Home பெண்கள் எல்லா பெண்களுக்கும் உணர்வு தூண்டப்படும் போது, மதன நீர் வருவது உண்மையா? வெளிப்படையாக சொல்லத் தயங்கும்...

எல்லா பெண்களுக்கும் உணர்வு தூண்டப்படும் போது, மதன நீர் வருவது உண்மையா? வெளிப்படையாக சொல்லத் தயங்கும் விஷயம்!

480

இது குறித்த அறிவை ஏற்கனவே நிறைய நபர்கள் பெற்று இருந்தும், வெளிப்படையாக சொல்ல தயங்குவது, பல குடும்பங்கள் சிதைந்து போவதற்கு காரணமாகும். சில தம்பதிகள் காரணம் இன்றி பிரிவதற்கு, இது குறித்த அறிவைப் பெறாமல் இருப்பதும் ஒரு முக்கிய காரணம் என்றும் நான் கருதுகிறேன். இந்த” மதனநீர்” அறிவை பெற்று இருப்பவர்களுக்கு, நிச்சயம் கணவன், மனைவி உறவுகளில் விரிசல் ஏற்படாது. கணவன் மனைவி தாம்பத்திய உறவு என்பது ரகசியம். அதே சமயம் அறிவு என்பது சமூக வளர்சிக்கு பயன்பட வேண்டும்.

ஆங்கிலத்தில் கணவன் மனைவி உறவு குறித்து எத்தனையோ தகவல்கள் கொட்டிக்கிடக்கிறது. தமிழில் பலரும் பேசத்தயங்குவதால், எவ்வளவு தேடினாலும் சொற்ப அளவிலான புரிதல் மட்டுமே கிடைக்கும். இனி இங்கு சற்று விரிவாக பார்க்கலாம். முதலில் மதன நீர் வேறு, பெண்ணின் உச்சகட்டம் வேறு என்பதை மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டும். இரண்டையும் போட்டு குழப்பிக்கொள்ள கூடாது. மதன நீர் வந்தாலே பெண் உச்ச கட்டம் அடைந்துவிட்டதாக நினைத்து பல ஆண்கள் செய்யும் தவறால், உறவில் மனைவியை திருப்திபடுத்த முடியாமல் போகிறது. உறவில் விரிசலுக்கு முதல் படியே தாம்பத்திய உறவில் சொதப்புவது.

எல்லா பெண்களின் பிறப்புறுப்பும் ஒரே வடிவில் இருப்பதில்லை. தாமரை மொட்டுபோல குவிந்ததும், வட்டமானதாகவும், மடிப்பாகச் சேர்ந்திருப்பது போலவும் பல வடிவங்களில் அமையப்பெற்றிருக்கும். அசிங்கமாக திட்டுவதற்கு பிரயோகிக்கும் வார்த்தைகள் பெரும்பாலும் பெண்ணின் பிறப்புறுப்பை மையப்படுத்தியே இருக்கும். அது தான் ஏன் என்று தெரியவில்லை. ஒரு பக்கம் முறை தவறிய கா மம் தவறாக பார்க்கப்பட்டாலும், முறையான தாம்பத்திய உறவின் மூலம், இவ்வளவு காலம் உலகில் மனித இனம் நிலைத்திருப்பதற்கு காரணமே, எல்லோரும் இழிவாக பார்க்கும் பிறப்புறுப்பு தான்.

பெண்ணின் பிறப்புறுப்பில் ஒரு நாடி இருக்கும். அது தூண்டப்படும் போது, மிகுதியான மதன நீர் உருவாகும். அது எந்த அளவுக்கு தூண்டப்படுகிறதோ, அந்த அளவுக்கு ஒரு பெண்ணை உறவில் திருப்திபடுத்த முடியும். வெறுமனே உயவுத்தன்மைக்காக சுரக்கும் நீரை வைத்து, ஒரு பெண் உச்சம் அடைந்துவிட்டாள் என்ற முடிவுக்கு வரக்கூடாது. தாம்பத்தியத்தில் புது புது பொசிஷனை ஏற்றுக்கொண்டு, அதற்கேற்ப உணர்வை தூண்டக்கூடியது அந்த நாடி. அதனை சரியாக கணிக்க தெரிந்து தூண்டிவிடும் ஆண்கள் கட்டில் விளையாட்டில் வெற்றி காண்கின்றனர். எல்லா வித்தையும் கற்றுக்கொண்ட ஒரு ஆண், ஒரே நேரத்தில் பெண்ணை பல முறை கூட உச்சம் அடையச்செய்ய முடியுமாம். ஆனால் ஆணுக்கு சுட்டுப்போட்டாலும், ஒரு தடவைக்கு மேல் முடியாது.