Home சூடான செய்திகள் ஐபிஎல் தொடக்க விழாவில் கலகலப்பூட்டிய கேத்தி பெர்ரி

ஐபிஎல் தொடக்க விழாவில் கலகலப்பூட்டிய கேத்தி பெர்ரி

13

சென்னை: விறுவிறுப்பு மிகுந்த 5வது ஐபிஎல் தொடரின் துவக்க விழாவில் ஹாலிவுட் பாடகியும், நடிகையுமான கேத்தி பெர்ரி தனது கவர்ச்சிகரமான காஸ்ட்யூம் மற்றும் இனிய குரலில் ரசிகர்களை ஈர்த்தார்.

கிரிக்கெட் ரசிகர்களை மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து இழுக்கும் வகையில் ஐபிஎல் தொடர் ஆண்டும் பிரபலமடைந்து வருகிறது. இந்த நிலையில் 5வது ஐபிஎல் தொடரின் துவக்க விழா இன்று மாலை 7.30 மணிக்கு சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடந்தது.

விழாவின் இறுதி நிகழ்ச்சியாக அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த கேத்தி பெர்ரியின் பாடல் மற்றும் நடனம் இடம் பெற்றது. தனது ட்ரூப்புடன் கலகலப்பாக பாடி அனைவரையும் கலகலக்க் வைத்தார் கேத்தி பெர்ரி.

இந்திய உடையையும், மேற்கத்திய உடையையும் மிக்ஸ் செய்து வித்தியாசமான கவர்ச்சியுடன் காணப்பட்ட கேத்தி, தனது இனிய குரலால் கூடியிருந்தோரை வசீகரித்தார்.

அவருடைய ட்ரூப்பைச் சேர்ந்த 2 பெண்கள், இந்திய சேலையை அணிந்தபடி மேற்கத்திய டான்ஸில் வெளுத்துக் கட்டியது பார்க்க வினோதமாக இருந்தது.

முன்னதாக, கேத்தி பெர்ரி, நேற்று விமானத்தில் சென்னை வந்து சேர்ந்தார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தாஜ் கோரமண்டல் ஹோட்டலுக்கு வந்த அவருக்கு, இந்திய பாரம்பரிய முறையில் ஆர்த்தி எடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டு, பொன்னாடை பரிசளிக்கப்பட்டது.

தனது இந்திய வருகை குறித்து கேத்தி பெர்ரி ட்விட்டரில் கூறுகையில், சென்னைக்கு வருவதற்கு மகிழ்ச்சியாக உள்ளது. இதைக் கெளரவமாக உணர்கிறேன். இந்தியாவில் இதுதான் எனது முதல் நிகழ்ச்சி என்று கூறினார்.