடக்கூடாது. அது தவிர உங்களை தந்தை, சகோதரன், மாமா, அல்லது ஒன்றுவிட்ட சகோதரன் போன்ற எந்த குடு ம்ப உறுப்பினரும் உங்களின் பிறப்புறுப்பையோ, அல்லது உடலின் வேறு எந்த பாகத் தையோ, காம உணர்வோ டு தொ டக்கூடாது. அப்படி யாரேனும் தொட்டால், உடனே நீங்கள் உதவி நாட வேண்டும். வெளியே சொ ன்னால் உனக்கு ஆபத்து என்று தொட்டவர் பயமுறு த்தினால் கூட, நீங்கள் நம் பும் ஒருவரிடம், எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக சொல்ல வே ண்டும். இந்த விப ரத்தை உங்கள் குடும்பத்திற்கு வெளியே உள்ள ஒருவரிடம் சொன்னால், இன்னமும் நல்லது.