Home ஜல்சா எதிர்வீட்டு அங்கிள் அம்மாவை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துவிட்டு செல்வார்’ – தந்தை கொலை குறித்து பொலிஸ்...

எதிர்வீட்டு அங்கிள் அம்மாவை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துவிட்டு செல்வார்’ – தந்தை கொலை குறித்து பொலிஸ் விசாரணையில் 4 வயது சிறுமி தெரிவிப்பு

43

தந்­தையை கொலை செய்த தாயின் கள்­ளக்­கா­த­லனின் விப­ரங்கள் குறித்து பொலிஸாரிடம் விசா­ர­ணையின்போது 4 வயது சிறுமி ஒருவர் தெரி­வித்­துள்ள சம்­பவம் தமி­ழ­கத்தில் இடம்­பெற்­றுள்­ளது.
தமி­ழ­கத்தின் மேட­வாக்­கத்தைச் சேர்ந்த அறி­வ­ழகன் (35). ராயப்­பேட்­டை­யி­லுள்ள தியேட்­டரில் எலக்ட்­ரீ­சி­ய­னாக வேலை செய்து வந்தார். உற­வுக்­கார பெண் சுரேகா (24) என்­ப­வரை மூன்று ஆண்­டுகள் காத­லித்து அறி­வ­ழகன் திரு­மணம் செய்­துள்ளார்.
6 ஆண்­டுக்கு முன் இவர்கள் திரு­மணம் நடந்­துள்­ளது.
இந்த தம்­ப­திக்கு சாதனா (4) என்ற மகள் உள்ளார். இந்­நி­லையில் கடந்­த­வாரம் 4 பேர் இவர்கள் வீட்டுக் கதவை உடைத்துக்கொண்டு அறி­வ­ழ­கனை வெளியே இழுத்து சென்று படு­கொலை செய்துவிட்டு தப்பி ஓடி­விட்­டனர்.
‘கண­வரைக் காப்­பற்ற முயன்றபோது என்­னையும் கையில் வெட்­டி­விட்டு, கட்­டி­போட்டு விட்டு சென்­றனர். அவர்கள் எனது நகையை கொள்­ளை­ய­டிக்க வந்­த­வர்கள்’ என மனைவி சுரேகா பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­துள்ளார்.
அதன்­படி பொலிஸார் வழக்கு பதிவு செய்து தீவிர விசா­ரணை நடத்­தினர்.
அப்­போது மனைவி சுரேகா மீது பொலி­ஸா­ருக்கு சந்­தேகம் ஏற்­பட்­டது. இதற்­கி­டையே அறி­வ­ழகன் மகள் சாத­னா­விடம் பொலிஸார் வீட்­டுக்கு யார் யார் வரு­வார்கள் என கேட்­டனர்.
அப்­போது சாதனா “எதிர்வீட்டு அங்கிள் அடிக்­கடி வீட்­டிற்கு வந்து அம்­மாவை பார்ப்பார். பின்னர் அம்­மாவை அங்கிள் கட்­டிப்­பி­டித்து முத்தம் கொடுத்­து­விட்டு செல்வார்” என கூறி­யுள்ளார்.
இதனால் சுரேகா மீது சந்­தேகம் வலுத்­தது. அறி­வ­ழகன் வீட்டினருகில் வசிக்கும் நபர்கள் குறித்து பொலிஸார் விசா­ரணை நடத்­தினர். அப்­போது கண­பதி (32) என்ற வாலிபர் சம்பவம் நடந்த தினத்தில் இருந்து மாய­மாகி இருந்­தமை தெரி­ய­வந்­தது.
பின்னர் பொலிஸார் அவ­ரது செல்போன் எண்ணை வைத்து கண­பதியை கைது செய்து தீவிர விசா­ரணை நடத்­தினர். அப்­போது சுரே­கா­வுக்கும் கண­ப­திக்கும் இடையே கடந்த ஓராண்­டாக கள்­ளக்­காதல் இருந்­தமை தெரி­ய­வந்­தது.
கள்­ளக்­காதல் விவ­காரம் அறி­வ­ழ­க­னுக்கு தெரிந்­ததால் சுரே­காவை கண்­டித்­துள்ளார்.
இதனால் ஆத்­தி­ர­ம­டைந்த சுரேகா கணவர் அறி­வ­ழ­கனை கொலை செய்ய திட்டம் திட்டி அதன்­படி படு­கொலை செய்­துள்­ளமை விசா­ர­ணையில் தெரி­ய­வந்­தது.
