Home அந்தரங்கம் உறவின்கொள்ளும்போது எல்லா ஆண்களும் இந்த தவறுகளை செய்கிறார்களாம்… இனி திருத்திக்கலாமே!…

உறவின்கொள்ளும்போது எல்லா ஆண்களும் இந்த தவறுகளை செய்கிறார்களாம்… இனி திருத்திக்கலாமே!…

38

உடலுறவில் ஈடுபடும் போது நம்மையே அறியாமல், நமக்கே தெரியாமல் நாம் பல தவறுகளில் ஈடுபடுகிறோம். இது, தெரியாமல் நடக்கும் தவாற இருந்தாலும் சரி, உணர்ச்சியின் உச்சத்தில் அறிந்தே செய்தாலும் சரி, இதனால் பெரும்பாலும் பாதிக்கப்படுவது பெண்கள் தான்.

உடல் ரீதியாக மட்டுமின்றி, மனம் ரீதியாகவும் சில செயல்கள் பெண்களை தர்மசங்கடமாக உணர வைக்கும். எனவே, முடிந்த வரை உடலுறவில் ஈடுபடும் போது, இந்த ஒன்பது தவறுகள் ஏற்படாதவாறு ஆண்கள் நடந்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

உடலுறவில் ஈடுபடும் போது, உடலோடு இணைவதில் மட்டுமே ஈடுபாடு, நாட்டம் செலுத்துவது தவறு. சில ஆண்கள், உடலுறவில் மட்டும் நாட்டம் செலுத்தி, ஏனைய முத்தமிடுதல், கட்டி தழுவுதல் போன்றவற்றில் கோட்டைவிடுவது தவறு. முழுமையான இன்பம் அடையாமல் இருப்பதற்கு இதுவும் ஓர் காரணமாகும்.

உங்கள் துணை ஆயத்தம் ஆவதற்கு முன்னரே நீங்கள், தாம்பத்தியத்தில் ஈடுபட முயல்வது. அவர்களுக்கு அசௌகர்யமான உணர்வை அளிக்கலாம். எனவே, பொறுமையாக செயலபட வேண்டியது அவசியம்.

துணை என்பதையும் தாண்டி வெறும் அந்தரங்க உறுப்புகளுடன் மட்டும் உறவு கொள்ளுதல். பேசுவதை, தவிர்த்து, உணர்வுகளைப் பரிமாறிக் கொள்வதை தவிர்த்து, வெறுமனே உறவில் மட்டும் ஈடுபடுவது தவறு.

உங்கள் துணை மீது உங்களது முழு எடையை செலுத்துவது மிகவும் தவறு. இது, அவர்களை சரிவர உறவில் ஈடுபட முடியாமல் போக செய்யும்.

மிக வேகமாக உச்சம் காண்பதும், மிக தாமதமாக உச்சம் காண்பதும் என இரண்டும் உறவின் இன்பத்தை குறைக்கலாம். எனவே, உறவில் ஈடுபடும் போது முடிவை சரியான நேரத்தில் முடிக்க வேண்டியது அவசியம். இல்லையேல், இருவருக்குமே கூட அலுப்பு நேரிட வாயப்புகள் உண்டு.

உடலுறவில் ஈடுபடும் போது, விந்து வெளிப்படும் முன்னரே துணையிடம் கூறாமல் இருப்பதும் பெரும்பாலான ஆண்கள் செய்யும் தவறாகும்.

ஏதோ, ஆபாசப்படத்தில் ஈடுபடுவது போன்று, உங்கள் துணையிடம் உடலுறவில் ஈடுபடுவது ஆண்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய தவறு.

உறவில் ஈடுபட்டு முடித்த பிறகு அமைதியாக இருப்பது தவறு. ஆம், பெண்களுக்கு உறவில் ஈடுபட்ட பிறகு, பேசுதல், கொஞ்சுதல் தான் உச்சம் அடைய வைக்கும். இதை தவிர்ப்பது தவறு.

மெஷின் போல, உணர்வின்றி உடலுறவில் ஈடுபடுதல். அல்லது வெறும் செக்ஸிர்காக மட்டும் துணையை பயன்படுத்திக் கொள்வது மிகப்பெரிய தவறு. இது உறவில் விரிசல் ஏற்பட முக்கிய காரணமாக அமையும்.