Home சமையல் குறிப்புகள் உருளைக்கிழங்கு மோர் குழம்பு

உருளைக்கிழங்கு மோர் குழம்பு

17

safe_image-1-8-300x156தேவையான பொருட்கள் :
தனியா – 2 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
மிளகு – 1 தேக்கரண்டி.
பச்சை மிளகாய் – 2
இஞ்சி – சிறிய துண்டு
கடுகு – அரை தேக்கரண்டி.
கடலைப்பருப்பு – 1 தேக்கரண்டி
அரிசி – 1 தேக்கரண்டி
தண்ணீர் – ¼ கப்
உருளைக்கிழங்கு – 4
மோர் அல்லது தயிர் – 1½ கோப்பை
கொத்தமல்லை தழை – சிறிதளவு
நீர் – ½ கப்
துருவிய தேங்காய் – ¼ கப்
உப்பு – சுவைக்கு
தாளிக்க :
ஆயில் – 2 தேக்கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி
வெந்தயம் – ½ தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
ஓமம் – ½ தேக்கரண்டி
செய்முறை :
* உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து வைக்கவும்.
* தயிரில் அரை கப் தண்ணீர் ஊற்றி நன்றாக கடைந்து கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் தனியா, சீரகம், மிளகு, ப.மிளகாய், இஞ்சி, கடுகு, கடலைப்பருப்பு, அரிசிபோட்டு அதில் கால் கப் தண்ணீர் ஊற்றி 1 மணி நேரம் ஊற வைத்து தேங்காய் சோர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.
* கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் சிறிது எண்ணெய் ஊற்றி அரைத்த விழுதை போட்டு நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
* அடுத்து அதில் கடைந்த மோர் ஊற்றி அதில் வேக வைத்த உருளைக்கிழங்கை துண்டுகளாக வெட்டி போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து கொதிக்க விடவும். கொதிக்க ஆரம்பிக்கும் போது உப்பை சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.
* மற்றொரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி
கடுகு, வெந்தயம், ஓமம், கறிவேப்பிலை போட்டு தாளித்து அதை மோர் கலவையில் கொட்டவும்.
* கடைசியாக கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.