இது குறித்து கள்­ளக்­கா­தலன் பொலி­ஸா­ரிடம் அளித்த வாக்­கு­மூ­லத்தில், அறி­வ­ழகன் வீட்டின் எதிரே எங்கள் வீடு என்­பதால் நான் அடிக்­கடி சுரே­காவை பார்த்து சிரிப்­பது வழக்கம்.
அவளும் என்னைப் பார்த்து சிரிப்பாள். பின்னர் நாள­டைவில் சுரேகா பண்­டிகை நாட்­களில் ஏதேனும் சமைத்தால் எங்கள் வீட்டுக்கு கொடுப்­பது வழக்கம். அப்­போது எனக்கும் தனி­யாக கொடுப்பாள். இதனால் எனக்கு சுரேகா மீது காதல் வந்­தது.
ஒருநாள் எங்கள் வீட்டில் யாரும் இல்லை. அப்­போது சுரேகா எங்கள் வீட்­­டுக்கு வந்தாள். அப்­போது நான் மட்டும் தனி­யாக இருந்தேன். இந்த சந்­தர்ப்­பத்தை பயன்­ப­டுத்தி நான் சுரே­கா­விடம் என் காதலை கூறினேன்.
அப்­போது எனக்கு திரு­மணம் ஆகி மகள் உள்ளார் என கூறினாள். அதற்கு நான் உன்னை திரு­மணம் செய்து கொண்டு மக­ளையும் என் மகள் போல் வளர்ப்பேன் என கூறினேன்.
அதற்கு எதுவும் பேசாமல் சுரேகா சென்று விட்டார். ஒரு வாரம் என்னை பார்க்­காமல் சுரேகா தவிர்த்து வந்தார்.
அறி­வ­ழகன் வேலைக்கு சென்றால் நள்­ளி­ரவு 1 மணிக்கு மேல் தான் வீட்­டிற்கு வருவார் என்­பதால் நான் ஒருநாள் இரவு 11 மணிக்கு சுரேகா வீட்டுக்குச் சென்றேன்.
அப்­போது கதவை திறந்த சுரேகா நீ ஏன் இங்கு வந்தாய் என்று திட்­டினாள். உட னே நான் உன்னை பார்க்க வந்தேன் என கூறினேன். யாரா­வது பார்த்தால் பிரச்­சி­னை­யாகும், நீ சென்று விடு என கூறினாள்.
உடனே சுரே­காவை கட்டி அணைத்தேன். அப்­போது சுரேகா எதிர்ப்பு தெரி­விக்­காமல் இருந்­ததால் அன்று நாங்கள் இரு­வரும் உல்லா­ச­மாக இருந்தோம்.
பின்னர் தினமும் நான் இரவு 11 மணியில் இருந்து 12 மணி வரை சுரேகா வீட்டில் தான் இருப்பேன். இந்த விஷயம் அறி­வ­ழ­க­னுக்கு தெரி­ய­வந்­தது. இதனால் என்­னையும் அவர் கண்­டித்தார்.
ஆனாலும் எங்கள் நட்பு தொடர்ந்­தது. இதற்­கி­டையே புத்­தாண்டு தினத்தில் நாங்கள் இரு­வரும் ஒன்­றாக இருந்­ததை அறி­வ­ழகன் பார்த்து விட்டார். இதனால் எங்­க­ளுக்குள் பிரச்­சினை வந்­தது.
அறி­வ­ழகன் என்னை கொலை செய்து விடுவேன் என மிரட்­டினார். இதனால் என்னை கொலை செய்­வ­தற்கு முன் அறி­வ­ழ­கனை கொலை செய்ய நானும் சுரே­காவும் திட்டம் போட்டோம்.
அதன்­படி நேற்று முன்­தினம் இரவு நான் நண்­பர்கள் இரண்டு பேருடன் வந்து அறி­வ­ழ­கனை வாயை பொத்தி வீட்டினருகே உள்ள முட்டுசந்தில் இழுத்து வந்து படு­கொலை செய்தோம்.
பொலி­ஸா­ருக்கு சந்­தேகம் வராத வகையில் சுரேகா கையில் வெட்டு காயங்­களை ஏற் mபடுத்தி அவ­ரது கை மற்றும் கால்­களை கட்­டி­ப்போட்­டு­விட்டு சென்று விட்டோம். இவ்வாறு கணபதி வாக்குமூலத்தில் கூறியதாக பொலி­ஸார் தெரிவித்தனர்.
இதையடுத்து சுரேகா மற்றும் கள்ளக்காதலன் கணபதி மற்றும் கொலை சம்ப வத்தில் ஈடுபட்ட கணபதியின் நண்பர்கள் இருவரென 4 பேரையும் பொ­லிஸார் கைது செய்தனர்.